பள்ளி கட்டணத்தை முறைப்படுத்தும் மசோதா
பள்ளிகளில் கட்டாய நன்கொடை மற்றும் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த, சட்ட மசோதாவை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார். இம்மசோதா ஜூலை 21ம் தேதி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, பீட்டர் அல்போன்ஸ் (காங்.,), சண்முகம் (அ.தி.மு.க.,), மணி (பா.ம.க.,), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதலளித்தார். ‘குழுக்கள் போட்டு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சட்டம் நடைமுறைக்கு வராததால் பலன் இல்லை. எனவே, உரத்த சிந்தனைக்கு பிறகு இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். பின் மசோதா நிறைவேற்றப்பட்டது.