அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு
சென்னை: நாடு முழுதும் விஜயதசமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எல்.கே..ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் சேர்ப்பது வழக்கம்.தனியார் பள்ளிகள் போல், அரசு பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தவும், 9ம் வகுப்பு வரை புதிய மாணவர்களை சேர்க்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.