உள்ளூர் செய்திகள்

மன்னர் கல்லுாரி நாள் விழா

திருப்பரங்குன்றம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது. தலைவர் விஜயராகவன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் ராஜகோபால், செயலாளர் ஸ்ரீதர், துணை தலைவர்கள் ஜெயராம், சம்பத், உதவி செயலாளர்கள் சுரேந்திரன், ரங்கராஜ், பொருளாளர் ஆழ்வார்சாமி முன்னிலை வகித்தனர். வரலாற்றுத் துறை தலைவர் பிறையா வரவேற்றார். ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரன், வழக்கறிஞர் சாமிதுரை பேசினர். வரலாற்றுத் துறை மாணவர் ரூபன் திலக், கணிதத்துறை மாணவி ஹரிணிக்கு சிறந்த மாணவர்களுக்கான விருது, ஆங்கிலத் துறை மாணவர் வெங்கட்ராகவன், கணிதத் துறை மாணவி ரேஷ்மாவுக்கு சிறந்த காஸ்மோ பாலிடன் விருது வழங்கப்பட்டது.அனைத்து துறைகளையும் சேர்ந்த 46 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பேராசிரியர் சிந்து நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்