உள்ளூர் செய்திகள்

பட்ஜெட்: தென் மாவட்டம் 1 லட்சம் புத்தகங்களுடன் நெல்லையில் நுாலகம்

சென்னை: மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மேம்பட்ட வசதிகளுடன் புதிய நூலகங்கள் அமைக்கப்பட உள்ளது.*பொதுமக்கள் பயன் பெறும் வகையிலும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன் பெறும் வகையிலும், தலா ஒரு லட்சம் புத்கங்கள் மற்றும் மாநாட்டு கூடம் உள்ளிட்ட வசதிகளுடன், திருநெல்வேலியில் நுாலகம் அமைக்கப்படும்.*சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில், புதிதாக கலை, அறிவியல் கல்லுாரி திறக்கப்படும்.*மதுரை மாவட்டம் மேலுாரில், காலணி தொழிற்பூங்கா அமைக்கப்படும்*துாத்துக்குடி மாவட்டத்தில், செயற்கை இழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.*கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலையில், 1,000 மெகா வாட் திறனில், நீரேற்று மின் திட்டம், பொது - தனியார் பங்கேற்புடன் உருவாக்கப்படும்.*மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை இடையே, 11,368 கோடி ரூபாயில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசின் மூலதன பங்களிப்பு பெற அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும், பணிகள் துவக்கப்படும்*திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், 'ரோப்வே' எனும் உயர் போக்குவரத்து அமைப்பினை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஆராயப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்