உள்ளூர் செய்திகள்

பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்து 24 மாணவருக்கு மூச்சு திணறல்

பெரம்பலுார்: அரியலுார் மாவட்டம், தேளூர் கிராம அரசு உயர்நிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளி ஆய்வகத்தில் இருந்த ஒரு கம்ப்யூட்டர் நேற்று திடீரென வெடித்தது. இதில், ஏற்பட்ட புகை அந்த வகுப்பறையில் பரவியதால், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியர், 24 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.பாதிக்கப்பட்ட மாணவ - மாணவியரை, அரியலுார் அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அனுப்பி, சிகிச்சை அளித்தனர்.போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் ரத்தினசாமி, எம்.எல்.ஏ., சின்னப்பா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர். மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்