உள்ளூர் செய்திகள்

பிரிட்டனில் இருந்து பிரியும் 3 நாடுகள்?

லண்டன்: பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் செயல்படும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகளின் தலைவர்கள், பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லும் பிரகடனத்தை கூட்டாக வெளியிட உள்ளனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவை தனி நாடுகளாக வகைப்படுத்தப்பட்டாலும், அவை பிரிட்டன் அரசியலமைப்பின் கீழ் வருகின்றன.தற்போது இந்த நாடுகளில், பிரிவினை ஆதரவு கொள்கை கொண்ட கட்சிகள் ஆட்சியில் உள்ளன. வேல்சில், பிளெய்ட் சிம்ரு கட்சி மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.ஸ்காட்லாந்தில், எஸ்.என்.பி., கட்சியும், வடக்கு அயர்லாந்தில், சின் பெயின் கட்சியும் முக்கிய அரசியல் சக்திகளாக உள்ளன. இதனால், மூன்று நாடுகளின் தலைவர்களும் அரசியல் மாற்றம் தொடர்பாக ஒருங்கிணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. வேல்ஸ் தலைநகர் கார்டிப் நகரில் இன்று நடக்கும் கூட்டத்தில், மூன்று நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.அப்போது, பிரிட்டனில் இருந்து பிரிவது குறித்த பொது ஓட்டெடுப்பு நடத்தும் உரிமையை கோரும் கூட்டு பிரகடனத்தில், அவர்கள் கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்