சட்டக்கல்லூரி மாணவி உட்பட 5 மாணவ, மாணவியர் கைது
மதுரை : தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதுரையில் உண்ணாவிரதம் இருந்து வரும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி, உட்பட 5 மாணவ, மாணவியர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் மாணவர்களின் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பதாக போலீசார் உத்தரவாதம் அளித்தனர்.கைது சம்பவத்தையடுத்து மேலும் 7 மாணவர்கள் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளனர்.