ஆசிரியர்கள் பொதுக்குழு கூட்டம்
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர்கள் கழக மாவட்ட கிளை பொதுக் குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது.பெரியதம்பி செயல் அறிக்கை வாசித்தார். நிர்வாகிகள் பார்த்தசாரதி, ராஜகோபால், ரோஹினி தேவி, ஆனந்தன் பங்கேற்றனர். மூத்த பேராசிரியர் அனந்த கிருஷ்ணன் 80 வயது நிறைவு, கழக நிறுவனர் நரசிங்கன் நினைவு கருத்தரங்கு நடந்தது. பேராசிரியர் பெருமாள் நன்றி கூறினார்.