உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் நிலவேம்பு கசாயம்

திருப்புத்துார்: திருப்புத்துாரில் அரசு மருத்துவமனை சித்தா மருத்துவதுறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.திருப்புத்துாரில் பரவலாக குளிர்நிலவுவதை அடுத்து காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க அறிவுறுத்தியுள்ளார்.சித்த மருத்துவர் பாக்கியலட்சுமி தலைமையில் மருந்தாளர் ரவிச்சந்திரன், பணியாளர் புனிதா அரசு மருத்துவமனையில் நிலவேம்பு கசாயம் வழங்கினர். முதற்கட்டமாக பார்வையிழந்தோர் பள்ளி மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் டி.இ.எல்.சி. துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்