நுால் வெளியீட்டு விழா
சிவகங்கை: சிவகங்கை வரலாற்று ஆய்வரங்கம் நீந்தும் மீன்கள் வெளியீட்டகம் சார்பில் முத்துவடுகநாதத்தேவர் மாண்பும் மரணமும் நுால் வெளியிட்டு விழா பாரதி இசைக் கல்விக் கழகத்தில் நடந்தது.முத்துப்பாண்டியன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆசிரியர் தவமணி ஞானப்பிரகாசம் நுாலை வெளியிட்டார். ரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் நுாலை அறிமுகப்படுத்தி பேசினார். முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம்பேசினார். வரலாற்று ஆய்வரங்க செயலாளர் நுாலாசிரியர் குருசாமி மயில்வாகனன் ஏற்புரை பேசினார். பாரதி இசைக் கல்வி கழக யுவராஜ் நன்றி கூறினார்.