உள்ளூர் செய்திகள்

இலக்கிய போட்டிக்கு தயாரா!

திருப்பூர்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், திருப்பூர் மாவட்ட அளவில், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்களுக்கு, வரும் ஜனவரி 9ம் தேதியும்; கல்லுாரி மாணவர்களுக்கு 10ம் தேதியும் போட்டி நடைபெற உள்ளது. மாணவர்கள், படிவத்தை பூர்த்தி செய்து, பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது கல்லுாரி முதல்வர், துறை தலைவரின் பரிந்துரையுடன், தமிழ் வளர்ச்சித்துணை இயக்குனர் அலுவலகத்தில் வழங்கவேண்டும்.ஒவ்வொரு பள்ளி, கல்லுாரியிலிருந்தும், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில், போட்டிக்கு ஒருவர் வீதம் மூன்று மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டி துவங்குவதற்கு முன், தலைப்பு வழங்கப்படும். முதல் பரிசு 10 ஆயிரம்; இரண்டாம் பரிசு 7 ஆயிரம்; மூன்றாம் பரிசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்