உதவித்தொகையுடன் ஆராய்ச்சி வாய்ப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜனவரி 2025 அமர்வில் பகுதி மற்றும் முழு நேர ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.படிப்புகள்:பிஎச்.டி., எம்.எஸ்.,- ஆராய்ச்சிஎம்.எஸ்., மற்றும் பிஎச்.டி., துறைகள்: பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை, கட்டடக்கலை, அறிவியல் மற்றும் கலை.உதவித்தொகை: தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் 31 ஆயிரம் ரூபாய் மற்றும் தங்குமிட செலவினங்கள் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.விண்ணப்பிக்கும் முறை: https://cfr.annauniv.edu/jan25/ எனும் இணையதளம் வாயிலாக மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு படிப்பிற்கும் பிரத்யேகமாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 28விபரங்களுக்கு: www.annauniv.edu