எப்.பி.எம்., படிப்பு
ஹைதராபாத்தில் செயல்படும் மத்திய அரசு நிறுவனமான 'இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் எண்டர்பிரைஸ்' கல்வி நிறுவனம், 'பெல்லோ புரோகிராம் இன் மேனேஜ்மென்ட் - எப்.பி.எம்.,' எனும் ஆராய்ச்சி படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தகுதிகள்: மேனேஜ்மெண்ட், எக்னாமிக்ஸ், காமர்ஸ் போன்ற பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டப்படிப்பை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 5 ஆயிரம் வார்த்தைகளுக்கு குறையாமல் ஆராய்ச்சி முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும். ஆராய்ச்சி முன்மொழிவு மற்றும் நேர்காணல் அடிப்படையில், தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.ஆராய்ச்சி பிரிவுகள்: எக்னாமிக்ஸ் அண்டு பிசினஸ் என்விரான்மெண்ட், ஆப்ரேஷன்ஸ், ஐ.டி., அண்டு சிஸ்டம்ஸ், அனலிட்டிக்ஸ், ஹுமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங், பினான்ஸ் அண்டு அக்கவுண்டிங்.உதவித்தொகை: முதல் மற்று இரண்டாம் ஆண்டில் மாதம் 30 ஆயிரம் ரூபாயும், 3ம் மற்றும் 4ம் ஆண்டில் மாதம் 35 ஆயிரம் ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இவைதவிர, மானியமாக ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 30விபரங்களுக்கு: www.ipeindia.org