மே 14 பிளஸ் 1 ரிசல்ட்
சென்னை: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியிடப்படுகிறது.அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:மார்ச் மாதம் நடைபெற்ற பதினின்றாம் வகுப்பி பொதுத் தேர்வு முடிவுகள் மே 14 (செவ்வாய் கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in/ www.tnresults.nic.in/www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக, தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.