பிளஸ் 2 தேர்வு 27 கைதிகள் தேர்ச்சி
கோவை: பிளஸ் 2 தேர்வுகள் நேற்று வெளியான நிலையில், கோவை மத்திய சிறையில் தேர்வில் பங்கேற்ற 27 கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தண்டனை பெற்று சிறையில் இருக்கும் கைதிகள் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருப்பதை சிறைத்துறை அதிகாரிகள், கல்வியாளர்கள் பாராட்டியுள்ளனர்.