பிளஸ் 2 துணைத்தேர்வு 666 பேர் விண்ணப்பம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கான துணைத்தேர்வு வரும் ஜூன் 29ம் தேதி தொடங்குகிறது.இதற்கான விண்ணப்பக் கால அவகாசம் முடிந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 666 மாணவர்கள் இத்துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.விண்ணப்பித்த இந்த மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளன.