உள்ளூர் செய்திகள்

10ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 558 பேர் ஆப்சென்ட்

திண்டுக்கல்: மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆங்கிலத் தேர்வில் பங்கேற்க 24 ஆயிரத்து 411 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 378 பேர் என மொத்தம் 24 ஆயிரத்து 789 பேர் தேர்வு எழுத ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டு இருந்தது.இதில் 23,705 மாணவர்கள், தனித்தேர்வர்களில் 348 பேர் என மொத்தம் 24,053 பேர் தேர்வு எழுதினர். 531 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 27 பேர் என 558 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்கள் 175 பேர், தனித்தேர்வர்கள் மூவர் என 178 பேர் மொழிப்பாடமாக ஆங்கிலத்தை தேர்வு செய்தவர்கள் நேற்று தேர்வை எழுதியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்