உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அச்சா அச்சா என்கிறார்; ஒன்றும் புரியலே: டில்லியில் அமைச்சர் துரைமுருகன் ஏக்கம்

அச்சா அச்சா என்கிறார்; ஒன்றும் புரியலே: டில்லியில் அமைச்சர் துரைமுருகன் ஏக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

''தமிழகத்தின் நதிநீர் பிரச்னைகளை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்து விளக்கியபோது, 'அச்சா... அச்சா' என்று தான் சொல்கிறார். அவரது பதில் ஏதும் எங்களுக்கு புரியவில்லை,'' என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

புதியவர்கள்

டில்லியில் நேற்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்து பேசிய பின், நிருபர்களிடம் கூறியதாவது: புதிய ஆட்சி அமைந்துள்ளதால், ஏற்கனவே இருந்தவர் மாற்றப்பட்டு புதிய அமைச்சர் வந்துள்ளார். இவர்கள் இந்த விவகாரத்துக்கு புதியவர்கள்; நமக்கும் புதியவர்கள். அதனால், அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். மரியாதை நிமித்தமாக சந்திக்க வேண்டும். அதற்காக வந்தேன் என்றாலும், 'நான் துரைமுருகன்... நலம்... நீங்கள் நலமா' என்று கேட்பதை காட்டிலும், எங்களுடைய பிரச்னையை அவர்களிடம் கூற நினைத்தோம். காவிரி, கடல் ஆழம் கண்டவர் கூட தீர்வு காண முடியாத பிரச்னை. முல்லை பெரியாறு அணையும் பிரச்னை. இந்த பிரச்னைகளை தெளிவாகக் கூறினோம். எல்லாவற்றையும் அமைச்சர் கேட்டார். ஆனால், அவர் அளித்த பதில் தான் எங்களுக்கு எதுவும் புரியவில்லை. 'அச்சா அச்சா...' என்று தான் பேசுகிறார். அருகிலிருந்த இணையமைச்சர் சோபண்ணாவும் ஹிந்தி. பீஹாரைச் சேர்ந்த மற்றொரு இணையமைச்சரும் ஹிந்தி. அப்புறம் எப்படி புரியும்? எனக்கு சளி பிடித்து இருப்பதால், நம் செயலர் தான் அனைத்தையும் விளக்கி பேசிக் கொண்டிருந்தார்.

சந்திப்பு திருப்தியில்லை

இருப்பினும், நான், 'கர்நாடகாவில் மழை பெய்ததால், இப்போதைக்கு பிரச்னை இல்லை. ஆனால், வரும் நாட்களில் தண்ணீர் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டால் வந்து விடுவேன்' என்று மட்டும் கூறி வைத்தேன்.நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின்படி, ஒரு ஆண்டு கூட தண்ணீர் தமிழகத்துக்கு வரவில்லை என்றேன். இணையமைச்சர் சோமண்ணா மட்டும், 'உங்கள் நண்பர் தானே சித்தராமையா; அவரிடம் கேட்கலாமே' என்றார். நானோ, 'தாயும் பிள்ளையுமாக இருந்தாலும், வாயும் வயிறும் வேறு அல்லவா' என்றேன்.இந்த சந்திப்பில் பிரச்னைகளை நாங்கள் பேசினோம்; அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. மற்றபடி, வந்தோம்; சந்தித்து விட்டு செல்கிறோம். அவ்வளவு தான். மொத்தத்தில் சந்திப்பு திருப்திகரமாக இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

N Annamalai
ஆக 01, 2024 15:28

கர்நாடக முதலவர் தமிழ் பேசுவார் .அவரிடம் சென்று பேசினால் என்ன .உங்கள் வீட்டில் இருந்து முன்னேறு மணி நேரம் காரில்


Narayanan
ஜூலை 30, 2024 13:50

துரைமுருகன் ஒரு பேட்டியில் அவரே டெல்லிக்கு போகிறவனுக்கு ஆங்கிலம் /ஹிந்தி தெரிந்திருக்கவேண்டும். அப்படியில்லை என்றால் அங்கு போவது தண்டம் என்று. பின்னர் எதற்கு இப்படி பேசி ஒரு அசிங்கத்தை அரங்கேற்றுகிறார். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவருக்கு "அச்சா" என்ற சொல்லுக்கு ரத்தம் தெரியவில்லை என்றால் இவரும் தண்டம்தான்


Raa
ஜூலை 30, 2024 12:18

இப்படியே வெட்டி அரசியல் செய்யுங்கள். உருப்படும் தமிழ்நாடு


R Ravikumar
ஜூலை 27, 2024 09:37

ஹிந்தி படிங்க


cbonf
ஜூலை 26, 2024 21:04

ஆங்கிலத்தில் என்ன நீர் பெரிய வித்துவானோ? ஆங்கிலமும் தெரியாது. ஹிந்தி படிக்கமாட்டீர்கள். நீங்கள் எல்லாம் ஏன் மந்திரி ஆகி நாட்டின் பணத்தை வீணடிக்கிறீர்கள் ?


C.SRIRAM
ஜூலை 26, 2024 19:44

இந்த மண்ணாங்கட்டிக்குத்தான் ஹிந்தி படிக்கவேண்டும் என்பது . ஆங்கிலமாவது தெரியுமா தெரியவில்லை.


Ramesh Sargam
ஜூலை 26, 2024 18:28

அதுபோகட்டும். கேன்டீன் சாப்பாடு எப்படி இருந்தது?


ஆரூர் ரங்
ஜூலை 26, 2024 14:31

ராகுல் கங்கை காவிரி இணைப்பை எதிர்க்கிறாரே. அவரையும் சந்தித்து மனு கொடுத்தா என்ன? ( அவர் இங்கிலீசுல் பேசினாலும் அவருக்கே புரியாது)


sridhar
ஜூலை 26, 2024 14:00

இனியாவது ஹிந்தி படிக்க விடுங்கள்


sridhar
ஜூலை 26, 2024 14:00

ஐயா யாரோ சொன்னாங்களே ஹிந்தி தெரியாது போடா யாரு காரணம் இப்போவது புரியுதா என்னத்த சொல்ல


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை