உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., மாநாட்டுக்கும் இப்படி கேள்விகள் கேட்பரா?: சீமான்

தி.மு.க., மாநாட்டுக்கும் இப்படி கேள்விகள் கேட்பரா?: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:விஜய் மாநாடு நடத்த அனுமதி தருவதற்கு, 21 கேள்விகளை, போலீசார் கேட்டுள்ளனர். தி.மு.க., மாநாடுகள் நடத்தும்போது, இப்படித் தான் கேள்விகள் கேட்கப்பட்டனவா?பெண்கள், குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது; எவ்வளவு பேர் வருவர் என்றும் கேட்டுள்ளனர். இது தேவையற்றது. உரிய ஏற்பாடுகள் இல்லாமல், மாநாட்டை யாரும் நடத்த மாட்டர்.மாநாட்டை, வரும் 23ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காலம் தாழ்த்த வேண்டும் என்பதற்காக, போலீசார் இவ்வாறு செய்கின்றனர். மாநாட்டில் கட்சி கொள்கை, கோட்பாடுகளை அறிவித்து தலைவர் உரையாற்றுவது தான் சிறப்பாக இருக்கும்.எனவே, மாநாட்டில் மற்ற கட்சி தலைவர்கள் பங்கேற்பது, அவ்வளவு நன்றாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mr Krish Tamilnadu
செப் 05, 2024 10:22

அடக்குமுறையின் வலியை உணர்த்தி, அத்துமீறலை ஊக்குவிக்கிறார்கள் போலும். எதுவுமே விதிகளுக்கு உட்பட்டு செய்ய முடியாது என்பதை விரைந்து புரிய வைக்கிறார்கள். அஷ்டமியில் ஆரம்பித்த கட்சி அனைத்துவித தொல்லைகளையும் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்.


muthu
செப் 05, 2024 09:12

Seeman How much income Tax paid by you to give salary of IPS Varun as claimed by you .Let TN public know this


V RAMASWAMY
செப் 05, 2024 09:10

விஜய் தி மு கவுடன் கூட்டணி என்று அறிவித்தால், உடன் அனுமதி வழங்கப்படும், கேள்விகளும் கேட்கப்படமாட்டாது. சீமான் அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்.


முக்கிய வீடியோ