வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தெருவில் கழைக்கூத்தாடி பெண்கள் கையில் 6 மாத குழந்தை, கர்ப்பவதி, யாசகம் கேட்கும் 4 வயது பெண் குழந்தை என சுற்றி வருகிறார்கள். பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு மக்கள்தான் போன் செய்யவேண்டுமா? எல்லா சிக்னலிலும் போலீஸ்காரர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு தெரியாமல் பிச்சைக்காரர்கள் யாரும் பிச்சை எடுப்பதில்லையே? அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி கிடையாதா அல்லது பிச்சைக்காரர்களிடமும் பிச்சை எடுத்து போலீசார் பிழைப்பு நடத்துகிறார்களா?
தயவுசெய்து யாரும் அந்த குழந்தைகள் மீது பரிதாபப்பட்டு, பண உதவி செய்யாதீங்க, ஒட்டுமொத்தமாக நாம் அனைவரும் காசு பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவர்கள் மாற்று வேலை தேடி செல்வதுடன், இது போன்ற குழந்தை கடத்தல்களும் தடுக்கப்படும்.
இந்தியாவில் குழந்தைகள் கடத்தப்படுவது இரண்டு பேருக்காக ... 1. பிச்சைக்காரர்கள் பரிதாபம் தேட 2. அனாதை இல்லங்கள் எண்ணிக்கை கூட்டி காட்டினால் டொனேஷன் அதிகம் கிடைக்கும் .. இந்த இரண்டையும் தடை செய்தால் குழந்தை கடத்தல் பெருமளவில் குறையும்
நாட்டில் பல மாநகரங்களில் கூட இதே நிலைதான். குழந்தைகள் நல வாரியம் என்று எல்லா மாநிலங்களிலும் உள்ளது. அவர்கள் ஏன் அந்த குழந்தைகளை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி உதவி செய்யக்கூடாது.
குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது குற்றம். தண்டனைக்குரியது. ஆனால் சிசுக்களை கஷ்டப்பட வைத்து சம்பாதிக்கும் இத்தகைய செயல்கள் குற்றமாகாதா. அதற்கு தண்டனை இல்லையா. நமது சட்டங்கள் உளுத்துப்போன மரச்சட்டங்களாக இருக்கும்வரை நாடு வளராது. சமுதாயம் முன்னேறாது.
இவர்களிடமும் வசூலித்து விடும் டாஸ்மாக் கழக தொண்டர்களும் , காவலர்களும் என்று ஒரு படமே எடுக்கலாம்
இவங்க குழந்தைகளாக இருக்க வாய்ப்பு அதிகம்... வயிற்றில் ஒன்று இடுப்பில் ஒன்று இருக்கும்... ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஊராக போய் யாசகம் கேட்டு சாப்பிடுவார்கள் இவர்கள் ஆண்கள் துணை இல்லாமல் சுற்றி சுற்றி வருவார்கள் பழைய துணி இருந்தால் கொடுங்கள் என்பார்கள் பார்க்க அழகாக ஒரே மாதிரியான உருவ ஒற்றுமையுடன் அனைவரும் இருப்பார்கள்.....
இந்த பெண்களை விசாரிக்காமல் வெறும் அறிக்கை விடும் காவலர்களுக்கு கமிஷன் எவ்வளவு?
கிடைக்கிற பிச்சையில் 40 பர்சண்ட்.