உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / துறவியர் போல் வாழணும் நீதிபதிகளுக்கு அறிவுரை

துறவியர் போல் வாழணும் நீதிபதிகளுக்கு அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'நீதிபதிகள், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தீர்ப்புகள் குறித்து அவற்றில் கருத்து தெரிவிக்கக் கூடாது. துறவியர் போல நீதிபதிகள் வாழ வேண்டும்; குதிரைகள் போல வேலை செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.மத்திய பிரதேசத்தில் சிவில் நீதிபதிகளாக பணியாற்றிய ஜோதி வர்கடே, சுஸ்ரி சோனாக் ஷி ஜோஷி, சுஸ்ரி பிரியா சர்மா, ரச்சனா அதுல்கர் ஜோஷி, அதிதி குமார் சர்மா, சரிதா சவுத்ரி ஆகிய ஆறு பெண் நீதிபதிகள், செயல்திறன் அடிப்படையில், 2023 நவ., 11ல் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.இவர்களில், அதிதி குமார் சர்மா, சரிதா சவுத்ரி தவிர மற்ற நான்கு பேர், சில நிபந்தனைகளின் அடிப்படையில் கடந்த ஆக., 1ல், மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தால் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர். செயல்திறனில் முன்னேற்றம் இல்லாததால், அதிதி குமார் சர்மா, சரிதா சவுத்ரி ஆகியோருக்கு பணி வழங்கப்படவில்லை என, ம.பி., உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதை எதிர்த்து, அதிதி குமார் சர்மா, சரிதா சவுத்ரி ஆகியோர் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு, நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த வழக்கின் 'அமிகஸ் கியூரி' எனப்படும், நீதிமன்றத்தின் ஆலோசகராக உள்ள வழக்கறிஞர் கவுரவ் அகர்வால், பணிநீக்கத்தை விமர்சித்து, சமூக வலைதளமான 'பேஸ்புக்'கில் பெண் நீதிபதி கருத்து தெரிவித்ததாகக் கூறினார்.இதன்பின், நீதிபதிகள் கூறியதாவது:சமூக ஊடகம் ஒரு திறந்த தளம் போன்றது. அதை பயன்படுத்துவதை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும். மேலும், தீர்ப்புகள் குறித்து சமூக வலைதளத்தில் அவர்கள் கருத்து தெரிவிக்கக் கூடாது.நீதிபதிகள், துறவியரை போல வாழ்க்கையை வாழ வேண்டும்; குதிரையை போல வேலை செய்ய வேண்டும். இத்தனை தியாகங்களை நீதிபதிகள் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 14, 2024 14:18

முதலில் செக் ரிட்டர்ன் வழக்குகளை ஒழுங்காக விசாரிக்க சொல்லுங்கள். பண பலம் அதிகார பலம் ஆள் பலம் இருந்தால் மட்டுமே நீதி மன்றம் செல்ல வேண்டும். இல்லாவிடில் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல். உங்களிடம் பண பலம் அதிகார பலம் ஆள் பலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உங்கள் மூலமாக சுகமாக சம்பாதிக்க போவது வக்கீல்கள் நீதிபதிகள் சாட்சிகள். சில சமயங்களில் உங்கள் எதிராளி கூட நீங்கள் போட்ட வழக்கால் உங்களிடமிருந்தே மறைமுக சம்பாதித்து விடுவார் வக்கீல் மூலமாக. காவல் துறை மூலமாக நீதிமன்ற வழக்கு நீங்கள் தொடுத்தால் மேற்கூறிய மூவருடன் காவல் துறையும் நன்கு சம்பாதித்து விடும். இவர்கள் அனைவருக்கும் படியளந்த புண்ணியம் வேண்டுமானால் உங்களுக்கு கிடைக்கலாம்.


aaruthirumalai
டிச 14, 2024 12:08

நகர பேருந்துகளில் பயணம் செய்ய சொல்லுங்க.


அப்பாவி
டிச 14, 2024 07:28

உபதேசம் புல்லரிக்குது.பேசாம கும்பமேளாவுக்குப்.போய் துறவிகளைப் பிடிச்சு அப்பாயிண்ட்மெண்ட் பண்ணிரலாம்.


சமீபத்திய செய்தி