உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நாக்கை அறுத்து விடுவான்.. ஜாக்கிரதை: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

நாக்கை அறுத்து விடுவான்.. ஜாக்கிரதை: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

வேலூர் : ''தமிழனை நாகரிகம் இல்லாதவன் என்று சொன்னால், நாக்கை அறுத்து விடுவான் ஜாக்கிரதை,'' என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார். வேலுார் மாவட்டம், குடியாத்தம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, மத்திய அரசை கண்டித்து தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்று, அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: ஒரு மாட்டுக்கு நோய் வந்தது; உடம்பெல்லாம் சீழ் வடிந்தது. அந்த மாடுகிட்ட யாரும் போக முடியாத அளவுக்கு நாற்றம் அடித்தது. அந்த மாட்டை ஒரு இடத்தில் ஒருவன் கட்டினான். பின், அந்த மாட்டை யாராவது தொட்டுட்டு வந்தா, 1,000 ரூபாய் கொடுக்கிறேன்னு சொன்னான். ஒருத்தன் மாட்டைத் தொட வேகமாக ஓடினான். போன வேகத்தில் நாற்றம் பொறுக்க முடியாமல் திரும்பி வந்தான். அடுத்து இன்னொருத்தன் போனான். குடல் வெளியே வந்துடும் போலன்னு சொல்லி, திரும்பி விட்டான். இப்படி போய் திரும்பியவன் தமிழ்நாட்டுக்காரன். ஆனால், வட நாட்டுக்காரன் ஒருவன் மாட்டைத் தொடப் போக, மாடு கயிறை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. காரணம், அவனோட நாற்றத்தை மாடால் தாங்க முடியலை. அப்படி நாற்றம் அடிப்பவன் தான் வட நாட்டுக்காரன். அவன் சொல்றான் நம்மைப் பார்த்து நாகரிகமற்றவன்னு... இப்படியெல்லாம் சொல்லப்படுற தமிழன் தான் உலகம் முழுதும் பல நாடுகளை ஆண்டிருக்கிறான்.தமிழன் பற்றி இன்னொன்றும் சொல்றேன். தமிழன் ஒருத்தியோட மட்டும் வாழ்பவன். வட நாட்டுக்காரன் அப்படியல்ல. பத்து பேரு சேர்ந்து ஒருத்தியை கல்யாணம் பண்ணிப்பான். இதுதான் அவனோட நாகரிகம். 5 -10 பேரு சேர்ந்து, ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கலாம். இது தான் வட இந்தியாவோட சட்டம். இப்படிப்பட்ட நாகரிகத்துக்கு சொந்தக்காரன் தான், தமிழனைப் பார்த்து நாகரிகமற்றவன்னு சொல்றான். நாக்கை அறுத்துடுவான் தமிழன். அமைச்சரே ஜாக்கிரதையா இருக்கணும். நாவடக்கம் தேவைன்னு எங்க தலைவர் சொல்லி இருக்காரு. அதனால அமைதியா இருக்கோம். ஆனா, மத்திய அமைச்சருக்கு அதெல்லாம் தெரியலை. நாவடக்கமின்றி பேசுகிறார். அண்ணாதுரை மெல்ல அடிப்பார்; எனக்கு உரசி பார்த்து பழக்கம் இல்லை, ஒதுங்கி போய்தான் பழக்கம். எச்சரிப்பது கருணாநிதியின் பழக்கம். நாக்கை அறுத்து விடுவேன் என்பது ஸ்டாலின் பழக்கம். இந்த விஷயமெல்லாம் மத்திய கல்வி அமைச்சருக்கு தெரியாது. அதனால், அவர் முதலில் வரலாறுகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின், தமிழர்கள், தமிழக எம்.பி.,க்கள் குறித்து பேச வேண்டும். இனியும் அப்படியே பேசிக் கொண்டிருந்தால், அவர் சங்கடங்களை சுமக்க வேண்டும். ராஜாஜி கொண்டு வந்த ஹிந்தியையும், குலக் கல்வியையும் எதிர்த்து அண்ணாதுரையும், ஈ.வெ.ரா.,வும் இணைந்து போராடினர். இப்போது ஸ்டாலின், மத்திய அரசை எதிர்த்து மும்முனை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 48 )

B MAADHAVAN
மார் 18, 2025 22:51

தமிழன் பற்றி இன்னொன்றும் சொல்றேன் என்று சொன்ன அமைச்சர் துரைமுருகன், "தமிழன் ஒருத்தியோட மட்டும் வாழ்பவன்" என்று சொன்னாரே அப்பொழுது அவரது அன்பு தலைவர் தமிழர் அல்ல என்று சொல்லாமல் சொல்ல வருகிறாரா. அடியேனுக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த பேச்சை வடக்கே போய் தைரியமாக ராகுல் ராவுத்தர் மற்றும் அவர்கள் கூட்டாளிகளிடம் சென்று சொல்லவும். துரைமுருகன் அவர்களின் நாக்கும் சேர்ந்து அறுபட்டு போகும்..


konanki
மார் 18, 2025 14:42

அமலாக்க துறை ஊட்டுக்கு ரெய்டு வந்த தினம் ராவோடு ராவா டில்லி ஓடி வடகத்தி காரன் காலில் விழுந்த திராவிடனுக்கு நாக்கை அறுக்கும் தைரியம் இருக்கா??


konanki
மார் 18, 2025 14:37

இந்த பேச்சு தான் திராவிட நாகரிகம்


JEE
மார் 18, 2025 11:13

அநாகரீகத்தின் உச்சத்தை எட்டியுள்ளது இந்த பேச்சு, பிரிவினை பேசும் இவர் கைது செய்ய ப் பட வேண்டும் அநாகரீகமாக பேசும் கலாச்சாரம் அன்று முதல் இன்றைய ஆர் எஸ் பாரதி வரை


c.mohanraj raj
மார் 14, 2025 23:45

தம்பி, இந்திக்காரன் கிட்ட விளையாட வேண்டாம் அவன் எதையும் அறுப்பான்


dhanaraju
மார் 14, 2025 21:14

கருத்து கந்தசாமி தமிழன் இல்லையா?


Anonymous
மார் 14, 2025 19:44

தமிழனை காட்டுமிராண்டி, தமிழ் காட்டுமிராண்டி பாஷைன்னு சொன்ன பெரியார் உங்களுக்கு ஒசத்தி, தலைவன், தலையில தூக்கி வச்சு ஆடுவீங்க, நாக்க அறுத்துடுவான் தமிழன் அப்டின்னு எங்களை ஏன் இழுக்குறீங்க? நாக்கை அறுத்துடுவான் தீமூக்கா காரன்னுஉங்க கூட்டத்தை பத்தி சொல்லி, கூத்தடிங்க, தமிழனை அநாவசியமாக இழுக்காதீங்க.


Savitha
மார் 14, 2025 19:38

பிரசாந்த் கிஷோர் பிறந்த பீஹார் , கன்னியாகுமரிக்கு கீழே, தெற்கு பக்கமாவா இருக்கு? அடடா, இவ்வளவு நாளாக வட இந்தியான்னு இல்ல நினைச்சுட்டு இருந்தேன்.


kumarkv
மார் 14, 2025 18:17

இதில் மாடு கழக மந்திரியா


Rajasekar Jayaraman
மார் 14, 2025 17:13

தமிழனை சொல்லவில்லை கொள்ளை கூட்டத்தை தான் கல்வி அமைச்சர் சொன்னார்.


சமீபத்திய செய்தி