உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூடுதல் கோதுமை கேட்டு கார்டுதாரர்கள் தகராறு: அரசு காசு கொடுத்து வாங்கி வினியோகிக்குமா?

கூடுதல் கோதுமை கேட்டு கார்டுதாரர்கள் தகராறு: அரசு காசு கொடுத்து வாங்கி வினியோகிக்குமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகின்றன. அதன்படி, கார்டுதாரர்கள் தங்களின் அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட எடையில் அரிசிக்கு பதிலாக கோதுமை வாங்கலாம்.சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், கார்டுக்கு, 5 - 10 கிலோ; மற்ற இடங்களில், 5 கிலோ வரை கோதுமை வழங்கப்பட்டது. தமிழகத்தில், 18 - 69 வயது உடையவர்களில், 30 சதவீதம் பேர் ரத்த அழுத்தம்; 18 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. நீரிழிவு நோயாளிகள் உட்பட பலரும், இரவில் சப்பாத்தியை விரும்பி சாப்பிடுகின்றனர்.இதனால், ரேஷனில் அரிசி வாங்காதவர்கள் கூட, கோதுமை வாங்குகின்றனர். மத்திய அரசு கடந்த மாதம் வரை ரேஷனில் வழங்க, தமிழகத்திற்கு 17,100 டன் கோதுமை ஒதுக்கீடு செய்தது. இம்மாதத்தில் இருந்து, 8,576 டன்னாக குறைத்துள்ளது. இதனால் கார்டுதாரர்களுக்கு, 2 கிலோ கோதுமை மட்டுமே வழங்கப்படுகிறது. கோதுமை கிடைக்காத கார்டுதாரர்கள் பலரும், கூடுதல் கோதுமை கேட்டு, ஊழியர்களுடன் தகராறு செய்கின்றனர்.எனவே, நீரிழிவு நோயாளிகளின் மருந்து செலவை குறைக்க, முதல்வர் மருந்தகம் துவக்கியது போல, அரசு பணம் கொடுத்து கோதுமை வாங்கி, மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், 'ஒரு கடையில் கோதுமை வாங்கும், 500 கார்டுதாரர்கள் இருந்தால், 200 பேருக்கு தான் அனுப்பப்படுகிறது''அதுவும் முதலில் வருபவர்களுக்கு வழங்கப்படுவதால், பலர் கோதுமை கிடைக்கவில்லை என்று தகராறு செய்கின்றனர். எனவே, தமிழக அரசு சொந்த நிதியில், கூடுதலாக கோதுமை வாங்கி, கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sivagiri
மார் 11, 2025 17:12

இது த்ராவை , கிளப்பி விடும் ஸீன் , , , அப்பதான் ஐயோ , குறைக்காதே குறைக்காதே கோதுமையை குறைக்காதே - ஏழையின் குரல் கேட்கலையோ ஒன்றியமே , என்று ஒரு கூப்பாடு போட்டு , வாங்கி ஆட்டைய போடலாம் ? . . பின்ன மக்களுக்கு கொடுக்கவா போறாய்ங்க ? ?


Sivagiri
மார் 11, 2025 17:05

என்ன , ரெண்டு கிலோவா , மசாமாசமா ? , தமிழ்நாட்ல எந்த ரேஷன் கடையில் ? . . . ஒரே ஒரு கிலோதான் , அதுவும் புளுத்துப்போன கோதுமை , , ,அதுவும் மாசாமாசம் எல்லோருக்கும் கிடைக்காது , கொஞ்ச பேருக்கு போட்டுட்டு , போங்கம்மா அவளவுதான் , மேல இருந்து வரல-ன்னு விரட்டி . . விட்ருவாய்ங்க , எந்த - மேல இருந்ததுன்னு தெரியல , ஒன்றியம் கொடுக்கிறது ரெண்டு கிலோ . . . அதில் இவிங்க ஒரு கிலோவைகூட ஒழுங்கா போட மாட்றாய்ங்க , . . . இவிங்களாவது காசு குடுத்து வாங்குவாய்ங்களாகும் ? . . . மறுபடியும் - ஐயோ ஒன்றியமே , ஐயோ மோடியே , . . . ஒங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் என்ன கண்ணு தெரியலையா . - ன்னு ஆரம்பிச்சிருவாய்ங்க . . .


Balasubramanian
மார் 11, 2025 15:12

இந்தி பேசத் தெரியாதவர்களுக்கு கோதுமை கிடையாது என்று விளைவிக்கும் மாநிலங்கள் சொல்லி விட்டால்? தமிழர்கள் கதி? உணவு போல் தானே மொழியும், அவரவர் விருப்பம். இதற்கு முதல்வர் என்ன சொல்லப் போகிறார்?


अप्पावी
மார் 11, 2025 09:30

ஹா..ஹா. திராவிடங்க அதிகமா சப்பாத்தி சாப்புட ஆரம்பிச்சுட்டாங்க. பானிபூரியும் நைய சாபுடறாங்க. சமூசா விற்பனை தூள் பறக்குது.சீக்கிரம் இந்தி கத்துக்குவாங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை