உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பேச்சு நடத்த அழைக்க வேண்டும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் அழுத்தம்

பேச்சு நடத்த அழைக்க வேண்டும்; தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் அழுத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

-நமது நிருபர்-

'தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சை துவக்க காங்., குழுவை உடனே அழைக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறியுள்ளார்.டில்லியில் அவர் அளித்த பேட்டி: கடந்த டிச.3ல், தி.மு.க., தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினை, தேர்தலுக்காக தமிழக காங்கிரசில் நியமிக்கப்பட்டிருக்கும் ஐவர் குழுவினர் சந்தித்தோம். அப்போது, கூட்டணி நிலைப்பாடு, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் குறித்து விவாதித்தோம். பின், தொகுதி பங்கீட்டை உடனே மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம்.தி.மு.க., சார்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த விரைவில் குழு அமைக்கப்படும்; குழு அமைந்ததும், காங்கிரசின் ஐவர் குழுவை அழைத்து பேச்சு நடத்துவோம்' என ஸ்டாலின் கூறினார். முதல்வர் ஸ்டாலின் குழு அமைப்பதாகக் கூறி, இரு மாதங்கள் கடந்து விட்டன. ஆனால், குழு அமைக்கப்படவில்லை. இந்நிலையில், எதிர் தரப்பில் கூட்டணி அமைத்து தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக களம் இறங்கி விட்டனர்.தேர்தலுக்கான நாட்கள் நெருங்கும் சூழலில், எங்களை தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்த, தி.மு.க., தரப்பில் அழைக்காமல் இருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், தொகுதி பங்கீடு குறித்து காங்., குழுவை ஸ்டாலின் உடனே அழைக்க வேண்டும். இவ்வாறு கிரிஷ் ஷோடங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rajarajan
ஜன 28, 2026 18:36

வேணாம், அழுதுருவேன் அழுதுருவேன்.


ராமகிருஷ்ணன்
ஜன 28, 2026 17:08

காங்கிரஸ் கட்சி போல ஒரு மானங்கெட்ட கட்சியை உலகில் வேறு எங்கும் கிடையாது. திமுகவின் திமிர் தனத்தை ஏன் சகித்து போகின்றீர்கள் மதியாதார் வாசல் மிதியாதீர் என்று பழமொழி தெரியாதா, அழைத்து பேசுங்க என்று கெஞ்சுகின்றீர்கள்.


Rameshmoorthy
ஜன 28, 2026 13:26

Please take diversion route to panayur


JANA VEL
ஜன 28, 2026 13:12

சீட்டு பேரம் பங்கீடு இருக்கட்டும். சொல்லுங்க . உங்களுக்கு திருநெல்வேலி அல்வா வேண்டுமா இல்லை ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வேண்டுமா ... இப்போவே சொல்லுங்க அப்போ தருவாங்க.


duruvasar
ஜன 28, 2026 09:54

தமிழக பொருளாதார மேம்பாட்டுக்காக அறிவுரை வழங்க ஸ்டாலின் போட்ட 5 நபர் குழுவும், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு செல்லாபெரும்தொகை போட்ட 5 நபர் குழுவையும் தேடி கண்டுபிடிப்வர்களுக்கு பரிசு வழங்கலாம்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜன 28, 2026 11:06

கவலைப்படாதீர்கள் பேச்சு வார்த்தைக்கு ஸ்டாலின் அழைத்தவுடன் காங்கிரஸில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வருவார்கள். மீட்டிங் ஹாலில் உள்ள அதிகப்படியான நாற்காலி மேசைகளை வெளியே எடுத்து போட்டு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வசதியாக அமர்ந்து பேச ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கலாம். அப்போது ஸ்டாலினின் ஐவர் குழு செல்வாவின் ஐவர் குழுவை நீங்கள் காணலாம்.


vaiko
ஜன 28, 2026 09:48

எடுப்பது பிட்சை. மட்டன் பிரியாணியும் சிக்கன் சால்னாவும் போடு என்று பிச்சைக்காரன் சொல்ல கூடாது . பிஹாரில் வேடப்பு மனு நாள் முடியும் வரை இழுத்து அடித்தது யார். 15 இடம்கள் கொடுத்தால் போதும்


Haja Kuthubdeen
ஜன 28, 2026 11:50

15 சீட்டே அதிகம்தான்...அதை சட்டுபுட்டுனு சொல்லிட சொல்லி அவசர படுறாய்ங்க...பிஹாரில் நடந்த மாதிரி 3 நாளைக்கு முந்திதான் திமுக கூட்டணியில் யார் யார் எங்கே போட்டியிடுவார்கள் என்றே முடிவாகும்.அதுவரை நாங்கதான் பலமா இருக்கோம் கூட்டணி பக்கா மாஸ்னு நம்பி கொண்டு காலத்தை கடத்தலாம்.அவசரமே இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை