உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / டில்லி உஷ்ஷ்ஷ்: சுப்ரியாவும், தமிழக அரசியலும்!

டில்லி உஷ்ஷ்ஷ்: சுப்ரியாவும், தமிழக அரசியலும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் என, பல பதவிகளை வகித்தவர் சரத் பவார். 'மஹாராஷ்டிராவின் வலுவான தலைவர்' என, அழைக்கப்படுபவர்.ஆனால், இவருடைய கட்சியை இரண்டாக உடைத்து, பா.ஜ., கூட்டணியில் சேர்ந்து விட்டார், இவருடைய சகோதரர் மகன் அஜித் பவார். நடந்து முடிந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் படு தோல்வியைத் தழுவினார் சரத் பவார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t48a8nyf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே. இவர் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழக அரசியலை நன்கு தெரிந்து வைத்துள்ளார். அத்துடன், 'தி.மு.க., குடும்ப அரசியலில் என்ன நடக்கிறது, குடும்பத்திற்குள் உள்ள பிரச்னைகள்... கட்சிக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள்' என, அனைத்து விஷயங்களையும் அறிந்துள்ளாராம். பல டில்லி பத்திரிகையாளர்கள் சுப்ரியாவை சந்தித்து, தமிழக அரசியலின் உள்குத்து விபரங்களைப் பெற்றுக் கொள்கின்றனராம்.பா.ஜ.,விற்கும் இப்படிப்பட்ட சில தி.மு.க., குடும்ப விபரங்கள் சுப்ரியா வாயிலாக தெரியவந்துள்ளதாம். 'நம் கட்சி விவகாரங்கள் எப்படி சுப்ரியாவிற்கு தெரிய வருகிறது' என சில தி.மு.க., - எம்.பி.,க்கள் நொந்து போயுள்ளனராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

kulandai kannan
டிச 22, 2024 16:02

இரண்டுமே கட்டுமரக் குடும்பங்கள்


ஆரூர் ரங்
டிச 22, 2024 10:35

ஃபுரூட் இவருக்கு நெருக்கம் என்கிறார்கள். ஒரு வேளை மாலையில் ஜூஸ் குடிக்கும் போது தன்னையறியாமல் உள் விஷயங்களை கசியவிட்டிருப்பார்.


ராம்
டிச 22, 2024 10:26

இந்த அம்மாவும் கனி அக்காவும் மிகவும் நெருக்கம்


Balasubramanian
டிச 22, 2024 10:17

திமுக அரசியல்வாதிகளுடன் எந்த மொழியில் பேசினார்? ஆங்கிலத்திலா? இந்தியிலா? அதையும் போட்டு உடையுங்கள் மேடம்!


Sampath Kumar
டிச 22, 2024 08:57

அதாவது தீமுக விவகாரம் மகாராஷ்டிரா காரி தெரியும் அப்படி என்றால் என்ன அர்த்தம்?


Karthik
டிச 22, 2024 07:56

எளியாரை வலியார் தாக்கினால் அதனினும் வலியார் அவரை தாக்குவார்- என்ற சொலவடை நினைவிற்கு வருகிறது.


சமீபத்திய செய்தி