உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கட்சியை ஒருங்கிணைக்காமல் இபிஎஸ் முரண்டு: விடமாட்டோம் என தினகரன், பன்னீர் கைகோர்ப்பு

கட்சியை ஒருங்கிணைக்காமல் இபிஎஸ் முரண்டு: விடமாட்டோம் என தினகரன், பன்னீர் கைகோர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், சசிகலா ஆகியோர் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிட்டு படுதோல்வி அடைந்தன. அதனால், வரும் சட்டசபை தேர்தலுக்காக, கடந்த ஏப்ரல் 11ம் தேதி, அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி அறிவிக்கப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p6x3y58w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அனுமதி இல்லை கடந்த லேக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் இருந்த பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்க்க, பழனிசாமி மறுத்து விட்டார். அப்பா -- மகன் மோதலால், பா.ம.க.,வும் கூட்டணிக்கு வரவில்லை. இதனால், ஐந்து மாதங்களாகியும் அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் வேறு எந்த புதிய கட்சியும் சேரவில்லை. கடந்த ஜூலை 26ல், தமிழகம் வந்த பிரதமர் மோடியை வரவேற்க அனுமதி கேட்டு, பன்னீர்செல்வம் கடிதம் எழுதியும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பன்னீர்செல்வம், கடந்த ஜூலை 31ம் தேதி தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து, தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக, தினகரன் நேற்று முன்தினம் அறிவித்தார். அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை கட்சியில் சேர்க்க, பழனிசாமி தொடர்ந்து மறுத்து வருகிறார். அவர்களை கூட்டணியில் சேர்க்கலாம் என்ற அமித் ஷாவின் யோசனையையும், பழனிசாமி ஏற்கவில்லை. இதனால், வரும் தேர்தலில் தனித்து விடப்படுவோம் என்ற அச்சம், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவுக்கு ஏற்பட்டு உள்ளது. சிக்கல் வரும் எனவே, மூவரும் கைகோர்த்து, பழனிசாமிக்கு எதிராக செயல்பட முடிவு செய்துள்ளதாகவும், அ.தி.மு.க., - - பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்க, விஜயின் த.வெ.க.,வுடன் சேரவும் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பழனிசாமி மீதான அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி போன்ற மூத்த தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கவும், அவர்கள் முயற்சித்து வருவதாக அ.ம.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: பன்னீர்செல்வம், தினகரன், சசிகலாவை கட்சியில் சேர்த்தாலும், கூட்டணியில் சேர்த்தாலும், தன் தலைமைக்கு சிக்கல் வரும்; கட்சித் தலைமை பொறுப்பு தன்னை விட்டு நழுவி விடும் என, பழனிசாமி நினைக்கிறார். கடந்த 2021ல், தினகரன், சசிகலா இல்லாமல் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி, 75 இடங்களை வென்றது. வரும் தேர்தலில் பன்னீர்செல்வமும் இல்லாமல், 100 இடங்களை தாண்டி விடலாம் என, பழனிசாமி நம்புகிறார். அதனால்தான் மூவரையும் கூட்டணியில் கூட சேர்க்க மறுக்கிறார். கட்சியை மீறி தனியாக யாரும் சாதிக்க முடியாது என்பதில் பழனிசாமி உறுதியாக இருக்கிறார். அதனால்தான் அதிருப்தியை வெளிப்படுத்திய செங்கோட்டையனையும் அவர் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

செங்கோட்டையன் தொகுதி பறிக்க பழனிசாமி திட்டம்?

அ.தி.மு.க., சந்தித்த முதல் சட்டசபை தேர்தலில், சத்தியமங்கலம் தொகுதியில், செங்கோட்டையன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989 சட்டசபை தேர்தலில், 'ஜா' அணி, 'ஜெ.,' அணி போட்டியிட்டபோது, ஜெயலலிதாவிடம் பேசி, பழனிசாமி போட்டியிட 'சீட்' வாங்கித் தந்தவர் செங்கோட்டையன். 'அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால்தான், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும்' என, செங்கோட்டையன் வலியுறுத்தி வருகிறார்; இதை பழனிசாமி ஏற்கவில்லை. தன்னை மீறி, மத்திய அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்ததையும் விரும்பவில்லை. இதனால், வரும் சட்டசபை தேர்தலில், செங்கோட்டையனின் கோபிச்செட்டிபாளையம் தொகுதியில், தன் சம்பந்தியின் உறவுக்காரர் ஒருவரை போட்டியிட வைக்க, பழனிசாமி திட்டமிட்டுள்ள தகவல் செங்கோட்டையனுக்கு தெரியவந்தது. அதேபோல, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியில், மத்திய அமைச்சர் எல்.முருகனை போட்டியிட வைக்கவும் பழனிசாமி திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் நடந்த அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில், செங்கோட்டையனை பேச அனுமதிக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த செங்கோட்டையன், அனைவரும் ஒன்றுபட வேண்டும் என போர்க்கொடி துாக்கியுள்ளார்.

சமரசத்திற்கு அமித் ஷா முயற்சி

அ.தி.மு.க., ஒன்றுபட்டால் தான் வெற்றி சாத்தியம் என்பதில், அமித் ஷா உறுதியாக இருப்பதாகவும், பீஹார் சட்டசபை தேர்தல் பணிகள் முடிந்த பின், பன்னீர்செல்வம், தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளை அவர் மேற்கொள்ள இருப்பதாகவும், பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

pakalavan
செப் 05, 2025 22:29

பதவிவெறி எடப்பாடிய ஆட்டிபடைக்குது,


krishnamurthy
செப் 05, 2025 22:19

யாரை சேர்த்தாலும் சிறை சென்ற சசிகலாவை சேர்க்கக்கூடாது


SP
செப் 05, 2025 21:33

அனைவரும் ஒன்றிணைந்து நம்பிக்கையற்ற மனிதர் எடப்பாடியாரை நீக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இவர் முதன்முதலாக சட்டசபை தேர்தலில் போட்டியிட ஜே அம்மையாரிடம் பேசி சீட்டு வாங்கி கொடுத்தவர் செங்கோட்டையன் அவர்கள். ஆனால் எடப்பாடியாருக்குத்தான் நன்மை செய்தவர்களுக்கு துரோகம் செய்வது தானே பிறவி குணம்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 05, 2025 20:02

நக்கல்யா உமக்கு..


T.sthivinayagam
செப் 05, 2025 19:49

முன்னாள் அதிமுக நிர்வாகி நாகேந்திர நைனார் அவர்களையும் மீண்டும் அதிமுகவில் சேர்த்தால் அதிமுகவிற்கு தென் மாவட்டங்களில் அதிக வாக்குகள் கிடைக்கும் என்று தொண்டர்கள் விரும்புகின்றனர்


வேணு
செப் 05, 2025 17:52

பிஜேபி விழித்துக் கொள்ள வேண்டும் EPSஐ நம்பி வீண் போக கூடாது அண்ணாமலை ஒரு நல்ல தலைவர் அவரின் யோசனையின்படி தமிழ்நாடு பிஜேபி செயல்பட வேண்டும் குழப்பமுள்ள ஏடிஎம்கே கட்சியை தவிர்க்க வேண்டிய கட்டாயம் பிஜேபிக்கு வரலாம் தமிழ்நாட்டில் இன்றைய சூழ்நிலையில் தேர்தல் கலம் மாறி வருகிறது அதற்கு ஏற்றால் போல் மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏ டி எம் கே ஒன்று சேர்ந்தால் பலன், இல்லை என்றால் பிஜேபிக்கும் தோல்விதான் யோசிக்க வேண்டிய நேரம் இது. பிஜேபியின் உட்கட்சி பூசல் முதலில் முறிக்கப்பட வேண்டும் எல்லோரும் இணைந்து செயல்பட வேண்டும் இல்லையென்றால் மீண்டும் திராவிடஆட்சிதான் யோசியுங்கள் செயல்படுங்கள் அமித்ஷா ஜி அவர்களே...


INDIAN Kumar
செப் 05, 2025 17:30

அண்ணாமலை சீமான் விஜய் கரம் கோர்த்தால் இரு பெரும் ஊழல் கட்சியை வீழ்த்தலாம் ஆனால் சேர்வார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி


INDIAN Kumar
செப் 05, 2025 17:20

எடபடியாரின் ஆட்சியில் ஊழல் நடக்க வில்லியா மத்திய பாஜக அதிமுகவை ஆதரிப்பது திமுகவை வீழ்த்த ஆனால் இரண்டும் ஒரு கொடியில் பூத்த ஊழல் மலர்கள் இருவரும் வேண்டாம்


INDIAN Kumar
செப் 05, 2025 17:06

திமுக ஊழல் கட்சி அதிமுக மட்டும் என்ன ரொக்கமா ?? அதுவும் ஊழல் கட்சிதானே இருவரையும் புறக்கணிப்போமே புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்போமே


Rajasekar Jayaraman
செப் 05, 2025 11:41

எடப்பாடிக்கு பயம் மற்றவர்களை சேர்த்தால் அவர்கள் நமக்கு ஆப்படித்து விடுவார்கள் என்று பயந்தால் கட்சியை அழித்து விடுவார்கள் கட்சியா பதவியா என்று சீர்தூக்கி பார்க்க வேண்டும்.


முக்கிய வீடியோ