உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / தி.மு.க., அரசு அலட்சியத்தால் 22 குழந்தைகள் உயிரிழப்பு; அ.தி.மு.க., குற்றச்சாட்டு

தி.மு.க., அரசு அலட்சியத்தால் 22 குழந்தைகள் உயிரிழப்பு; அ.தி.மு.க., குற்றச்சாட்டு

சென்னை: 'இருமல் மருந்தால், 22 குழந்தைகள் உயிரிழந்ததற்கு, தி.மு.க., அரசே பொறுப்பு' என, அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, அ.தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்து, மத்திய பிரதேசத்தில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு உயிர்களை இழந்து, ம.பி., அரசு கண்டறிந்து சொன்ன பின், 'சோதனை நடத்தி நச்சுத்தன்மை இருப்பதை, தி.மு.க., அரசு கண்டுபிடித்துள்ளது' என, அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இப்படியொரு விளக்கத்தை கொடுக்க, தி.மு.க., அரசுக்கு வெட்கமாக இல்லையா? மருந்து நிறுவனங்களை கண்காணிக்கும் லட்சணம் இது தானா? தமிழகம் முழுதும் உள்ள மருந்து நிறுவனங்களின் தரத்தை சோதனை செய்ய, தரக்கட்டுப்பாட்டு குழு செயல்பாட்டில் உள்ளதா? எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை சோதனை மேற்கொள்ளப்படுகிறது? தமிழகத்தில் தயாராகும் மருந்துகள் தரமாகத்தான் உள்ளன என்று, தி.முக., அரசு வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? காலமுறை தரப்பரிசோதனை குறித்த விபரங்களை, நீதிமன்றம் கேட்கும்போது சமர்ப்பிக்க, அரசு தயாராக உள்ளதா? அரசின் அலட்சியத்தால், 22 குழந்தைகளின் உயிர் போனதற்கு பொறுப்பேற்காமல், வழக்கம்போல, அரசியல் செய்யும் தி.மு.க.,வை பார்த்தால், மக்களின் உணர்வுகளை விட்டு, தி.மு.க., வெகுதுாரம் சென்று விட்டதையே காட்டுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

சாமானியன்
அக் 11, 2025 22:16

போனது 21 உயிர். தேவையா நீயா நானா பட்டிமன்றம். சம்பந்தப்பட்டவர்களின் அலட்சியத்தை எமதர்மா வெளிச்சம் போட்டு காட்டுகிறார். பாவம் அந்த சிசுக்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டால் அது ஸிஸ்ட் ஆகவே பலமாதங்கள் ஆகலாம். தெரிந்தே செய்யும் தவறுக்கு ஜாமின் தரக்கூடாது.


அப்பாவி
அக் 11, 2025 14:03

ம.பி யின் தமிழக எம்.பி வாயே தொறக்கலியே...


Venugopal S
அக் 11, 2025 13:21

ஆனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் மட்டும் அப்போதைய அதிமுக அரசு மீது எந்தத் தவறும் இல்லை என்று சொன்னவர் தானே இவர்!


Santhakumar Srinivasalu
அக் 11, 2025 13:06

விடிஞ்சா அதிமுக ஒரு அறிக்கை! இதில் மபி அரசுக்கு எந்த பொறுப்பும் இல்லையா?


சேகர்
அக் 11, 2025 06:54

மருந்தை , கம்பெனியை அங்கீகரிப்பது , The Drugs Controller General of India DCGI is the head of the Central Drugs Standard Control Organisation கிட்ஸ்கோ.. மத்திய அரசின் கீழ் வருகிறது


ஆரூர் ரங்
அக் 11, 2025 07:44

சுகாதாரத்துறை மாநில அரசின் பட்டியலில்தான் உள்ளது. அவர்கள்தான் மருந்து ஆலைகளின் ஆய்வுக்கு அடிப்படை பொறுப்பு. மாநில அரசின் நூற்றுக்கணக்கான மருந்து ஆய்வாளர்கள் என்ன செய்கின்றனர்? மத்திய இலாகா மேற்பார்வையிட மட்டுமே இயலும்.


முருகன்
அக் 11, 2025 06:35

இயற்கை பேரிடர் ஏற்பட்டால் கூட திமுகவை பொறுப்பு ஏற்க சொல்லும் ....... இவர்


pmsamy
அக் 11, 2025 05:39

பழனிச்சாமி நீ எத்தனை மருந்த சோதனை சோதனை பண்ணியிருக்க ஆதாரங்கள காட்டு


புதிய வீடியோ