உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / முடிந்தது எல் நினோ; வருகிறது லா நினா: வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா?

முடிந்தது எல் நினோ; வருகிறது லா நினா: வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா?

கோவை: ''இது, 'லா நினா' பருவநிலை ஆண்டை நோக்கி நகரும் காலகட்டம் என்பதால், வரவிருக்கும் வடகிழக்குப் பருவத்தில் தமிழகத்தில் இயல்பான அளவு மழை பொழியும்,'' என, கோவை, வேளாண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.சில ஆண்டுகளாகவே, பருவமழை பருவம் தவறி பெய்கிறது. இயல்பான மழை பெய்வதில்லை அல்லது இயல்பை விட அதிகமாக பெய்கிறது. இதனால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. ஏன் இந்த நிலை; இந்தாண்டு, வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் உள்ளிட்ட கேள்விகளுடன், கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமியை அணுகிய போது அவர் கூறியதாவது:வறண்ட வானிலை, உயர் வெப்ப நிலை நிலவுவது வழக்கமான ஒன்று தான். பொதுவாகவே 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாகவே பதிவாகியுள்ளது. தற்போது, சூரியக் கதிர்கள் நம் தலைக்கு நேராக இருப்பதால், கூடுதல் வெப்பத்தை உணர்கிறோம். செப்.,ல் வெப்பநிலை சற்று உயர்ந்தால், வடகிழக்குப் பருவமழை இயல்பாக இருக்கும்.தென்மேற்குப் பருவமழை, தமிழகம் முழுக்க பரவலாக சராசரியை விட 4 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. இன்னும் இம்மாத கடைசி வரை, இப்பருவமழைக்கான காலம் உள்ளது. 10 முதல் 20 மி.மீ., வரை மழை பெய்யலாம். காவிரி டெல்டா பகுதியில் 30 முதல் 40 சதவீதம் வரை குறைவாகப் பெய்திருக்கிறது. ஆனால், மே இறுதியில் கோடை மழைப்பொழிவு நன்றாக இருந்தது. தர்மபுரி, சேலம் போன்ற வடமேற்கு மண்டலம் மற்றும், கோவை, ஈரோட்டை உள்ளடக்கிய மேற்கு மண்டலங்களில் 30 சதவீதம் வரை மழைப்பொழிவு குறைவாக இருந்தது. இங்கும், மே மாதத்தில் நல்ல மழை இருந்தது.வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு உருவாகி , ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா பகுதியில் வரலாறு காணாத மழை பெய்தது. இருக்கும் ஈரப்பதத்தை காற்றழுத்தத் தாழ்வுநிலை அள்ளிச் சென்றதால், நம் பகுதியில் வெப்பம் அதிகரித்து விட்டது.'எல் நினோ' பருவநிலை ஆண்டு முடிந்து, சமநிலையில் இருந்து 'லா நினா'வை நோக்கி நகர்கிறோம். எனவே, வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவு பெய்யும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

'சராசரி மழைப்பொழிவு இருக்கும்'

வடகிழக்கு பருவமழை கைகொடுக்குமா என்ற கேள்விக்கு, ''வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்., 15 - 20ல் துவங்கி, டிச., 15 வரை பெய்யும். மாறுபடும் பருவநிலைகளால், பருவமற்ற மழைப்பொழிவு அடிக்கடி நிகழ்கிறது. எனவே, இப்போதைக்கு, சராசரியாக வடகிழக்கு பருவமழை பொழியும் என கணிக்கிறோம்.வங்காள விரிகுடாவில் எந்த அளவு தாழ்வழுத்த நிலை உருவாகிறதோ, அதைப்பொறுத்தே வடகிழக்கு பருவமழையின் அளவு அமையும். குறைந்தது நான்கு தாழ்வழுத்தங்கள் உருவானால் தான், தமிழகத்துக்கு தேவையான நல்ல மழை கிடைக்கும். நீண்ட காலத்துக்கு முன்பே, தாழ்வழுத்த நிலையை யூகிக்க முடியாது. எனினும், சராசரி மழைப்பொழிவு இருக்கும்,'' என்றார் துணைவேந்தர் கீதாலட்சுமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sudalaimani c
செப் 26, 2024 16:15

No need your prediction


Venkat Iyer
செப் 26, 2024 07:04

நீரின்றி அமையாது உலகம். மழை இல்லாத விவசாயம் செய்ய முடியாது


Venkat Iyer
செப் 26, 2024 07:03

இந்த ஆண்டு கேட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை சரியாக பெய்யவில்லை. அதோடு சம்பா பருவத்திற்கு விவசாயத்திற்கு நிலத்தடி நீரை நம்பியுள்ளனர். பல இடங்களில் விவசாய ரொம்ப செட் போதிய மின்சாரம் இல்லாமல் இயங்கவில்லை. இந்த புரட்டாசி மாத கட்டத்தில் ஒரு பெரிய பருவமழையை விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. 20 சதவீதம் கூட விவசாயம் நடைபெறவில்லை. 1980களில் புரட்டாசி 15 தேதிக்குள் என்பது சந்தோஷம் நடைபெற்று விடும். நிலங்கள் அனைத்தும் தரிசாக கிடக்கிறது. ஐப்பசி மாசம் விவசாயம் செய்யச் சென்றால் மழையினால் இளம் நடவு பணிகள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. எங்களை விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளோம்


Sathish kumar
செப் 25, 2024 22:24

அருமை சூப்பர் வழக்கத்துக்கு அதிகமழை கிடைக்கும் கண்டிப்பா கிடைக்கும்


VENKATASUBRAMANIAN
செப் 25, 2024 08:49

வேறு ஒரு செய்தியில் 22 பெர்சன்ட் அதிகம் மழை பெய்ததாக பார்த்தேன். தினமலர் வேறு விதமாக கூறுகிறது. எது உண்மை


kannan sundaresan
செப் 25, 2024 05:47

இயற்கையை மனிதன் அழித்தான். மனிதனை இயற்கை அழிக்கிறது


அப்பாவி
செப் 25, 2024 02:36

எல் நீனோ என்றால் ஆண்குழந்தை, லா நீனா என்றால் பெண் குழந்தை என்று பொருள். இரண்டும் ஸ்பானிஷ் சொற்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை