உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி: கோவை ஏ3 மாநாட்டில் பேச்சு

மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் வெளிநாட்டு நிதி: கோவை ஏ3 மாநாட்டில் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் நடைபெற்று வந்த, 'விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு' என்ற, 'ஏ3' மாநாடு, ஆரோக்கியமான விவாதத்துடன் நிறைவடைந்தது.'வாய்ஸ் ஆப் கோவை' அமைப்பு சார்பில், 'விழித்திரு, எழுந்திரு, உறுதியாக இரு' என்ற தலைப்பிலான 'ஏ3' எனும், அவேக், அரைஸ், அசெர்ட் மாநாடு கோவை, அவிநாசி ரோடு, 'கொடிசியா-இ' ஹாலில், இரண்டு நாட்கள் நடந்தது.தர்மம், சனாதன தர்மம், ஆன்மிகம் சார்ந்த தலைப்புகளில் நேற்று முன்தினமும், இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான அரசியல் குறித்த தலைப்புகளில் நேற்றும், கருத்தரங்கம் நடந்தது. காலை, 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை, இரண்டு நாட்களில், 25க்கும் மேற்பட்டோர் ஆன்மிக சொற்பொழிவு, கருத்துகளை பரிமாறினர்.

'செங்கோல்' ஆட்சி!

'வங்கதேசம் இன்று' என்ற தலைப்பில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று பேசியதாவது:எத்தனையோ படையெடுப்புகளை தாண்டி, நமது பாரதம் நிலைத்து நிற்கிறது. நமக்கு சுதந்திரம் கிடைக்கும்போது, நாடு வெட்டி பிளக்கப்பட்டது. வீரம் மிக்க சீக்கியர், இந்துக்கள் வசித்த பஞ்சாபில் பாதி மற்றும் லாகூர் நம்மிடமில்லை.வங்கத்தில் பாதி நம்மிடம் இல்லை. தமிழகம் போல, வங்க மொழி இலக்கிய செழுமை வாய்ந்தது. 1905ல் வங்கப் பிரிவினைக்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, மத ரீதியாக தனி நாடு கோரி கலவரங்கள் வெடித்தன. ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர்; துரத்தப்பட்டனர்.வங்க தேசம், பாகிஸ்தானுடன் இணைந்தபோது, ஹிந்துக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். வங்கதேச கலாசாரத்தை பாக்., ராணுவம் அழித்தது. இந்திய ராணுவம் சென்று, வென்று தனி வங்கதேசத்தை உருவாக்கி கொடுத்தது. அங்கு, 1972க்கு பிறகு, 26 சதவீதமாக இருந்த ஹிந்துக்கள் இன்று, 6 சதவீதமாக குறைந்துள்ளனர்.இன்று மாணவர் போராட்டம் என்ற பெயரில் ஹிந்துக்கள் தாக்கப்படுகின்றனர். கோவில்கள், பகவத் கீதை எரிக்கப்பட்டது. துறவி கைது செய்யப்பட்டுள்ளார். நாளை இது இந்தியாவில் நடக்காமல் இருக்க, விழித்திட வேண்டும். வளமான தமிழகம் உருவாக வரும், 2026ல் செங்கோல் ஆட்சி வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தர்மத்திற்கு எதிரானது

'தேசம் முதலா அல்லது மதம் முதலா' எனும் தலைப்பில், தேசியவாதி ஜெரோம் ஆன்டோ பேசியதாவது: மதமாற்றம் இப்போது எளிதாக நடக்கிறது. ஒருவர் மதமாற்றம் செய்யப்பட்டால், அவர் இந்தியாவுக்கு எதிராக மாற்றப்படுகிறார் என அர்த்தம். உங்களது சனாதன நம்பிக்கையை மாற்றுகின்றனர். அவர்களின் கோட்பாடுகள் நமது தர்மத்துக்கு எதிராக உள்ளன. இதனால், சமூக மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதி, மதமாற்றத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்போது நீங்கள் விழிக்கவில்லை எனில், உங்கள் குழந்தைகள் எந்த ஒரு விஷயத்தையும் அனுபவிக்க முடியாது.இவ்வாறு அவர் பேசினார்.

'விழிப்புடன் இருக்க வேண்டும்'

'ஹிந்து மதம் இன்று எதிர்கொள்ளும் சவால்கள்' என்ற தலைப்பில், அர்ஷ வித்யா சமாஜம் நிறுவனர் ஆச்சார்யா மனோஜ் பேசியதாவது: எதிர்மறை எண்ணங்களை நம் மதம், ஆன்மிகம், சமூகம் மீது திணிப்பது, போதை வாயிலாகவும், இளம் தலைமுறையினரை மூளைச்சலவை செய்தல் என, ஆறு விதங்களில் மத மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. புதுவித எதிரிகளை சந்தித்து வருகிறோம்.நம்மை மதம் மாற்றம் செய்வதற்கான, மறைமுக நடவடிக்கைகளில் விழிப்புடன் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் சிறுபான்மை ஹிந்துக்கள், மதமாற்ற பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.இதிலிருந்து விழித்துக்கொள்ள, ராமாயணம், மகாபாரதம், அர்த்த சாஸ்திரம் உள்ளிட்டவை வாயிலாக சனாதன தர்மத்தின் அடிப்படை சாராம்சத்தை, நம் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ManiK
டிச 02, 2024 18:48

அர்ஜுன் சம்பத் போன்ற உண்மையான,அறிவுள்ள தலைவர்கள் மிக அரிது. தயவுசெய்து நேரடியாக பாஜகவில் இணைந்து போராடவும்.


பல்லவி
டிச 02, 2024 16:30

கண்டு பிடிச்சிட்டான்யா கண்டு பிடிச்சிட்டான்யா


Oviya Vijay
டிச 02, 2024 11:05

இது ஒரு காமெடி பீஸ்...


சாமிநாதன்,மன்னார்குடி
டிச 02, 2024 12:21

நீ ஒரு.....


SUBBU,MADURAI
டிச 02, 2024 05:31

இந்தியாவின் சட்டமேதை டாக்டர் B.R அம்பேத்கர் எழுதிய பாகிஸ்தான் அல்லது பார்டிஷன் ஆஃப் இந்தியா என்ற புத்தகத்தில் (இப்போது அமேசானில் கிடைக்கிறது) இஸ்லாம் பற்றியும்,முஸ்லீம்கள் குறித்தும் முஸ்லீம் அல்லாத எந்த தலைவரும் இதுவரை சொல்லாத, எழுதாத உண்மைகளை தைரியமாக எழுதியிருக்கிறார். அதிக பக்கங்களை கொண்ட அந்த புத்தகத்தில் அவர் கூறி இருந்ததை சுருக்கமாக பார்த்தோம் என்றால், அதாவது முஸ்லீம்களுடன் இந்துக்கள் உட்பட மற்ற மதத்தினர் யாரும் சேர்ந்து வாழ்வது என்பது சாத்தியமற்றது என்றும், இந்தியப் பிரிவினையின் போது மக்கள் தொகை பரிமாற்றம் கண்டிப்பாக நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். அதாவது இந்திய பிரிவினைக்குப் பிறகு இந்துக்களை தவிர எந்த முஸ்லீமும் இந்தியாவில் இருக்கக் கூடாது என்று தைரியமாக கூறினார். ஆனால் அவர் கூறியதை அப்போதைய காங்கிரஸ் தலைவர்களான காந்தி,நேரு உள்ளிட்டவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னாளில் வந்தவர்களும் அவரது அந்தக் கருத்தை அப்படியே இருட்டடிப்பு செய்து விட்டனர். இருப்பினும், இந்தியாவில் நடக்கும் அனைத்து முஸ்லீம் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் போன்றவற்றில் அம்பேத்கரின் படங்கள் மற்றும் போஸ்டர்கள் முக்கியமாக வைக்கப் படுகின்றன அதற்கு காரணம் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையிலான தலித்துகளை தங்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி விட்டனர் என்பதுதான்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை