உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / மாஜிக்கள் மீது வழக்கு தொடர அனுமதியா? முதல்வர் வலியுறுத்தலால் அ.தி.மு.க.,வில் கலக்கம்!

மாஜிக்கள் மீது வழக்கு தொடர அனுமதியா? முதல்வர் வலியுறுத்தலால் அ.தி.மு.க.,வில் கலக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர, விரைவாக அனுமதி வழங்கும்படி, கவர்னர் ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியது, அ.தி.மு.க., வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர அனுமதி கோரி, கவர்னருக்கு தமிழக அரசு அனுப்பிய கோப்பு, 15 மாதங்களாக நிலுவையில் உள்ளது. அதேபோல, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதும் வழக்கு தொடர அனுமதி கோரிய கோப்பு, ஏழு மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் தெம்பாக இருந்தனர். தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையிலான மோதலும், அவர்களுக்கு சாதகமாக இருந்தது.சந்திக்க நேரிடும்இந்நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின், கவர்னர் மாளிகை சென்று, கவர்னர் ரவியை சந்தித்து பேசினார். அவருடன், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் அலுவலர்கள் சென்றனர்.அரை மணி நேர சந்திப்பின் போது, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு தொடர அனுமதி கோரிய கோப்பின் மீது, உடனடியாக அனுமதி வழங்கும்படி, கவர்னரிடம் முதல்வர் வலியுறுத்தி உள்ளார். அப்போது, கவர்னர் கேட்ட சந்தேகங்களுக்கு, அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.எனவே, விரைவில் அந்த கோப்புகள் மீது, கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது, அ.தி.மு.க., வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கவர்னர் ஒப்புதல் அளித்தால், சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், ஊழல் வழக்கை சந்திக்க நேரிடும். ஏற்கனவே, முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், வளர்மதி உட்பட பலர் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.

கட்சிக்கு நெருக்கடி

ஏற்கனவே, பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., விலகி விட்ட சூழலில், கவர்னர் ரவியை பா.ஜ., தலைமை வாயிலாக தங்கள் மீதான நடவடிக்கையை தள்ளி வைக்க முடியும் என்ற நம்பிக்கையையும் முன்னாள் அமைச்சர்கள் இழந்துள்ளனர். தேர்தல் நேரத்தில் ஊழல் வழக்குகள் விசாரிக்கப்பட்டால், அதனால் கட்சிக்கு நெருக்கடி உருவாகும் என்பதால், அதை சமாளிப்பது குறித்து, சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் தரப்பிலும், அ.தி.மு.க., கட்சி தரப்பிலும் ஆலோசனை நடந்து வருகிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

DVRR
ஜன 01, 2024 16:57

மாஜிக்கள் மீது வழக்கு தொடர அனுமதியா? முதல்வர் வலியுறுத்தலால்??? அப்போ கருணாநிதியின் மந்திரி சபை மாஜி ஸ்டாலின் தானே ஆகவே அவர் மீது கூட வழக்கு தொடர அனுமதி என்று உடனே அனுமதி அளிக்கவேண்டும் கவர்னர்.


Hari
ஜன 01, 2024 16:32

அதனால என்ன ,செந்தில்பாலாஜி செல்வா கணபதி வேலு கண்ணப்பன்,முத்துசாமி,சேகர்பாபு,கே கே எஸ் எஸ் ஆர் ஆர் ,போன்றோர்களை போல இவர்களும் தி மு க வில் சேர்ந்துவிடடாள் கூவம் மணக்கும் .


Jai
ஜன 01, 2024 15:50

அதிமுக ஆட்சியில் திமுக மீது வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்து சரியான சாட்சி அமைந்தால் இன்னைக்கு இருக்கும் அரசியல் எல்லோரும் உள்ளே போக வேண்டியதுதான். திமுக நேர்மையான ஆட்சி நடத்தி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ரூ300 கோடி செலவு செய்ததா? சாமியானா அரசியலுக்கு எங்கிருந்து பணம் வந்தது? வானத்தில் இருந்து கொட்டிச்சா?


P Karthikeyan
ஜன 01, 2024 12:12

பாஜக திமுகவை அழிக்கும் ...திமுக அதிமுகவை அழிக்கும் ரெண்டு திராவிட கட்சிகளும் அழியும் காலம் விரைந்து வருகிறது .


Sathyam
ஜன 01, 2024 10:12

We need this kind of governor who can be real pain and agony for the anti national DMK and other missionry supported parties. I am very happy to hear that it would be nightware for DMK/VCK and other poisonous insects in TN who are there to ruin the state and already done maximum damage to TN. Sterlite was unfortunate to be closed and this filty Supereme court ( Supreme shame of Bharat) intervened and ensured that it is closed due to pressure and not went through the facts. Infact S terlite had no such effects like Union carbide factory due to which more than 2000 people were killled and the SC was blind spectator to this and the Chairman of Union carbide as allowed to escapte from Bharat thanks to the Congis worst rule and damage to Bharat. EPS/AIADMK absolutely failed and miserably handled Sterlite inpsite of good intelligence. It was total handwork of CIA/MI6 and they were supporting all the poisionous missionaries and churches in Bharat and ensure that no important investment or project survives and is winded up. Same thing they tried for Koodankulam Nuclear reactor also and today we are power surplus because of Koodankulam and SONIA MAFIA Lady also tried her best to stop the project. TN people have to know these poisonous DMK/other dravidian periyar parties/ NTK Saaman who are very harmful to the nation and TN citizens should come out of laziness, freebies,tasmac and have to wake up before TN becomes another Kerala/Punjab/West Bengal and gets rotten ruined or done/dusted


GMM
ஜன 01, 2024 10:10

மாநில மந்திரிகள் மீது மாநில ஆளும் கட்சி வழக்கு தொடர கவர்னர் அனுமதி தேவை. மந்திரிக்கு நிர்வாக அதிகார ஒப்புதல் வழங்கும் பொறுப்பு இல்லை. பரிந்துரை மட்டும். இதன் மூலம் பணம் பெற முடியும். வருவாய்க்கு மேல் சொத்து குவிப்பு தான் அடையாளம். மாநில அரசு முன்னாள் மந்திரிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது? மத்திய அமைப்புகள் தான் அதிகாரம் பெற்றவை. தவறான கோப்பு.


Palanisamy Sekar
ஜன 01, 2024 09:33

மாபெரும் ஆளுமை கொண்ட எடப்பாடியார் இவர்களை காப்பாற்றுவார் என்று நம்பினால் அவரை காப்பாற்றவே இயலாத சூழல் உள்ளதால் அதிமுக ஊழல்வாதிகள் உள்ளே போவட்டும். சரக்கு சம்முவம் யோசனை கூறுவார் அதன்படி நடங்களேன். அரசியல் அரிசிச்சுவடிகூட தெரியாத மக்குகள்தான் இப்போதுள்ள அதிமுக தலைகள் என்பதில் சந்தேகமே இல்லை. கைசுத்தமாக இருந்திருப்பின் பயப்பட தேவையே இல்லை. இப்போ பாஜக வை நினைத்து என்ன பயன்? உங்க தலையில் மண்ணள்ளி போட்ட்து இடப்படியும் சரக்கு சம்முவமும்தான் என்பதை உணராத இவர்கள் அரசியலில் என்னதான் கிழித்தார்களோ தெரியல. படட்டும்..


Sathyam
ஜன 01, 2024 10:58

current AIADMK is not the Jayalalitha AIADMK one, it is almost done and dusted and is about to get rotten. We dont need any bloody secular party, Both AIADMK/DMK is equally corrupt , anti hindi and for crores of citizens our faith relegion is much important than anything, AIADMK also the same rotten soriyarist periryarist foreign agent parties controlled by christian missionaries, Infact Periyar name should be banned and all the establishment groups should be banned under severe hate crime and anti national acts TN is Hindu spiritual state and not anti national Periyarist anti national land .TN is not ancestor or grand parents property of AIADMK/DMK they have alreadyruined TN instead of ruling, let the state get rid of these extreme sinners


Kasimani Baskaran
ஜன 01, 2024 08:50

திராவிட ஊழலில் முன்னால் வந்தது, பின்னால் வந்தது என்ற வேறுபாடெல்லாம் கிடையாது...


Ramesh Sargam
ஜன 01, 2024 08:18

அந்த ரெண்டு கட்சியில் இருக்கும் தலைவர்கள் மீது இப்பொழுதே பல வழக்குகள் உள்ளன. மேலும் வழக்கா? முடிவே காணாமல் வழக்குகள் இருக்கும்போது, எப்படி நீதிமன்றம் மேலும் மேலும் வழக்குகளை ஏற்கின்றன?


spr
ஜன 01, 2024 07:31

குற்றம் சாட்டப்படவர் மீதான வழக்கு, பொது நலனுக்கு எதிரான ஒன்றாக இல்லாத வகையில், (சுயனலம் சார்ந்த ஒன்றாக இருந்தால்) ஆளுனரின் அனுமதி தேவையா? இவர்கள் எல்லோருமே அரசின் கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் தவறு செய்யவில்லையே மக்களுக்கு அளிக்கப்பட்ட நிதி, சலுகை மற்றும் இதர வகையில் கொள்ளையடித்தவர்கள் என்பது அறியப்பட, விசாரிப்பது அவசியமல்லவா? விசாரணைக்கே தடை சொல்வது மேற்குறித்த சட்டப்படி சரியா? யாரேனும் விளக்குவார்களா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை