உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / காமராஜர் ஆட்சியும் தி.மு.க., ஆட்சியும் ஒன்றா? செல்வப்பெருந்தகைக்கு மாணிக்தாகூர் கண்டனம்

காமராஜர் ஆட்சியும் தி.மு.க., ஆட்சியும் ஒன்றா? செல்வப்பெருந்தகைக்கு மாணிக்தாகூர் கண்டனம்

'திராவிட மாடல் ஆட்சியை, காமராஜர் ஆட்சியாக நாங்கள் பார்க்கிறோம்' என, தமிழக காங்கிரஸ் செல்வப்பெருந்தகை கூறியதற்கு, அக்கட்சியை சேர்ந்த எம்.பி., மாணிக்தாகூர், 'காமராஜர் ஆட்சியை பார்க்காத, படித்து தெரிந்து கொள்ளாதவர்கள், அதை மற்றவைகளுடன் ஒப்பிடுவது தவறு' என கண்டித்துள்ளார்.சமீபத்தில், செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், 'தி.மு.க.,வின் திராவிட மாடல் ஆட்சியை, காமராஜர் ஆட்சியாக நாங்கள் பார்க்கிறோம்' என, கூறியுள்ளார். அதற்கு அவரது கட்சியினர் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். 'தி.மு.க., ஆட்சியை போய், காமராஜரின் பொற்கால ஆட்சியுடன் ஒப்பிடுவதா' என, சமூக வலைதளங்களில், மாநில தலைவர் என்றும் பாராமல், செல்வப்பெருந்தகையை அவரது சொந்த கட்சியினரே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில், செல்வப்பெருந்தகைக்கு பகிரங்க எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் விருதுநகர் எம்.பி.,யும், ஆந்திர மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளருமான மாணிக்தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கை:காமராஜர் ஆட்சியை பார்க்காத, படித்து தெரிந்து கொள்ளாதவர்கள், அதை மற்றவைகளுடன் ஒப்பிடுவது தவறு. காங்., முன்னாள் தலைவர் ராஜிவ் கனவு காமராஜர் ஆட்சி. அது உண்மையான காங்கிரஸ் உணர்வாளர்களின் கனவு. ஒரு நாள் அது நிச்சயம் நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மாணிக்தாகூரின் அறிக்கைக்கு சமூக வலைதளங்களில் காங்கிரசார் ஆதரவு தெரிவித்துள்ளனர். 'காமராஜரின் பொன்னான ஆட்சி என்ற கூற்றை மட்டுமே ஏற்றுக் கொள்வோம். காமராஜருக்கு நிகர் அவர் மட்டுமே' என, பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர்.அதற்கு பதிலடியாக, செல்வப்பெருந்தகை ஆதரவாளர்களும், சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். 'செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த லோக்சபா தேர்தலில், 9 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தொண்டர்கள் மத்தியில், தனக்கென தனி செல்வாக்கை பெற்றவர் அவர். கூட்டணி கட்சியுடன் இணைக்கமாக இருந்து வருகிறார். அதன் அடிப்படையிலான கருத்தைத்தன் அவர் சொல்லி இருக்கிறார்' என, அவற்றில் கூறியுள்ளனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Haja Kuthubdeen
பிப் 18, 2025 22:17

பெருந்தலைவர் இறந்தபோது அவரின் சட்டை பையில் வெறும் நூறுரூபாய் சில்லரை இருந்ததா படித்துள்ளேன்.அப்பேற்பட்டவரையே தோற்கடித்தவர்கள். திமுகவினர் எவ்வளவு கேவலமா திட்டினார்கள் என்பதெல்லாம் இன்றைய தலைவனுக்கு தெரிய வாய்ப்பில்லை.


orange தமிழன்
பிப் 18, 2025 21:58

காமராஜர் ஆட்சியை யாரோடு ஒப்பிடுவது ...அதுவும் காங்கிரஸ் தலைவரே.........வெட்க கேடு.....


krishna
பிப் 18, 2025 21:13

OSI QUARTER FREE.


Ramesh Sargam
பிப் 18, 2025 20:54

காமராஜர் கால் தூசிக்கு இந்த திமுகவினர் சரியாக மாட்டார்கள். அந்த மாமேதையுடன், இந்த சில்லறைகளை ஒப்பிடுவது சரியல்ல.


பேசும் தமிழன்
பிப் 18, 2025 19:12

இவர் என்ன சொல்ல வருகிறார்.... காமராஜர் சாராய கடைகளை திறந்து வைத்து.... மக்களை குடிகாரன் ஆக்கினார் என்று கூற வருகிறாரா ??? பதவிக்காக எப்படி எல்லாம் முட்டு கொடுக்கிறார் என்று பாருங்கள்.


ஆரூர் ரங்
பிப் 18, 2025 17:21

குட்டையில் ஊறிய மட்டை ஆட்சி காமராசர் ஆட்சியா? அவர் படிக்கச் சொன்னார். இவங்க குடிக்கச் சொல்லுறாங்க.


ராம் சென்னை
பிப் 18, 2025 13:18

ரவுடி கட்டப்பஞ்சாயத்து பண்றவன் கொலை செய்தவன் இவன் காமராஜரை பற்றி பேசலாமா. காமராஜரை பற்றி துளி கூட ஒண்ணுமே தெரியாது வெட்கமே இல்லாம பேசிட்டு இருக்காங்க. இதிலிருந்து தெரியல தமிழ்நாடு எவ்வளவு சீரழிந்து போய் இருக்கு.


Rajarajan
பிப் 18, 2025 12:11

இவர் எந்த காமராஜர் மற்றும் ஆட்சியை குறிப்பிடுகிறார்?? எங்களுக்கு தெரிந்ததெல்லாம், தன்னுடைய வாழ்க்கையை தமிழக மக்கள் மற்றும் வளர்ச்சிக்கு அர்ப்பணித்து, கடைசிக்காலத்தில் கதர் சட்டை /வேட்டி மற்றும் வங்கியில் சுமார் ஐநூறு ரூபாய் கூட இருப்பு வைக்காமல் காலமானார், அவர் தானே ?? அப்படியெனில், தற்போதய தமிழக காங்கிரஸ் மற்றும் இவரது கூட்டாளி தி.மு.க. தலைவர் முதல் வட்டம் / மாவட்டம் / ஒன்றியம் வரை உள்ள உறுப்பினர்கள் , தங்கள் சொத்து கணக்கை பொதுமக்களிடம் தாமாக வெளியிடலாமே? காமராஜர் அவர்களின் சொத்துமதிப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களது சொத்து மதிப்பு எங்கே?? உங்கள் சுயநல ஆட்டத்திற்கு, காமராஜரை ஏன் ஐயா வம்புக்கு இழுக்கிறீர்கள் ? உங்கள் கட்சி பதவி போனாலே, நீங்கள் எல்லாம் காணாமல் போய்விடுவீர்கள். இதில் எதற்கு நாடு / வளர்ச்சி / தொண்டு என்ற வீண் வீராப்பு எல்லாம் ??


jayvee
பிப் 18, 2025 11:47

இனி இந்திய தேசிய காங்கிரஸ் தமிழக பிரிவு, செல்வப்பெருந்தகை காங்கிரஸ் என்று அழைக்கப்படவேண்டும் ..


PARTHASARATHI J S
பிப் 18, 2025 11:41

தமிழக காங்கிரசார் ராகுல்காந்தி மாதிரி பேச ஆரம்பித்து விட்டார்கள். நல்லா அடிச்சுங்கங்க ! சந்தோஷமாக இருக்கு ! குண்டாக்கள் தலைவரானால் கட்சி இப்படித்தான் கருத்து மோதல் வரும். மக்களிடம் கெட்ட பெயர் மிஞ்சும்.