உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அண்ணாதுரைக்கு நாகேந்திரன் புகழாரம்; பா.ஜ.,வினர் கடும் அதிருப்தி

அண்ணாதுரைக்கு நாகேந்திரன் புகழாரம்; பா.ஜ.,வினர் கடும் அதிருப்தி

சென்னை : முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளில், தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்தது, அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.,வை துவக்கிய முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான நேற்று, அவரது படத்துக்கு தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் மரியாதை செலுத்தினர். பா.ஜ., கொள்கைகளுக்கு நேர் எதிரானது, தி.மு.க., கொள்கைகள். பா.ஜ.,வைச் சேர்ந்த தலைவர்களுக்கு பெரும்பாலும் தி.மு.க.,வினர் வாழ்த்து கூறுவதில்லை. இதுபோல, தி.மு.க.,வைச் சேர்ந்த மறைந்த தலைவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்தோ, நினைவு தினத்திற்கு இரங்கலோ, தமிழக பா.ஜ., தலைவர்கள் தெரிவிப்பதில்லை. இந்நிலையில், அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கண்ணாடி பார்க்காத முகம், விரல்களில் மோதிரமோ, கையில் கடிகாரமோ இல்லாத எளிமையான தோற்றம். ' தன் சொற்களால் தமிழினத்தையே கட்டிப்போட்ட மாபெரும் தலைவர் அண்ணாதுரையின் பிறந்த நாள் இன்று. 'தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், யாருக்கும் எஜமானாக இல்லாமல், அடிமையாகவும் இல்லாமல், யாரையும் சுரண்டாமல், யாராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதை தன் லட்சியமாக கொண்டு வாழ்ந்தவர். அண்ணாதுரையை போற்றி வணங்குவோம்' என கூறப்பட்டிருந்தது. இது, தமிழக பா.ஜ., தொண்டர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 'அ.தி.மு.க.,வில் இருந்து வந்தவரை பா.ஜ., தலைவராக்கினால், இப்படி தான் இருக்கும். பா.ஜ.,வின் நிறுவன தலைவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அல்லது உங்களின் தற்போதைய பார்ட்னர் பழனிசாமி ஆகியோர் எப்போதாவது வாழ்த்து கூறி இருக்கின்றனரா' என கேட்டு, சமூக வலைதளங்களில் நாகேந்திரனை விமர்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

SP
செப் 16, 2025 20:54

சரியோ தவறோ ? அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்கி தன் தலையில் தானே மண்ணைஅள்ளிப் போட்டுக் கொண்டது பாஜக.


RRR
செப் 16, 2025 19:41

வலதுசாரி தேசிய தெய்வீக உணர்வுள்ள ஹிந்துக்களின் வோட்டை நைனார் மறந்து விடவேண்டியதுதான். இவரைபோன்ற ஒரு திராவிஷ சித்தாந்தத்தில் ஊறிய ஒரு நபரை தமிழக பாஜகவின் தலைவராக்கியதெல்லாம் பாஜக எவ்வளவு தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. நைனாருக்கு தான் ஒரு தேசிய வலதுசாரி கட்சியான பாஜகவின் மாநிலத்து தலைவர் என்ற எண்ணம் துளியும் இல்லை. அதிமுகவின் அல்லக்கையாகவே செயல்படுகிறார்.


மாபாதகன்
செப் 17, 2025 16:45

சங்கம் ரத்தம் ஒடம்புல ஓடுறதுதான் காரணம்.


எஸ் எஸ்
செப் 16, 2025 18:26

நிச்சயம் தவிர்த்து இருக்கவேண்டும். 1967 தேர்தலில் ராஜாஜியுடன் கூட்டு வைத்து வெற்றி பெற்றவுடன் ராஜாஜியை புறக்கணித்து விட்டு பெரியாரை சந்தித்து அரசை காணிக்கை ஆக்கினார். ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்த புண்ணியவான்.


மாபாதகன்
செப் 17, 2025 16:48

சக்கரவர்த்தி ராஜகோபலாச்சாரியார் ஏணி அல்ல ?? மொட்டைக்கல் அந்த மொட்டை கல்லில் கால் வைத்து நசுக்கி விட்டு ஆசான் ஈவேரா என்னும் ஏணி யால் அரியாசனம் அடைந்தார் அண்ணா/.


ஆரூர் ரங்
செப் 16, 2025 15:21

இக்காலத்து திராவிட ஆட்களை விட அண்ணா எவ்வளவோ மேலானவர். ஆட்சி செய்த சில காலமும் நிர்வாகத்தில் தவறு செய்யவில்லை. மதுவிலக்கு அமலில் உறுதியாக இருந்தார். நயினார் முன்னாள் திராவிட நபர். அந்த வாசனை இன்னும் போகவில்லை.


ஆரூர் ரங்
செப் 16, 2025 15:13

மூக்குப்பொடி அந்நாள் வீரபாகு. தகுதியற்றவர்


Nellai Ravi
செப் 16, 2025 16:49

பெண்கள் விஷயத்தில் படு வீக். பெரிய எழுத்தாளர் என்று பெயர்...


சாமானியன்
செப் 16, 2025 13:51

சம்பிரதாயமாக சொல்லும் இந்த மாதிரி வார்த்தைகட்கு பெரிய அர்த்தம் கிடையாது. கண்டும் காணாமல் இருந்திட வேண்டும்.


ஈசன்
செப் 16, 2025 12:41

அந்த காலத்து திராவிட காங்கிரஸ் தலைவர்களில் பல நல்ல தலைவர்களும் தொண்டர்களும் இருந்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன். காமராஜரை பிஜேபி தலைவர்கள் புகழ்ந்து பேசியது இல்லையா. கக்கன் அவர்களின் நேர்மையை பாராட்டியது இல்லையா. அது போல்தான் இதுவும். அண்ணாதுரை அவர்களிடம் திராவிட கொள்கைகள் இருந்தாலும் எளிமையாக வாழ்ந்தவர். புற்று நோய் அறுவை சிகிச்சைக்காக தன் கையில் காசில்லாமல் அமெரிக்க சென்று வைத்தியம் பார்க்க விரும்பாதவர். மக்கள் பணத்தை தொடாதவர். இதனை அறிந்து எம்ஜிஆர் தான் சிகிச்சைக்கும் உதவினார். அப்படிப்பட்டவரை பற்றி பேசுவதில் என்ன தவறு.


ஆரூர் ரங்
செப் 16, 2025 14:42

காமராஜர் கடைசியாக சந்தித்த 1971 பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி நாடு முழுவதும் பிஜெபி (ஜனசங்கம்)யுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. அவரை பிஜெபி பாராட்டுவது நியாயமே. ஆனால் 1967லேயே காங்கிரசை ஆதரித்த ஈவேரா வை தேர்தல் வெற்றிக்குப்பின் சந்தித்து இது உங்கள் ஆட்சி என கைகோர்த்த துரோகி அண்ணாதுரைக்கு பாராட்டு தெரிவிப்பது மட்டமான செயல். அன்றாடம் ஹிந்து நம்பிக்கைகளைக் கிண்டல் செய்து கொண்டிருந்த அண்ணாவை ஏன் புகழ வேண்டும்?


Haja Kuthubdeen
செப் 16, 2025 10:40

ஏம்ப்பா கருணாநிதி சிலையை ஒரு மத்திய அமைச்சர் திறந்தபோது நீங்கல்லாம் எங்கே போயிருந்தீங்க...அறிஞர் அண்ணா பெயரில் இயங்கும் கட்சி கூட கூட்டணி அமைத்துள்ளீர்களே..


venugopal s
செப் 16, 2025 08:53

என்ன இருந்தாலும் எக்ஸ் மீது உள்ள காதல் முழுமையாகப் போகாது! இல்லாதது போல் நடிக்கலாம், அவ்வளவு தான்!


மோகன சுந்தரம்
செப் 16, 2025 06:24

அயோக்கிய திருட்டு திராவிட பிஜேபி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார் நைனார். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை