உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / 1 மணி நேரம் காக்க வைத்த சோனியா சுயசரிதை புத்தகத்தில் நஜ்மா வருத்தம்

1 மணி நேரம் காக்க வைத்த சோனியா சுயசரிதை புத்தகத்தில் நஜ்மா வருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பார்லிமென்ட்களுக்கு இடையிலான யூனியனின் தலைவராக 1999ல் நான் தேர்வான செய்தியை சொல்ல, பெர்லினில் இருந்து தொலைபேசியில் அழைத்தபோது, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா, ஒரு மணி நேரம் என்னை காக்க வைத்தார்' என, அக்கட்சியில் முக்கிய பதவிகளை வகித்த நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமைச்சர், ராஜ்யசபா துணை தலைவர் உட்பட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர் நஜ்மா ஹெப்துல்லா, 84. சோனியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, 2004ல் பா.ஜ.,வில் இணைந்தார்.கடந்த 2014ல் பா.ஜ., ஆட்சிக்கு வந்தபோது, சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக பதவி வகித்தார்; மணிப்பூர் கவர்னராகவும் பதவி வகித்துள்ளார்.இவர், 'இன் பர்ஸ்யூட் ஆப் டெமாக்ரசி: பியாண்ட் பார்ட்டி லைன்ஸ்' என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகத்தை எழுதி உள்ளார். அதில், சோனியாவுடன் இவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு பற்றிவிரிவாக எழுதியுள்ளார். அதன் விபரம்:கடந்த 1999ல் ஐ.பி.யு., எனப்படும், சர்வதேச நாடுகளின் பார்லிமென்ட்களுக்கு இடையிலான யூனியனின் தலைவராக நான் தேர்வானேன். இது வரலாற்று சிறப்புமிக்க பெரிய கவுரவம். இந்திய பார்லிமென்டில் இருந்து என் பயணம், உலக பார்லிமென்ட் நிலை வரையிலான உச்சத்தை தொட்ட தருணம். இந்த செய்தி வந்தபோது, ஐரோப்பிய நாடான ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்தேன். இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க, அப்போதைய பிரதமர் வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.உடனடியாகஎன்னுடன் பேசியவர், செய்தியை கேட்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். 'நீங்கள் இந்தியா வந்ததும் கொண்டாடுவோம்' என, தெரிவித்தார். அதன் பின், காங்கிரஸ் தலைவர் சோனியாவை தொடர்பு கொண்டேன். தொலைபேசியை எடுத்தவர் 'மேடம் பிசியாகஇருக்கிறார்' என்றார். 'நான் பெர்லினில் இருந்து அழைக்கிறேன்; உடனடியாக பேசவேண்டும்' எனக் கூறியதும், காத்திருக்கும்படி கூறினார்.ஒரு மணி நேரம் தொலைபேசியில் காத்திருந்தும் சோனியா பேசவில்லை. அது மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அந்த அழைப்புக்கு பின், அது குறித்து சோனியாவிடம் நான் எதுவும் கூறவில்லை.பார்லிமென்ட்களுக்கு இடையிலான யூனியனின் தலைவராக நான் தேர்வானதை அடுத்து, என் பதவியை இணையமைச்சர் அந்தஸ்தில் இருந்து கேபினட் அமைச்சர் அந்தஸ்துக்கு வாஜ்பாய் உயர்த்தினார் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது ஐ.பி.யு., எனப்படும் பார்லிமென்ட்களுக்கு இடையிலான யூனியன் என்பது சர்வதேச அமைப்பு. இதில் 193 நாடுகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

karthik
டிச 06, 2024 15:39

அடிபட்டா தான் பாஜகவின் அருமை தெரியும் போல


Jebamani Mohanraj
டிச 02, 2024 23:53

நஜ்மாவுக்கு சந்திராசாமி விவகாரம் தெரியாதா? நாடகமே உலகம்


முருகன்
டிச 02, 2024 21:45

பதவியில் இருக்கும் போது அனுபவித்து விட்டு இப்போது பழி போடுவது ஏன்


Bhaskaran
டிச 02, 2024 13:31

நஜ்மாவின் தாத்தா பற்றியெல்லாம் இத்தாலி அம்மாவுக்கு தெரியவில்லை போலும்


Rangarajan Cv
டிச 02, 2024 11:52

Manners


கண்ணன்
டிச 02, 2024 07:17

படிப்பு நன்றாக இருப்பின் நற்பண்புகள் நிச்சயம் இருக்கும்


A Viswanathan
டிச 02, 2024 08:35

இவர் உங்களை மட்டுமா அவமானபடுத்தினார். மன்மோகன் சிங் பதவிக்காக தன் வாழ்நாள் ழுழவதும் சிறிதும் இந்தியாவைபற்றி புரிதல் இல்லாத இவரிடம் அடிமைப்பட்டு கிடந்தார்.பிஜேபி மட்டும் ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால் இந்தியர்களின் நிலைமை என்ன ஆயிருக்கும்.


முக்கிய வீடியோ