வாசகர்கள் கருத்துகள் ( 36 )
மத்திய அமைச்சர் வீட்டில் மேஜை இல்லை போல என்று தெரிகிறது,
கட்சியில் இருந்து நீக்கியவர்களை எந்த காரணம் கொண்டும் மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று சொல்லிட்டாராம் ஆக கூட்டிக் கழிச்சிப் பார்த்தால் ஆடிட்டர் பேச்சைக் கேட்டு செங்கோட்டையன் நாசமாப் போனது தான் மிச்சம். ஆடிட்டர் அஜென்டா படி அதிமுகவை பலப்படுத்துறேன்னு சொல்லி ஒவ்வொரு செங்கலா உருவி விடுறார். இது தெரியாம அடுத்து எந்த செங்கல் இவர் பேச்சை கேட்டு நாசமாகப் போகுதோ
ஆர் எஸ் பாரதி மாடல் மீடியாக்களில் மக்களிடம் இந்த ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை இல்லை என்று சொன்னால் அது உண்மையாகிவிடாது , சொத்து வரி , மின் கட்டணம் , குடிநீர் வரி , விலைவாசி உயர்வு , சட்டம் ஒழுங்கு பிரச்சனை , போதை பொருள் புழக்கம் , பெண்கள் பாதுகாப்பு இன்மை , பழைய பென்சன் திட்டம் , பணி நிரந்தரம் , தூய்மை பணியாளர் பிரச்னை என்று மக்களுக்கு அனைத்தும் பிரச்னை தான் இதுவேய இந்த முறை பிஜேபி அதிமுக கூட்டணியை ஆட்சியில் அமர்த்தும் , இந்த அணியில் வேறு கட்சிகள் இணைந்தால் அந்த கட்சிகளுக்கு தான் நல்லது , அதிமுக பிஜேபி இவர்கள் இருவரையும் அவர்களுக்கு எத்தனை தொகுதிகள் என்று பேசி விட்டு தான் கூட்டணி பற்றி அறிவித்து இருப்பார்கள் , இந்த அணி வெல்லும் என்பதற்கு எடப்பாடி அவர்களுக்கு கூடும் கூட்டமே சாட்சி ....
திடீரென நிலைமாறிய பழனிசாமி - ஒண்ணும் பண்ண முடியாது போய்யான்னுட்டு கெளம்பிட்டாரா?
வெள்ளைக்காரன் பிரித்தாளும் சூழ்ச்சி செய்து இந்தியாவை ஆண்டான். இப்போது வடக்கர்கள் தமிழர்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்து தமிழ் அரசியல்வாதிகளை தங்கள் காலில் விழ வைக்கிறாரக்ள். MGR ஜெயலலிதா போன்றோர்களை வடக்கர்கள் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது திமுக அதிமுக எல்லாமுமே வடக்கர்கள் காலில் அடிபணிகிறார்கள். சீமான் விஜய்யால் மட்டுமே வடக்கர்களை எதிர்க்கமுடியும்.
வீர வசனம் "வார்த்தை படித்த நாய் வேட்டைக்கு உதவாது" என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. ஊழலுக்கு எதிரான அரசியல் செய்ய முடியுமா?
. அங்கே என்ன நடந்தது என்றால் இஷ்டம் இருந்தால் இருங்கள். இல்லாவிட்டால் ஓபிஎஸ், டிடிவி தினகரனோடு கூட்டணி வைத்துக்கொள்ளுங்கள். அவிங்க இருக்குற இடத்துல அதிமுக இருக்காது. நான் கிளம்புறேன் என்று எடப்பாடியார் சொன்னாராம். ஒடனே அமித்ஷா எடப்பாடிஜி அப்டிலாம் எதுவும் பண்ணிடாதீங்க. அண்ணாமலைன்னு பேச்சை கேட்டு நானும் தமிழ்நாட்ல பாஜக வளந்துதான் போய்டுச்சோன்னு நெனைச்சிட்டேன். எங்களை கழட்டி உட்டுடாதீங்க, பொறவு நோட்டாவோடதான் போட்டி போடணும் என்று கெஞ்சி கதறி இருக்காறாம். இதுதான் டெல்லில நடந்ததாம். ஒழுங்கு மரியாதையா இருக்கோணும், இல்லேனா கூட்டணி முறிஞ்சிடுச்சினு போயிட்டே இருப்பேன் என்றாராம். அந்த தம்பி விஜய் வேறு வெய்ட்டிங்க இருக்கான். நாங்க வெளியேறுனா அதிமுக, தவெக, காங்கிரஸ், விசிக, இஸ்லாமிய கட்சிகள் இணைந்து போட்டியிடும் ஐடியாவும் ஆல்டர்னேட்டிவா வைத்து இருக்கோம். ஒங்க பானிபூரி கதையை எங்கிட்ட காட்டுனா அவுங்களுக்கு நான் பச்சைக்கொடி காட்டிட்டு போய்டே இருப்பேன். அந்த கூட்டணி அமைந்தால் 210 தொகுதிகளில் வெற்றி உறுதி என்பது உங்களுக்கே தெரியும். சோ, இந்த வெட்டி உதார் உடுற வேலையை உட்டுப்போட்டு ஒழுங்கு மரியாதையா இருக்கோணும் என்று சொல்லிவிட்டு வந்திருக்காராம் எடப்பாடியார் என்று சொல்லப்படுகிறதாம்.
நூறு பெர்சன்ட் சாத்தியம். பாஜகவை கழட்டி விட 10 செகண்ட் கூட ஆகாது. ஆக உங்க ஊகத்தின்படி பார்த்தால் திமுகவோட பி டீம் அமீத்சா பாஜக தான், சரி தானே? காங்கிரஸ் திமுக பிரியாது. ஆனா பாஜகவை விரட்டி விட்டு தவெக மற்றும் சில்லறை கட்சி கூட கூட்டணி அமைத்து திமுகவுக்கு டஃப் கொடுக்க முடியும். ஆக அதிமுகவை நாசமாக்குறது தான் ஜண்டாவோட தற்போதைய அஜென்டாவா?
ஸ்டாலினும் ரகசிய தொடர்பு எடப்பாடி வைத்துள்ளார் என்று தெரிகிறது. இது சட்டசபை தேர்தல் 100 வோட்டில் தோற்றவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். திமுகவை ஒழிக்க பெரிய கூட்டணி அமைவது காலத்தின் கட்டாயம். 134 சீட்டை அதிமுக போட்டியிட்டு மற்ற 100 சீட்டை மற்ற கட்சிகளுக்கு தர வேண்டும். இதில் 120 சீட்டு அதிமுகவுக்கு கிடைக்கும்
உங்கள் கருத்தில் சில ஏற்க முடியாது.தொண்டர்கள் ஒன்றாக இனைவதில் மாற்று கருத்து இல்லை... பண்ணீர்..டிடிவி..சசி எப்படி பட்டவர்கள் என்பது நாடறியும். இவர்கள் உள்ளே பூந்தால் நாளை கட்சிக்கு பேராபத்து. தேர்தலில் எடப்பாடி ஆதரவு பழைய வேட்பாளர்களை தோற்கடிக்க முழு முயற்சி செய்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. இவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. பிஜெபி பாமக தேமுதிக மற்ற சிறிய கட்சிகளோடு இனைந்து ஒற்றுமையா வேலை செய்தால் வெற்றி நிச்சயம்.
சசி..ஒபி எஸ்..டிடிவி..செங்ஸ் இந்த நாலுபேரையும் முதலில் ஒன்னா இருப்பாங்களா..முதலில் அதை சரி செஞ்சுட்டு அப்புறமா இனைவதை பற்றி யோசிக்கலாம்.முதல்வர் வேட்பாளருக்கு நாலு பேருமே அடுச்சுக்குவாங்க...
கட்சி என்றால் கட்டுப்பாடு மிக முக்கியமான ஒன்று. ஆளாளுக்கு குறை சொல்ல முடியாது.அந்த சுயநலமிகள் நாலு பேருமே ஒன்று சேர முடியாத போது, அவர்களை நம்பி கட்சிக்குள் விட்டால் AIADMK சங்கு ஊதல் தான்.
அந்த கார்பொரேட் குடும்பத்திடம் காசு வாங்கிட்டு அதிமுகவை திண்டாடும் எடப்பாடி பற்றி நிஜ அதிமுக உணர்ந்து உதைக்கும் போது ... தஞ்சம் அடைவாரோ ?
நிஜ அஇஅதிமுக தொண்டர்களின் ஒரே நட்சத்திரம் எடப்பாடி மட்டும்தான்.கொஞ்சம் வெளி உலகை எட்டி பாருங்கள்.மாநகரம் நகரம் பேரூர் முதல் குக்கிராமம் வரை அஇஅதிமுக கொடியுடன் கட்சி கிளைகள் எடப்பாடி கண்ணசைவில் இயங்கி கொண்டு தேர்தலுக்கு தயாரா இருக்கு.இதை நான் தொண்டனா செருக்குடன் சொல்கிறேன்.
சுய நலமி. ஸ்டாலினுக்காக ஆ தி மு கா வை குழி தோண்டிப்புதைப்பதற்கான எல்ல முயற்சிகளையும் செய்கிறார். அங்குள்ள கட்சி உண்மையான MGR உண்மையான விஸ்வாசிகள் இதை உணர வேண்டும்.