உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ரூ.1,000 பரிசுத்தொகை கிடைக்காததால் மக்கள் அதிருப்தி! டோக்கன் கூட வாங்காமல் கடும் விரக்தி

ரூ.1,000 பரிசுத்தொகை கிடைக்காததால் மக்கள் அதிருப்தி! டோக்கன் கூட வாங்காமல் கடும் விரக்தி

கோவை: பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் அறிவிப்பு, எப்படியும் வந்து விடும் என்று நேற்று மாலை வரை எதிர்பார்த்திருந்த பொதுமக்கள், அறிவிப்பு ஏதும் வராததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். டோக்கன் வாங்கவே பலர் முன்வராத நிலையில், 10 லட்சம் டோக்கன்கள் வழங்கி விட்டதாக, அதிகாரிகள் பொய்மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு, பொங்கல் தொகுப்பாக வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. கோவையில் கடந்த 3ம் தேதி முதல், பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவங்கியது. இந்த ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக, பொங்கல் தொகுப்பில் 1,000 ரூபாய் வழங்கப்பட மாட்டாது என, அரசு தரப்பில் தெரிவித்ததால், மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதனால் டோக்கன் வாங்குவதில், மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக, கோவை மாவட்டத்தில், பொங்கல் தொகுப்பு வழங்க 10 லட்சம் டோக்கன்கள் வழங்கி விட்டதாக, அதிகாரிகள் பொய் தகவல் தெரிவித்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத ரேஷன் கடை ஊழியர்கள் சிலரிடம் விசாரித்த போது, 'கடந்த ஆண்டு, 1,000 ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு கொடுத்த போது, கியூவில் நின்று டோக்கன் வாங்கி சென்றனர். பலர் டோக்கன் கிடைக்கவில்லை என, அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் இந்த முறை, பணம் இல்லை என்பதால் டோக்கன் வாங்க அழைத்தும், பெரும்பாலான கார்டு தாரர்கள் வரவில்லை. கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு மட்டும், டோக்கன் கொடுத்து இருக்கிறோம். டோக்கன் இல்லை என்றாலும், பொங்கல் தொகுப்பு வழங்குமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல கடைகளில், 50 சதவீதம் பேருக்கு மேல் டோக்கன் பெறவில்லை' என்றனர்.கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணம் இல்லாததால் பொங்கல் தொகுப்பு வாங்குவதில், மக்களுக்கு ஆர்வமில்லை என்பது உண்மைதான். ஆனால் அதை நாங்கள் வெளிப்படையாக கூற முடியாது. மக்கள் அதிருப்தியில் இருப்பது அரசுக்கும் தெரியும். அதனால், இறுதி நேரத்தில் அறிவிப்பு வரும் என்ற தகவலும் உள்ளது. ஆனால் நாளை முதல் (இன்று) பொங்கல் தொகுப்பு வழங்க இருப்பதால், இந்தாண்டு 1,000 ரூபாய் கொடுக்க வாய்ப்பு இல்லை என்பதுதான், தற்போது வரை உள்ள நிலை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Girija Krishnamurthy
ஜன 14, 2025 20:24

மிகவும் அடுக்காத செயல்.இது ஒரு மனிதனுடைய பசி என்கின்ற துயரத்தை போக்காமல் மக்கள் அட்ச எண்வஹாது அர்த்தமற்றது.பொங்கல் விடுப்பு டு மக்கள் பிரேம் மக்களாட்சி ஷௌல்து பொல்லொவ் தி ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் இந்த தி சிஸ்டம் அல்றேஅடி டேபினெட் பய தி கோவேர்ந்மேன்ட் ஒப்பி தமிழ்நாடு லோங் தடவை பாசக்.தேரே ஐஸ் நோ செகண்ட் ஒப்பீனியன் ஓர் செகண்ட் தௌக்த்ட் இந் திஸ்.இட்ஸ் எ ஹியூமன் ரைட்டயஸ்னெஸ் போர் பேசிக் லிவிங் ஸ்டைல்.வாட்டவேர் டார்மெர்ஸ் ஆர் மேக்கிங் போவ்ட் டு பெஒப்லே ஒப்பி தமிழ்நாடு டு பெ குவேன் டு தி பெஒப்லே அட் தி right தடவை ஒப்பி ஹார்வெஸ்ட்.ஒத்தெருவிசே ஆல் லைபெற் & பவர் ஒப்பி மோனே வில்ல பெ எ டோடல் வேஸ்ட் ஹொவ் கம் பெஒப்லே கேன் உபோல்டு திஸ் சோர்ட் ஒப்பி இன்னஹுமன் மனநெரிசம் போர் லிவெளிகூட.சோ தட் தி கொண்ட்ரி கேன் குரோவ் இந்த தி ரைட் வாய்.திஸ் ஐஸ் எ பேசிக் நீட் போர் எ ஹியூமன்.ஹொவ் தி காட் கேன் தேனி திஸ்.தென் திஸ் ஐஸ் எ வ்ரோங் கான்செப்ட் ஒப்பி ரோலிங் டொக்டல்லி & டு பெ விபேவுட் பிரேம் தி கொண்ட்ரி.லா& ஆர்டர் ஷௌல்து பிரிவால் இந்த திஸ் govt.no ஒன்னு கேன் ஓவெர்த்ரோவ் லா & ஆர்டர்.வாழ்க பாரட்வஜ்.வாழ்க தமிழ்நாடு.வாழ்க தமிழ் people.


R. THIAGARAJAN
ஜன 11, 2025 16:24

Sonnathayum seivoum Sollathathayum seivoum Makkalum edhayea seivavargal Varum thearthalil


Aravind
ஜன 11, 2025 13:00

திருடர்கள்.முட்டாள்கள். களவாணிகள் தி. மு. க. ஆட்சிக்கு வந்தால், மக்கள் பல்வெறு நரக வேதனைகளை சந்திக்கும் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம், அம்மா துணியில்லாமல் கஷ்டப்படும் போது மகன் கும்பகோணத்தில் வஸ்தர தானம் செய்தானாம், இந்த பழமொழி திமுக மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல், தமிழின துரோகி கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை வைப்பதற்கான முயற்சியைப் போன்று உள்ளது. நல்லவர்களை ஆட்சி செய்ய தேர்வு செய்திருந்தால் நல்லவற்றைசெய்திருப்பார்கள், திருடர்களை தேர்ந்தெடுத்தனின் விளைவு மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்


PARTHASARATHI J S
ஜன 09, 2025 08:40

கஜனா காலி. மேலும் மேலும் கடன் வாங்க முடியாது. பள்ளிகட்கு நிதி கிடையாது. ஆசிரியர்கட்கு சம்பளம் வந்ததா தெரியாது. இந்த லட்சணத்தில் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாய் எப்படி கொடுப்பார்கள்? பழனிவேல்ராஜனுக்கு இது மிக நன்றாகத் தெரியும். ஸ்டாலின் பொம்மை முதல்வர். அவருக்கு துண்டு சீட்டு வந்தால்தானே ஏதாவது பேசுவார். தூக்கத்திலே கூட 200 சீட் என உளறுவதாக தகவல்.


Padmasridharan
ஜன 09, 2025 08:15

வாடிக்கையா கொடுக்கிற பச்சரிசியை கொடுக்கலப்பா புழுங்கல் அரிசியோட. ஏன்னா பொங்கலுக்கு ஒதிக்கிட்டாங்க போல. இங்க குடிச்சிட்டு சாகிறவனுக்குத்தான் லட்ச கணக்குல நிதி ஒதுக்குறாங்க மொதல்ல.


Balasubramanian
ஜன 09, 2025 06:24

இவர்கள் இனி அடுத்த பொங்கலுக்கு அதற்கு முன் வரும் ரம்ஜான் மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு நிச்சயம் டோக்கன் வழங்குவார்கள்! ஏனெனில் 2026 இல் தேர்தல் வருமே!


அப்பாவி
ஜன 09, 2025 06:22

வாங்குவதிலும் ஒரு கெத்து இருக்கணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை