உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தராவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்

விழுப்புரம் : 'வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை தி.மு.க., அரசு தராவிட்டால், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.

விழுப்புரத்தில் பா.ம.க., சார்பில் நடந்த போராட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என தீர்ப்பளித்து 1,208 நாட்கள் ஆகியும், தி.மு.க., அரசு இட ஒதுக்கீட்டை வழங்க மறுத்து வருகிறது.முதல்வர் ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டு மட்டும் வேண்டும். அவர்கள் முன்னேறவோ, படிக்கவோ, பணிக்கு செல்லவோ, சுயமரியாதையோடு வாழவோ கூடாது.தமிழகத்தில் தற்போது வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு தர ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக அரசுக்கு ஒதுக்கீடு தர அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆனால், ஸ்டாலினுக்கு அந்த எண்ணம் துளியும் இல்லை. ஆந்திரா, கர்நாடகா, பீஹார், ஒடிசா மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தி விட்டனர். ஸ்டாலின் மட்டும் அதிகாரம் இல்லை என கூறுகிறார். இந்திய புள்ளியியல் விபரம் சேகரிப்பு சட்டத்தின் படி, பஞ்சாயத்தில் ஊராட்சி தலைவருக்கு கூட கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உள்ளது. இதை ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க.,வில் 133 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், 23 பேர் வன்னியர்கள், 4 அமைச்சர்கள் உள்ளனர். 5 பேர் எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்கள் உணர்வின்றி உள்ளனர். தி.மு.க.,வை நம்பாதீர்கள் என ராமதாசிடம், அன்றே நான் கூறினேன். அவர், ஸ்டாலினை நம்பினார். தற்போது பட்டை நாமத்தை போட்டு விட்டனர். இட ஒதுக்கீடு தராமல் தமிழகத்தின் வளர்ச்சியை கெடுத்து விட்டனர். இதன் பிறகும், ஸ்டாலின் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தரவில்லை என்றால் அடுத்த கட்டமாக சிறை நிரப்பும் போராட்டம் நடக்கும். அதன் பிறகு சாலை மறியல் நடக்கும். இவ்வாறு அன்புமணி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 22, 2025 00:46

அமீத்சா, மோடி ரோட் ஷோ-க்கு வந்த கூட்டத்தை விட அதிக கூட்டம் வந்திருக்கே


T.sthivinayagam
ஜூலை 21, 2025 21:07

பாட்டாளி மக்கள் கட்சி என்று கட்சிக்கு பெயர் வைத்து கொண்டு வன்னியர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சொல்வது எந்தவிதமான சமுகநீதி என்று பாட்டாளிகள் கேட்கிறார்கள்


தமிழ்வேள்
ஜூலை 21, 2025 20:34

உள் ஒதுக்கீடு என்பதே பெரிய ஃபிராடுத்தனம்... முதலில் பொதுப் போட்டி அலாட்மென்ட்..பிறகு அந்த சாதி உள்ள பிசி அல்லது எம்பிசி ஒதுக்கீடு...பிறகு உள் ஒதுக்கீடு... கணக்கு பார்த்தால் 20 சதத்துக்கு மேல் ஒரே சாதி நிரம்பி வழியும்..பிறகு எல்லா பயலுக்கும் சொந்த ஊர் மாறுதல் கேட்பான்... அப்புறம் கன்யாகுமரி மாவட்ட அல்லேலூயாக்கள் வாத்தியார் போஸ்டிங் ஆங்கிரமித்தது போல எங்கும் ஒரேசாதி அக்கப்போர்... ராமதாஸ் வகையறாக்கள் நீண்ட கால சதித்திட்டம் தீட்டுகிறார்கள்..


Subburamu Krishnasamy
ஜூலை 21, 2025 18:00

Ramadass family is exploiting the caste sentiments. By sentimental talks his family is growing and not the poor peoples believing such looters. Within the family they are fighting each other for power. Then how they help orher fellows. Highly selfish family not good for the state politics


குடிகாரன்
ஜூலை 21, 2025 16:58

மரம் வெட்டி கட்சி மக்களை பிரிக்கும் கட்சி இவர்கள் ஒழிய வேண்டும்


Kanns
ஜூலை 21, 2025 12:26

Send All these Fake VKKshatriyas to Jail under Goonda Act for Safe -Peaceful Living by Others& For Public Order-Peace. No Original Kshatriyas Will Ask Degraded MBC etc Status


D Natarajan
ஜூலை 21, 2025 06:33

வன்னியருக்கு மட்டும் தானா இட ஒதுக்கீடு . மற்ற சாதியர்களும் போராட தொடங்கினால் என்ன ஆகும் . சாதிக் கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டும். பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதிக்கீடு தேவை.


SUBBU,MADURAI
ஜூலை 21, 2025 12:14

எடப்பாடி முதல்வராக இருந்த போது தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த சமுதாயத்திற்குமான 20% சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தார். இதனால் மற்ற சமுயாயத்தினரின் கோபத்துக்கு ஆளானார். குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிகம் உள்ள எங்கள் கள்ளர் இனத்தை உள்ளடக்கிய முக்குலத்தோரை இது பெரிதும் அதிர்ச்சியடைய செய்தது அந்த கடுங் கோபத்தின் விளைவுதான் அந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தோற்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே திமுக இந்த வன்னியர்களின் இட ஒதுக்கீடு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.


அப்பாவி
ஜூலை 21, 2025 05:03

எங்கேடா எலக்‌ஷன் டயத்திலே இந்த பல்லவிய்சி எடுத்துப் பாடலியேன்னு நினச்சேன். ஆரம்பிச்சுட்டாரு.


naranam
ஜூலை 21, 2025 04:42

ஜாதி வெறி மற்றும் பதவி வெறி பாமக என்ற இந்தத் தீய கட்சி தீய சக்தி முற்றிலும் ஒழிந்தால் தமிழகத்துக்கு ரொம்ப நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை