உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சீமான் கட்சி நிர்வாகிக்கு வந்த அழைப்புகள்: என்.ஐ.ஏ., ஆய்வு

சீமான் கட்சி நிர்வாகிக்கு வந்த அழைப்புகள்: என்.ஐ.ஏ., ஆய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : விடுதலை புலிகள் தொடர்பு குறித்து, சீமானின் நாம் தமிழர் கட்சி நிர்வாகி, 'சாட்டை' துரைமுருகன் உள்ளிட்டோருக்கு வந்த வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகள், பணப் பரிமாற்றம் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான சாட்டை துரைமுகன், இசை மதிவாணன் வீடுகளில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தி, மொபைல் போன், 'பென்டிரைவ்' உள்ளிட்ட, 'டிஜிட்டல்' ஆவணங்களை கைப்பற்றினர். அதன்பின், துரைமுருகன் உள்ளிட்ட மூவரிடம் பல மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். விடுதலை புலிகள் தொடர்பாக, துரைமுருகனிடம் இருந்து, 1,500 வீடியோக்களையும் பெற்றுள்ளனர்.இதுகுறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: 'துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தயாரித்தவர்களுக்கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான், 'யு டியூப்'பில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களை பார்த்து, வெளிநாடுகளில் இருந்து பலர் அழைத்து பாராட்டுவர். அவர்கள் யார் என அறிமுகம் இல்லை' என, துரைமுருகன் கூறினார்.ஆனால், விடுதலை புலிகள் அமைப்பினரிடம் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் விதமாக, துரைமுருகன் உள்ளிட்டோரின் மொபைல் போனுக்கு வெளிநாட்டு அழைப்புகள் வந்துள்ளன. அதிகபட்சமாக, ஜெர்மனியில் இருந்து சந்தேக நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் பண பரிமாற்றம் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

A1Suresh
பிப் 17, 2024 13:16

"பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்" என்றார் வள்ளுவர். எனவே நாட்டிற்கு எதிராக யார் பேசினாலும் உடனே நடவடிக்கை எடுக்காவிடில், தமிழகத்தில் மாண்புமிகு முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ்காந்தி அவர்களை பறிகொடுத்தது போல ஆகிவிடும். தேசவிரோதத்தினை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்


A1Suresh
பிப் 17, 2024 13:13

"வருமுன் காப்பவன் தான் அறிவாளி. துயர் வந்தபின்னே காப்பவன் தான் ஏமாளி". இவ்வளவு காலம் மத்திய பாதுகாப்புத்துறை தூங்கிக்கொண்டிருந்தது போலும். பிரச்னை எழும்பொழுதே தீர்க்கவேண்டும்.


Raj
பிப் 17, 2024 12:55

சீமான், சேட்டை துரைமுருகன், இசை மதிவாணன். இன்னும் பலர் தமிழ் பெயர்களில் திரியும் அந்த கட்சியில் உள்ளவர்கள் 99% பேர் பீட்டர் அண்ணன்கள். சைமன் அண்ணன் வருமானம் இல்லாமலா பல வருஷங்களாக கட்சி நடத்திக்கொண்டுள்ளார்? இங்கிருக்கும் இவரது தம்பிக்கள் பத்து ரூவாய்க்கு கூட தேறமாட்டார்கள். யூரோவும், டாலர்கழும் இல்லாமல் இத்தனை வருடங்கள் இப்படி வண்டி ஓட்ட முடியுமா? அங்கு தனி ஈழம் என்று தூண்டிவிட்டு, பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது தான் மிச்சம். இப்போது இங்கு தமிழன், விவசாயி, அரசியல் என்ற போர்வையில் பிரிவினைவாதம் பேசி தனித் தமிழ் நாட்டிற்கு வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஹிட்லர் போன்று கையை ஆட்டி கத்திகத்தி பேசி அரைகுறை அறிவு கொண்ட இளைஞர்களை இழுத்துக்கொண்டு, கட்சி என்ற பெயரில் நாட்டை ஏய்த்து காசு பார்ப்பது இவர்களின் குறிக்கோள். யாஸீன்மாலிக்கை மேடையில் வைத்துக்கொண்டு அவர் தலையில் அடிப்பார், நாம் காலில் காப்போம் என்று கூவியபோதே கழுத்தை பிடித்திருக்க வேண்டும், அன்று விஷயத்தை மத்திக்கு கொண்டு செல்ல ஆளில்லை, இன்று அப்படியல்ல. தும்பிகளின் கதறல்களை கண்டுகொள்ளாமல் விட்டாலே போதும். இவர்கள் இம்சை நீங்கிவிடும்.


நரேந்திர பாரதி
பிப் 17, 2024 09:42

நானும் சாட்டை துரைமுருகனின் பல ஊடக காணொளிகளில் தீயமூகவை கழுவி ஊற்றியதை பார்த்து, சரி இவரும் ஒரு தேசிய பார்வை கொண்ட ஒரு இளைஞர் என நினைத்தது பொய்த்துப்போனது... இந்த கூட்டமும்


கனோஜ் ஆங்ரே
பிப் 17, 2024 12:13

நீ மட்டும் இல்ல... உன்ன மாதிரி நிறைய ஆளுங்க... உங்க எதிரிய திட்டுறான்ன உடனே சும்மா குளுகுளு..ன்னு இருந்திருக்குமே... உங்க கூட்டமே இப்படித்தானே... வடிவேல் காமெடி வசனம் மாதிரி “உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு சார்”


Sridhar
பிப் 17, 2024 12:28

இவர் தமிழ் தேசீய பார்வை கொண்டவர் அதனால்தான் சீமான் கட்சியில் இருக்கிறார். இந்திய இறையாண்மையின் மீது நம்பிக்கை அற்றவர்கள், தனி தமிழ்நாடு என்ற எண்ணத்தை ஆசையை மனம் நிறைய வைத்துக்கொண்டு அதை வெளிப்படையாக சொல்ல தயிரியமோ திராணியோ அற்றவர்கள். சிறு நாடான இலங்கையே இவர்கள் போற்றி வழிபடும் கடவுளான பிரபாகரணை துவம்சம் செய்ததை பார்த்தபின்பு நிச்சயமாக இந்தியாவை எதிர்த்து ஆயுத போராட்டங்களில் ஈடுபடும் தைரியம் இவர்களுக்கு வராது. அதனால்தான் ஜனநாயக வழி என்று சொல்லிக்கொண்டு அரைகுறை வயதில் இருக்கும் இளைஞர்களை பேச்சுக்கள் மூலம் கவர்ந்திழுத்து பிற்காலத்தில் எப்படியாவது ஆட்சியை பிடிக்கும் சந்தர்ப்பம் அமைந்தால், அந்த சூழ்நிலையில் சதிவேலைகளில் ஈடுபடலாம் என்று யோசிப்பார்களே தவிர, இப்போதே வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர் மாதிரி தெரியவில்லை.


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 17, 2024 12:57

தமிழகத்தில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் கட்சி ஒன்று அதிகாரத்திலும் உள்ளது ...... அதன் மீது நடவடிக்கைக்கு வாய்ப்பே இல்லை ....... காரணம் தேர்தலுக்குப் பின்பு (பெரும்பான்மை கிடைக்காவிட்டால்) வரப்போகும் உறவு .......


duruvasar
பிப் 17, 2024 09:31

எதுக்குங்க இவ்வளவு ஆராய்ச்சி நம்ம செபாஸ்டின் சைமன் ( சீமான்) அண்ணாச்சி இன்று கைதாகி சிறையிலுள்ள ஜம்மு காஷ்மீர் தீவிரவாதி யாசின் மாலிக் தமிழகம் வந்த பொழுது அவனை மேடையில் வைத்துக்கொண்டு வடக்கிற்க்கு அவனும் தெற்கிக்கிற்க்கு நானும் நாட்டை காக்கும் காவல் தெய்வங்கள் என பேசிய காட்சிகள் வலைதளங்களில் வந்திருந்தது. எனவே இந்த காவல் தெய்வங்களுக்கு பூசை போட்டால் விவரங்கள் தெரியவரலாம்..


PRAKASH.P
பிப் 17, 2024 08:24

Bjp willl loose their votes again


Sck
பிப் 17, 2024 13:31

, பாஜகவிற்கு ஓட்டுகள் கூட வாய்ப்புதானே தவிர குறைய வாய்ப்பில்லை .


RAJ
பிப் 17, 2024 08:10

நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிபவர்களை கழுவில் ஏற்றுங்கள்...கருணை வேண்டாம்


ramani
பிப் 17, 2024 06:36

தேச துரோகிகள். தேசத்தை துண்டாட நினைக்கும் அனைத்து நாதாரிகளும் அழிவார்கள்


ranjan
பிப் 17, 2024 06:27

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு குஜராத்தி அவன் மொழி காரனிடம் பேசுவான் அது தவறா. ஒரு தமிழன் வெளிநாடு தமிழனிடம் பேசுவது எப்படி தவறாகும். பொய் வழக்கு போடும் பிஜேக்கு மக்கள் சரியான பாடம் புகடுவார்கள்.


Sck
பிப் 17, 2024 13:36

அரைவேக்காடுங்களா. எதையும் தெளிவாக தெரிந்து கொள்வது கிடையாது. இந்த சாட்டபய ஒழுங்கா தான் வாழ்ற நாடடபத்தி நல்ல முறையில் பேசினால் ஏன் இவ்வளவு கெடுபுடி.


ராமகிருஷ்ணன்
பிப் 17, 2024 06:11

வெத்துவேட்டு வாய்ஜாலம் காட்டி திமுக தமிழகத்தை நாசம் செய்தது போல அடுத்து கிளம்யுள்ள வாய்ஜால தீவிரவாத கும்பல் இது. தெருக்களில் வாயாலேயே குரளிவித்தை காண்பித்து கூட்டம் சேர்ப்பது இவர்களின் திறமை.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை