வாசகர்கள் கருத்துகள் ( 14 )
புரட்சிதலைவியால் மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்தான்.சீனியர் என்பதற்காக ஓவரா போகக்கூடாது.இவரை விட சீனியர் தொண்டர்கள் கட்சியில் உண்டு.அடையாளம் கொடுத்த கட்சி அஇஅதிமுக.கெடு கொடுப்பதற்கெல்லாம் தலைமை பயந்தால் நாளை ஒவ்வொருத்தனா கிளம்புவானுங்க...இவரை இயக்குவது சசி கும்பல்தான்.கட்டுசோற்றில் பெருச்சாலிய விட்ட கதையாகி விடும் வெளியேற்ற பட்டவர்களை மீண்டும் சேர்த்தால்..உள்ளே இருந்து கொண்டு உள்ளடி வேலை பார்ப்பார்கள்.
அதிமுகவில் ஸ்லீப்பர் செல்கள் பலர் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் செங்கோட்டையன் ஒரு ஸ்லீப்பர் செல் என்பது தான் ஆச்சிரியமாக உள்ளது. இருப்பினும் பத்து நாட்களுக்கு பின்னர் இவரும் ஒரு தர்மயுத்தம் என்று இவரது ஆதரவாளர்கள் மற்றும் ஓபிஎஸ் சசிகலா ஆதரவுடன் நடத்துவார். போட்டி பொதுக்குழு கூட்டம் நடத்துவார் திமுக ஆதரவோடு. தேர்தல் கமிஷன் இடம் மனு கொடுத்து இரட்டை இலை சின்னம் முடக்க ஏற்பாடு செய்வார். பின்னர் தேர்தலுக்கு இரண்டு மூன்று மாதங்கள் முன்பு இரட்டை இலை சின்னம் நிறுத்தி வைக்க கோர்ட்டில் வழக்கு கொடுப்பார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு பழனிச்சாமி தேர்தலில் தோற்க வேண்டும். இந்த எம்ஜிஆர் ஜெயலலிதா கதையெல்லாம் அப்போது மறந்து அதிமுக தோல்வியில் சந்தோஷப்படுவார். இவரது சந்தோஷம் பலமாக இவரை ஸ்லீப்பர் செல் ஆக நியமித்தவர்கள் கோடிகளில் பணம் கொடுப்பார்கள். அந்த பணம் மற்றும் அவர்களின் வக்கீல்கள் உதவியோடு மீண்டும் பழைய குருடி கதவை திறடி என்பது போல இவ்வளவு நாள் ஓபிஎஸ் கோர்ட்டில் வழக்கு போட்டு பழனிச்சாமிக்கு இடைஞ்சல் கொடுத்தது போல் இவரும் மறுபடியும் ஆரம்பிப்பார். சசிகலா சந்தோஷமாக நிம்மதியாக வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் ரசிப்பார். ஸ்டாலின் இரண்டாம் முறை தொடர் வெற்றி முதன்முறையாக திமுக பெற்றுள்ளது அதுவும் கருணாநிதி இல்லாமல் ஆகவே நான் தான் உலகில் சிறந்த தலைவன் எனக்கு நோபல் பரிசு வேண்டும் என்று ட்ரம்ப் பாணியில் விளம்பரம் தேடுவார். ரஜினி கமல் விஜய் போன்ற திரையுலக பிரபலங்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைப்பார்கள். தமிழகமே சந்தோஷ கடலில் மிதக்கும்.
தலைமை மாறும்போது இப்படி சீனியர் உறுப்பினர்களின் அதிருப்தி ஏற்படுவது சகஜம்தான். இப்படி கெடுவெல்லாம் கொடுத்து மிரட்டி இவர் ஒன்றும் சாதிக்கப்போவதில்லை. சில வாரங்களில் இவர் ஸ்டாலின் முன்னிலையில் திமூகவில் ஐக்கியமாவது உறுதி .
என்ன சொல்ல வருகிறார் செங்கோட்டையன் ? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலம் வேறு. இன்றைய காலம் வேறு. எம்.ஜி.ஆர் காலத்தில் எஸ்.டி.எஸ் தனிக்கட்சி ஆரம்பித்தார். தான் தான் அ.தி.மு.க எனக் கூறவில்லை. அவர் படுதோல்வி அடைந்த பின்னர் எம்.ஜி. ஆரிடம் மன்னிப்பு கோரி மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தார். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மனதார ஜானகி, ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். அவரிடம் இருந்த ஆர்.எம்.வீரப்பனையும் சேர்த்துக் கொண்டார். ஆனால் ஆர்.எம்.வி. என்ன செய்தார்? கருணாநிதியுடன் தொடர்பில் இருந்து பாட்ஷா பட விழாவில் ரஜினியை ஜெயலலிதாவை எதிர்த்து பேச வைத்து. 1996 தேர்தலில் ரஜினியை வாய்ஸ் கொடுக்க வைத்து அ.தி.மு.கவை தோற்கடித்தார். உண்மையாக மனம் திருந்தி வந்தவர்களை ஜெயலலிதா ஏற்று கொண்டார். இன்று எடப்பாடியும் எத்தனையோ பேர் திரும்ப வரும் போது ஏற்றுக் கொண்டுதான் உள்ளார். துரோகிகள் மீது ஜெயலலிதாவும் சாட்டையை சுழற்றினார். நெடுஞ்செழியன், திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.ஆர், இவர்களை கட்சியில் இருந்து நீக்கி உதிர்ந்த ரோமங்கள் என்றார். சரி இன்றைய காலத்திற்கு வருவோம். ஓ.பி.எஸ் என்ன செய்தார்? தருமரை ராஜ்ய சபா எம்பி ஆக்க எடப்பாடிக்கு எவ்வளவு குடைச்சல் கொடுத்தார்? எடப்பாடி ஒற்றைத் தலைமை ஆனவுடன் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உட்பட எத்தனை பேர் ஓ.பிஎஸ்சிடம் சமாதானம் பேசினார்கள்? பொருளாளராக தொடருங்கள் மிகவும் கெளரவமாக அ.தி.மு.க விலேயே தொடருங்கள் என வற்புறுத்தினார்கள். கேட்டாரா? இன்று நிபந்தனை இன்றி அ.தி.முகவில் இணைகிறேன் என்பவர் என்ன செய்தார்? எல்லா நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்து எடப்பாடியை தொடர்ந்து அலைய விட்டுக் கொண்டிருக்கிறார்? பொதுக் குழு நடந்து கொண்டிருக்கும் போது அ.தி.மு.க அலுவலகத்தில் தாக்குதல் நடத்தி ஆவணங்கள் எடுத்து செல்லப் பட்டன யார் காரணம்?. எடப்பாடிக்கு பத்து நாள் கெடு விதிக்கும் செங்கோட்டையன் அந்த பத்து நாள் கெடுவுக்குள் ஓ.பி.எஸ் ஐ வழக்குகளை எல்லாம் வாபஸ் வாங்க கெடு விதிப்பாரா? இவ்வளவு யோக்கியமாக பேசுகிறாரே செங்கோட்டையன் ? ஜெயலலிதா காலமாக இருந்திருந்தால் ஜெயலலிதாவை எதிர்த்து பி.ஜே.பி தலைவர்களை டெல்லி சென்று சந்தித்து இருப்பாரா? இன்று வரை எடப்பாடி பொறுமையாகத்தானே இருக்கிறார்? தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை எடப்பாடியை தற்க்குரி என்றாரே? செங்கோட்டையன் காட்டிய ரியாக்சன் என்ன? பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் அதிமுக கூட்டணி சேராமல் தடுக்க அண்ணாமலை முனைப்பு காட்டினார். அதை ஏன் செங்கோட்டையன் கூற மறுக்கிறார்? தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்து நடத்திக் கொண்டுள்ளார் ? அவர் என்றைக்காவது தனது கட்சியை அ.திமுகவுடன் இணைக்கிறேன் எனக் கூறியுள்ளாரா? எடப்பாடி உறுதிமிக்க தலைவராக இருப்பதால்தான் எதிரிகளையும், துரோகிகளையும் ஒரு சேர சமாளித்து கட்சியை உயிர்ப்புடன் வைத்துள்ளார். செங்கோட்டையனின் குட்டையை குழப்பும் செயல் என்றும் வெற்றி பெறப் போவதில்லை.
Very good
எடப்பாடி உறுதிமிக்க தலைவராக இருப்பதால்தான் எதிரிகளையும், துரோகிகளையும் ஒரு சேர சமாளித்து கட்சியை உயிர்ப்புடன் வைத்துள்ளார்.மிகசிறந்த கருத்து
. பி டீம்
இல்லைன்னா?
கோட்டையை பிடிக்க செங்கோட்டையன் மனம் திறந்துள்ளார். இன்று தெலுங்கானாவில் கேசிஆர் வீட்டிற்குள்ளே பிரிவினையை உண்டாக்கி விட்டது
அதிமுக தொண்டர்களால் சின்னாத்தா போல் ஓரம் கட்ட படுவார்....
இவர் நல்லவரா இல்லை கெட்டவரா ?.
எம்.ஜி.ஆர். -ஜெயலலிதா காலத்திலிருந்தே கட்சியில் முக்கிய பொறுப்புக்களில் இருந்த அ.தி.மு.க.வின் மூத்த தலைவரான செங்கோட்டையன் மனம் திறந்து கூறிய அனைத்துமே வரவேற்க தக்கது. இது வெறும் அ.தி.மு.க.வில் உள்ள உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை உள்ள எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா விசுவாசிகளின் கருத்து மட்டுமல்ல, தி.மு.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது என்ற எணணத்தில் செயல்பட்டு வரும் தமிழகத்தில் உள்ள கட்சிகளோடு தமிழகத்தின் பெரும்பான்மை மக்களும் கூட இதே கருத்தை தான் கொண்டுள்ளனர். அரசியல் களத்தில் புதிதாக இறங்கி இருக்கும் விஜய் தி.மு. க. எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்க இருக்கும் சந்தர்பத்தை பயன்படுத்தி எடப்பாடி யார் முதல்வராக வருவதற்கு நயினார் தலைமையில் இயங்கும் தமிழக பா.ஜ.க. ஆதரவு மட்டுமே போதாது என்று யதார்த்த உண்மையை எடப்பாடியார் நன்கு உணர வேண்டும். எனவே கட்சியிலிருந்து வெளியேறிய மற்றும் வெளியேற்ற ப்பட்டவர்களை எடப்பாடியார் மீண்டும் அரவணைத்து பழைய எம்.ஜி.ஆர் காலத்திய அ.தி.மு.க.வை மீண்டும் தமிழகத்தில் செயலாற்றகூடிய வழியை உருவாக்க முன்வர வேண்டும். இதை செய்ய தவறினால் விஜய் ஆரவார அரசியல் பிரவேசத்தால் கூட தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுத்து நிறுத்த முடியாது. இதற்கு துணை நின்ற எடப்பாடியாரை மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.