உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / இபிஎஸ்.,க்கு எதிராக அணி திரளும் அதிருப்தியாளர்கள் தீவிர ஆலோசனை

இபிஎஸ்.,க்கு எதிராக அணி திரளும் அதிருப்தியாளர்கள் தீவிர ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் அணுகுமுறையால் அதிருப்தி அடைந்துள்ள மூத்த தலைவர்கள், தனியே ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தன்னிச்சையாக செயல்படத் துவங்கி உள்ளார். அவரது அணுகுமுறை, மூத்த தலைவர்கள் பலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., துவங்கப்பட்டது முதல், கட்சியில் இருக்கும் மூத்த தலைவரான செங்கோட்டையன், கடந்த மார்ச்சில் பழனிசாமி மீதான தன் அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1okaeo48&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால், பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் பிரச்னையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சிக்கு எதிராக அவர் எதையும் செய்யவில்லை. அதிருப்தி இருந்தாலும், கட்சிதான் முக்கியம் என செயல்பட்ட செங்கோட்டையனை, நேரிலோ, தொலைபேசியிலோ பழனிசாமி அழைத்து சமாதானப்படுத்துவார் என, கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், பிரசார பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமியின் அணுகுமுறை, மீண்டும் கட்சிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் திருப்பத்துாரில் பழனிசாமி பேட்டி அளித்தபோது, உடனிருந்த மூத்த தலைவர் தம்பிதுரை குறுக்கிட்டு பேச முயன்றார். அதனால் கடுப்பான பழனிசாமி, அவரின் கையை பிடித்து இழுத்து பேசாமல் தடுத்தார். அதுபோல, மதுரையில் பழனிசாமியின் காரில் ஏற முயன்ற முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜுவை தடுத்து, வேறு காரில் வருமாறு கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர், இரண்டு முறை லோக்சபா துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை மற்றும் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு போன்ற மூத்தவர்களிடம், பழனிசாமி நடந்து கொண்ட விதம், அ.தி.மு.க., முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்நிலையில், பழனிசாமி மீது அதிருப்தி கொண்ட முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, முன்னாள் எம்.பி., மைத்ரேயன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்திக் தொண்டைமான் என, அ.தி.மு.க., பிரமுகர்கள் அடுத்தடுத்து தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். இது கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், கட்சியில் அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர், தம்பிதுரை, செல்லுார் ராஜு ஆகியோரிடம், தொலைபேசியில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தி உள்ளனர். இவர்கள், பழனிசாமிக்கு எதிராக விரைவில் போர்க்கொடி துாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., எந்த தேர்தலிலும் வெற்றி பெறவில்லை. ஆனாலும், தன்னை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல நினைத்து பழனிசாமி செயல்படுகிறார். பிரசார பயணக் கூட்டங்களுக்கு கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து, கட்சித் தலைவர்கள் யாரும் இல்லாமலேயே தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும் என நம்புகிறார். கட்சியில் தன்னை விட சீனியர்களாக இருப்போரின் அதிருப்தியை களைய முற்படாமல், 'நடப்பது நடக்கட்டும்' என நடந்து கொள்கிறார். தம்பிதுரை போன்ற மூத்த தலைவர்கள் கூட, தனக்கு ஈடாக பொதுவெளியில் பேசாமல், பொம்மை போல் இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதனால்தான், பலர் தி.மு.க.,வுக்கு செல்கின்றனர். பழனிசாமி தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளா விட்டால், அதிருப்தியாளர்களை வைத்து, தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.,வை உடைக்கும் வேலையை தி.மு.க., செய்யும். இதை உணர்ந்து பழனிசாமி செயல்பட வேண்டும். இவ்வாறு கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kadaparai Mani
ஆக 17, 2025 11:54

Dmk and Stalin family scared of EPS now. The way public responding to EPS on dmk strongholds scaring dmk jalra media and so called senior journalists. MGR kodai/thanam creating great leaders like hon.Amma and strategic leader EPS. EPS real protector of Aiadmk now.All senior leaders now very well know that the next government is Aiadmk government. They are not like Anwar raja and maithreyan one vote category.


Oviya Vijay
ஆக 16, 2025 15:20

என்னிடம் டைம் மெஷின் என்ற ஒன்று மட்டும் இருந்தால் 2026 தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளுக்கு இப்போதே சென்று அதிமுக எந்த அளவிற்கு உடைந்திருக்கிறது என்பதைப் பார்த்து விட்டு வந்து விடுவேன்... அன்றைய நாளில் இவரின் பரிதாப நிலையைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறேன்... கண்ணாடி ஒன்று உடைந்தால் எவ்வாறு சுக்கு நூறாக உடையுமோ அந்த அளவிற்கு அதிமுக என்னும் பேரியக்கம் சிதறிப் போகப்போகிறது...


Nagendran,Erode
ஆக 16, 2025 19:13

அப்படியே அந்த டைம் மெஷினில் ஏறி முற்காலத்துக்கு சென்று அப்பத்தை திருப்பி கொடுத்து விட்டு மீண்டும் இந்துவாக மாறி வந்தால் நன்றாக இருக்கும்....


mohana sundaram
ஆக 16, 2025 12:35

அயோக்கியத்தனத்தை ஒழித்துக் கட்டுவது அண்ணா திமுகவிற்கு நல்லது. இந்த நம்பிக்கை துரோகி எட்டப்பன் இருக்கும் வரை அக்கட்சி உறுபடப்போவதில்லை.


SP
ஆக 16, 2025 10:45

எடப்பாடியார் நீங்களான அதிமுக வெற்றி பெறும் அதற்குண்டான நடவடிக்கையை எடுக்கவேண்டும்


veeramani
ஆக 16, 2025 10:08

அதிமுக கட்சி துவங்கியதிலிருந்து அனுதாபியாக இருக்கும் ஒருவரின் கருத்து 1972 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் துவங்கியபோது பலரிடம் கட்சிக்கொடி வாங்கக்கூட பணமில்லை. 1974ல் தலைவர் தென் தமிழகத்தில் அருப்புக்கோட்டையில் இரட்டையிலையில் போட்டியிட்டார். தலைவருக்கு வேலைபார்த்தோம் மிகப்பெரிய வெற்றி பெற்றார் எதிர்த்து போட்டியிட்ட ஜனதாதள சிவசாமி டெபாசிட் வாங்கையளவில்லை. பின்னர் தொடர்ச்சியாக சுமார் 13வருடங்கள் ஆட்சியில் இருந்தார். பின்னர் தலைமையில் மாற்றம் ஏற்பட்டு, பல ஆரம்ப கால தொண்டர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். ஆயினும் கட்சியில் இவர்கள் தொடர்ந்து பங்களித்தனர். இன்னும் தென் மாவட்டங்களில் சுமார் 60 தொகுதிகளில் இரட்டை இலை வாக்கு வங்கி மாறவில்லை . ஈன்றபொழுதில் கொங்கு நாட்டு விவசாயி பழனி சாமி அருமையாக கட்சியை வழிநடத்தி செல்கிறார் . சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும் .ஆயினும் தன காலில் நின்று கட்சி நடத்துகிறார் வெட்டப்பட்ட கை , பானை, சுத்தியல் போல் அடுத்த வர்களை சார்ந்து நிற்கவில்லை. இதுவே பெரிய சாதனை.


Sun
ஆக 16, 2025 08:19

புதுக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் ஏற்கெனவே தி.மு.கவில் இருந்து அதிமுக வந்தவர்தான். மீண்டும் தி.மு.க சென்று விட்டார். செல்லூர் ராஜீவை காரில் ஏற வேண்டாம் என்றதாலும், இதற்கான பதிலை நானே சொல்கிறேன் என தம்பிதுரையிடம் சொன்னதாலும் அ.தி.முக. உடைந்து விடுமா? என்ன செங்கோட்டையன் ஒரு வருடமாகவே பூச்சாண்டி காட்டிக் கொண்டுதான் இருக்கிறார் அவருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆதரவாவது உள்ளதா?


maan
ஆக 16, 2025 07:45

எடப்பாடி செய்வது சரியே. இல்லன்னா கட்சி நடத்த முடியாது. இந்த அதிருப்தி தலைவர்கள் தனியா நின்னா டெப்பாசிட் கூட வாங்க மாட்டார்கள். பழம் பெருச்சாளிகள்.


நரேந்திர பாரதி
ஆக 16, 2025 04:40

"பழனிசாமி தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ளா விட்டால், அதிருப்தியாளர்களை வைத்து, தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.,வை உடைக்கும் வேலையை தி.மு.க., செய்யும்..." இன்னும் உடைக்கிறதுக்கு அங்க என்னடா இருக்கு???


சமீபத்திய செய்தி