வாசகர்கள் கருத்துகள் ( 3 )
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு ஆவண பதிவுக்கு குறைந்தபட்சம் 1500 ரூபாய் பதிவுக்கு தாக்கல் செய்பவரிடம் மறைமுகமாக வசூல் நடைபெறுகிறது, ஆவண பதிவுக்கு பொதுமக்கள் ஆவண எழுத்தரை நாடுகின்றனர். எந்த ஆவண எழுத்தர் சார்பதிவாளரை நன்றாக கவனிக்கிறாரோ அவரது ஆவணங்கள் விரைவாக பதிவு செய்யப்படுகிறது. நான் வழக்கறிஞராக என்னை நாடி வரும் மக்களுக்கு ஆவணம் தயார் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய உதவி வருகிறேன். சார்பதிவாளர் அலுவலகத்தில் இதுவரை லஞ்சம் கொடுத்ததில்லை. அதனால் நான் சமர்ப்பிக்கும் ஆவணம் வேண்டுமென்றே முறையான காரணம் இல்லாமல் இழுத்தடிக்கப்படும் அல்லது அலைக்கழித்து பதிவு செய்யப்படும். கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் ஒரு ஆவணத்திற்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 1500 ரூபாய் சார்பதிவாளர் உட்பட அலுவலக ஊழியர்களுக்கும் லஞ்சத்தில் பங்கு. இதுகுறித்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் முறையீடு செய்தாலும் கண்டுகொள்வதில்லை, ஊழலில் அவர்களுக்கும் பங்கு போகும் போல... பதிவு துறையில் ஊழல் இல்லாத நேர்மையான வெளிப்படையாக அனைத்து ஆவண பதிவுகளும் நடைபெறுவதாக அரசு விளம்பரபடுத்துவதே தவிர எந்த உண்மையும் இல்லை. பதிவு துறை ஊழலில் இயங்கி கொண்டிருக்கிறது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பொதுமக்கள் நேரடியாக தங்கள் ஆவணத்தை பதிவு செய்வர்.
இதெல்லாம் சும்மா உளு உளுவா... சார்பதிவாளர் அலுவலகம் முழுவதும் ஏஜன்டுகள் ஆதிக்கம் தான். ஊழல் என்று ஒன்று இருக்கும் வரை இது மாறாது.
சார்பதிவாளர் ஏஜெண்ட்டை அணுகச் சொல்வார். ஏனெனில் லஞ்சம் அவர் மூலமாகத் தான் போகிறது. நேரடியாக வாங்குவதில்லை. இன்னொரு விஷயம் என்னவென்றால் பத்திரம் பதிவு செய்த நாளிலேயே சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற விதி எல்லாம் கடைபிடிப்பதில்லை. ஆனால், அந்நாளிலேயே பெற்றுக் கொண்டதாக ரெஜிஸ்திரில் கையெழுத்து வாங்கி விடுகிறார்கள். அந்த ரிஜிஸ்டர் செய்யப்பட்ட பத்திரம் சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்க ஒரு மாதம் வரை இழுத்தடிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்டவர் ஏற்கனவே பெற்றுக் கொண்டதாக கையெழுத்து போட்டுக் கொடுத்திருப்பதால் இந்த இழுத்தடிப்பு குறித்து சார்பதிவாளர் மீது புகார் அளிக்க முடியாது. சார்பதிவாளர்களின் மூளை எப்படியெல்லாம் வேலை செய்கிறது பாருங்கள். ஏனெனில் ஒரு பெரிய ஊரில் போஸ்டிங் வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறதாம். அதில் குறிப்பிட்ட சதவிகிதம் மேலிடத்திற்கு அமைச்சர்கள் தர வேண்டுமாம். மேலும் போஸ்டிங் என்பது ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை என்பதால் அந்த மூன்று கோடி பிளஸ் லாபம் என்று அந்த போஸ்டிங் காலத்திற்குள் சார்பதிவாளர்கள் சம்பாதித்துக் கொண்டு விட வேண்டும். எப்படி இந்த டீல் !!! ......அருமையாக இருக்கிறது அல்லவா ????
மேலும் செய்திகள்
பதிவுத்துறை இணையதளம் அடிக்கடி முடங்குவதால் அவதி
20-Dec-2025