உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / அனைத்து பணிகளுக்கும் மாநில அரசுதான் பொறுப்பு: பரந்துார் விமான நிலையம் குறித்து மத்திய அரசு பதில்

அனைத்து பணிகளுக்கும் மாநில அரசுதான் பொறுப்பு: பரந்துார் விமான நிலையம் குறித்து மத்திய அரசு பதில்

'பரந்துாரில் விமானநிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி உட்பட அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து, அமல்படுத்தி நிறைவேற்ற வேண்டிய முழு பொறுப்பும் தமிழக அரசையே சார்ந்தது' என்று, பார்லிமென்டில் மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.ராஜ்யசபாவில் நேற்று அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை, ''தமிழகத்தின் பரந்துாரில் புதிதாக கிரீன் பீல்டு ஏர்போர்ட் அமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலவரம் என்ன; விமான நிலையம் அமைக்கப்படும் இடத்தில் வசித்து வரும் கிராம மக்கள், தங்கள் நிலங்களை அளிப்பதில் விருப்பமில்லை என்றும், அரசு தரும் இழப்பீட்டுத் தொகையில் திருப்தி இல்லை என்றும் கூறப்படுகிற தகவல் மத்திய அரசுக்கு தெரியுமா,'' என, கேள்வி எழுப்பி இருந்தார்.

ஒப்புதல்

இதற்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மோகுல் அளித்த பதில்:தமிழகத்தில் கிரீன் பீல்டு விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான 'டிட்கோ' எனப்படும், தமிழக தொழில் வளர்ச்சிக் கழகம் ஒரு இடத்தை தெரிவித்து இருந்தது.அந்நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்ட பரந்துார் என்ற இடத்தில் நிலம் தேர்வு செய்வதற்கான ஒப்புதலை, கடந்த 2024 ஆகஸ்டிலேயே மத்திய அரசு வழங்கி விட்டது.இதன்பின், அந்த கிரீன் பீல்டு விமான நிலைய திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை மற்றும் அதற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் 'டிட்கோ' நிறுவனத்திடம் இருந்துபெறப்பட்டு, அதற்கான ஒப்புதலையும், அதுகுறித்த கொள்கை ரீதியான ஒப்புதலையும், 2024 செப்டம்பரில் மத்திய அரசு வழங்கி விட்டது.நாடு முழுதும்கிரீன் பீல்டு ஏர்போர்ட்டுகள் அமைப்பது குறித்து, 2008ல் மத்திய அரசு கொள்கை ரீதியான ஒரு வரையறையை உருவாக்கியது. இதன்படி, கிரீன் பீல்டு ஏர்போர்ட் அமைக்கும் திட்டத்திற்கு தேவையான நிலம் கையகப்படுத்துதல், நிதி ஒதுக்கீடு மற்றும் அது சார்ந்த அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து, அந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டிய முழு பொறுப்பும் மாநில அரசையே சார்ந்தது.மேலும், அந்த விமான நிலையத்தை அமைக்கும் கட்டுமான நிறுவனத்துக்கும், இந்த பொறுப்பு உள்ளது. இந்த கொள்கை வரையறை, தமிழகத்தின் பரந்துார் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கும் பொருந்தும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விலை குறையுமா

''தமிழகத்தில் பெட்ரோல் விலை குறைப்புக்கு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டு வருகிறதா. மத்திய அரசு, பெட்ரோல் விலையை குறைப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அது சார்ந்த பயன்கள் மக்களுக்கு சென்றடையவில்லை என்பதில் எந்தளவுக்கு உண்மை,'' என, அ.தி.மு.க., - எம்பி., தம்பிதுரை ராஜ்யசபாவில் மற்றொரு கேள்வி எழுப்பியிருந்தார்.அதற்கு பதிலளித்த பெட்ரோலியத்துறை இணையமைச்சர் சுரேஷ்கோபி, ''பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 94 ரூபாய் 77 காசுகள் வரை குறைந்துள்ளது. மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்டவை எடுத்த நடவடிக்கைகளால் இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2021 நவம்பர் மற்றும் 2022 மே மாதங்களில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, ஒரு லிட்டருக்கு 13ரூபாய் வரை குறைந்துள்ளது. இதன் பலன், முற்றிலுமாக நுகர்வோருக்கு செல்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில மாநிலங்கள் 'வாட்' வரியை குறைத்து, மக்களுக்கு சற்று நிவாரணம் வழங்கியுள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் அதை செய்யவில்லை,'' என்றார்.-- நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

V வைகுண்டேஸ்வரன்
பிப் 04, 2025 17:04

இப்போ இங்கே பாஜக அடிமைகள் என்ன சொல்ல வருகிறீர்கள்? மாநில திமுக அரசு பரந்தூரை தேர்வு செய்தது தவறு என்கிறீர்களா?? தவறு என்றால், ஒன்றிய பாஜக அரசு ஒப்புதல் அளித்தது தவறு என்கிறீர்களா?


guna
பிப் 04, 2025 17:41

அய்யா பெரியவரே.. உங்க HR தான் IT கணக்கு பார்க்கும்...அதே போல மாநில அரசு தான் நிலம் கொடுக்க வேண்டும்...தலைப்பை நன்றாக படியும்மையா...


Raj S
பிப் 04, 2025 21:19

மக்கள் என்ன சொல்றாங்கன்னா... இதே போல கூட இருந்து எல்லாத்தையும் டங்ஸ்டன் விவகாரத்துலயும் செஞ்சுட்டு அப்பரும் மத்திய அரச எதிர்த்து நாடகம் போட்ட கோண வாயன் கும்பலை மக்கள் நம்ப தயாரில்லைனு சொல்றாங்க...


Kjp
பிப் 04, 2025 22:47

ஐயா வைகுண்டரே எதையும் சரியாக படித்து புரிந்து கருத்து போடுங்கள்.என்னத்தையாவது உளறாதீர்கள்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 04, 2025 16:58

கடந்த 2021 நவம்பர் மற்றும் 2022 மே மாதங்களில் எடுத்த நடவடிக்கையின் காரணமாக, ஒரு லிட்டருக்கு 13ரூபாய் வரை குறைந்துள்ளது./ இது எந்த நாட்டில்??


vivek
பிப் 04, 2025 17:51

அறிவற்ற கொத்தடிமை....இப்போ என்ன சொல்ல வருது


M Ramachandran
பிப் 04, 2025 16:16

எதற்கும் மத்திய றைய்ய குறைகூறும் ஸ்டாலின் அரசு இதற்கு என்ன பதில் கூறும். எல்லா வற்றிருக்கும் ஏமாற்று பொய் பித்தலாட்டம் இது தான்.


Saai Sundharamurthy AVK
பிப் 04, 2025 14:14

தமிழ்நாட்டிலிருந்து சென்ற 40 எம்.பிக்களும் டம்மி! நியூட்ரினோ, டங்ஸ்டன், மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட், தாமிர உற்பத்தி, குளச்சல் துறைமுகம், எட்டு வழி சாலை, நவோதயா பள்ளி, வேளாண் சட்டம், மும்மொழி திட்டம் என்கிற வரிசையில் இந்த விமான நிலையமும் நமக்கு வேண்டாமே! எதற்கு எய்ம்ஸ் ??? எதற்கு திராவிட கட்சிகள் ?? இவைகளும் நமக்கு வேண்டாமே !!!


nb
பிப் 04, 2025 12:04

சிலிண்டர்க்கு 100 ரூபா மானியம் எப்ப தருவாங்க


அப்பாவி
பிப் 04, 2025 09:45

ஆம். மெடல் குத்திக்குறது மட்டுமே மத்திய அரசின் வேலை. நிலத்தை அடிமாட்டு விலைக்கு தாரை வார்த்து இவிங்களுக்கு குடுத்துட்டா ஏர்போர்ட் கட்ட அதானி வருவாரு. அவருக்கு மத்திய அரசே கடன் குடுக்கும். சத்தியமா ஒத்துக்காதீங்க விவசாயிகளே. ஏர்போர்ட்டில் வரும் லாபத்தில் பங்கு கேளுங்கள். இல்லேன்னா பத்துவர்ய்சத்தில்.நீங்ஜ வாங்குற பணத்தின் மதிப்பு குறைஞ்சு ப்ளாட்ஃபாரத்துக்கு வந்துருவீங்க.


ஆரூர் ரங்
பிப் 04, 2025 10:55

விமான நிலைய செயல்பாட்டில் லாபத்தில் பங்கு OK. ஆனால் நஷ்டம் ஏற்பட்டாலும் அதே விவசாயிகள் ஏற்க வேண்டும். சரியா?


Muralidharan S
பிப் 04, 2025 13:06

நீ பாஜகாவிற்கு எதிர்ப்புnnu நினைச்சு உன்னோட கட்சிக்கு எதிரா மக்களை தூண்டிவிட்டு பேசிகிட்டு இருக்கே...


Kjp
பிப் 04, 2025 23:44

அப்பாவியாகவே இருக்கிறிரே.கோமாளித்தனமா எழுதுறிரே.உனக்கு இதெல்லாம் புரியாது இப்போ யாருக்கு சப்போட்டா பதிவு பண்ணியிருக்கிறீர்.


அன்பே சிவம்
பிப் 04, 2025 08:34

1). தமிழக மக்கள் ஒட்டு போட்டு தேர்வுச் செய்தது திமுக கூட்டணி கட்சிகளை. 2). ஆனால் எதற்கு எடுத்தாலும் ஹூபர் வாளவிடம் கேட்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம். 3). ஓன்று நிர்வாகம் பண்ண தெரியவில்லை என்று அர்த்தம். 4). இல்லையெனில் திமுகவிற்கு எஜமான் மத்திய அரசாங்கம் என்று அர்த்தம். 5). தம்பிதுரை தானும் ஏதாவது கேள்வி கேட்க வேண்டும் என்று கேட்டுள்ளார். 6)..பெட்ரோல் டீசல் விலையை எப்பொழுது GST உள்ளே கொன்டு வருவீர்கள் என்று கேட்டு இருந்தால் பரவாயில்லை


Ramamoorthy M
பிப் 04, 2025 08:06

மாநில மற்றும் மத்திய அரசுக்கும் ஏர்போர்ட் அமைப்பதில் என்ன தார்மீக பொறுப்பு என்று தெரியாத கூமுட்டைகள் தான் இந்த திராவிட திருட்டு அமைச்சர்கள். என்னவென்றே தெரியாமல் ஒன்றிய அரசு குன்றிய அரசு கதறி அழுது கூப்பாடு போடுவாங்க. ஊடகமும் வாயைத் திறக்காது.


முக்கிய வீடியோ