உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / பீஹார் தேர்தல் தோல்விக்கு காரணம் மூவர்; கண்டுபிடித்தது காங்கிரஸ்

பீஹார் தேர்தல் தோல்விக்கு காரணம் மூவர்; கண்டுபிடித்தது காங்கிரஸ்

நமது சிறப்பு நிருபர்

பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. தோல்விக்கான காரணங்களை ஆராய கட்சியின் செயற்குழு கூடி விவாதித்தது. வழக்கம் போல, 'தோல்விக்கு காரணம் ராகுல் அல்ல; ஓட்டு திருட்டுதான்' என, அவரை காப்பாற்ற காங்., தலைவர்கள் பேசினர்.'தோல்விக்கு காரணம் ராகுலின் ஆலோசகர்கள் தான்' என, சில காங்., தலைவர்கள் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்து விட்டனர். பல ஆண்டுகளுக்கு முன், இதே போல காங்., தோல்விக்கான காரணங்களை ஆராய, முன்னாள் அமைச்சர் ஏ.கே.அந்தோணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 'பெரும்பான்மை சமூகத்தினரை பகைத்துக் கொள்ளக்கூடாது' என, தன் அறிக்கையில் அந்தோணி சொல்லியிருந்தார். ஆனால், அந்த அறிக்கையை காங்., மேலிடம் கண்டுகொள்ளவே இல்லை. குப்பைத்தொட்டிக்கு போனது அந்தோணி அறிக்கை.'காங்கிரசுக்கு மக்களோடு தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மக்களின் பிரச்னைகளைப் பேசாமல், தேவையில்லாத விஷயங்களை பெரிதுபடுத்தி, இந்த படுதோல்வியைச் சந்தித்தது' என, சீனியர் காங்., தலைவர்கள் புலம்புகின்றனர். குறிப்பாக, 'மூன்று காங்., தலைவர்கள் தான் தோல்விக்கு காரணம்' என, கை காட்டுகின்றனர்.ஜெய்ராம் ரமேஷ், பவன் கெரா மற்றும் சுப்ரியா ஸ்ரீநாட்டே. காங்., சார்பாக, இவர்கள் மூவரும் தங்கள் இஷ்டத்திற்கு சமூக வலைதளங்களில் பல விஷயங்களை பதிவிட்டனர். 'உள்துறை அமைச்சர் வீட்டிற்குள் செல்லும்போது, செருப்பை வெளியே விட்டு வர சொல்கின்றனர்; இது அவமானம்' என, இந்த விஷயத்தை பெரிதுபடுத்தினார் பவன் கெரா.இதே போல ஜெய்ராம் ரமேஷும், சுப்ரியாவும் பீஹார் மக்களின் பிரச்னைகள் குறித்தும், நிதிஷ் குமார் அரசின் பலவீனங்களைப் பற்றியும் பேசாமல், வாக்காளர்களுக்கு சம்பந்தம் இல்லாதவற்றைப் பேசினர்.'இவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவர்கள் களத்தில் இறங்குவதும் இல்லை. இவர்கள் மூன்று பேரையும், கட்சி பதவிகளிலிருந்து நீக்கினால்தான் கட்சி உருப்படும்' என, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் சில காங்., தலைவர்கள் கூறினராம். பதிலுக்கு வெறுமனே தலையை ஆட்டினாராம் கார்கே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

kjpkh
நவ 26, 2025 19:23

காங்கிரஸ் தோற்பதற்கு ராகுலின் நடவடிக்கைகள் பேச்சு இவைகளே போதும். இனிமேல் காங்கிரஸ் தேடுவது மிகவும் கஷ்டம்.


Rathna
நவ 26, 2025 16:52

தலைக்கனம் வந்தால் தோல்வி நிச்சியம் என்பதை அரசியல் கட்சிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.


SIVA
நவ 26, 2025 14:51

சோனியா குடும்பம் காங்கிரஸில் இருக்கும் வரை பிஜேபி ஆட்சி தொடரும் , பிஜேபி இந்த உண்மையான பி டீம் இந்த இத்தாலிய குடும்பம் தான் ...


s vinayak
நவ 24, 2025 08:47

மூன்று காந்திகளும் இருக்குமோ ? என்று ஆர்வமாக செய்தியை படித்தேன்.


Sowdarpatti Rayarpadi Ramaswamy
நவ 23, 2025 20:13

லாலு கட்சி தலைவர்கள் தேர்தல் அறிவித்த பின்பும் சோனியா காந்தி வீட்டில் தவம் கிடந்தனர். மூன்று நாட்கள் காத்துகிடந்தும் அப்பாய்ன்ட்மென்ட் குடுக்கவில்லை. தேஜஸ்வி யாதவ்வும் இதில் அடக்கம் .உண்மையில் நொந்து போனார். இப்படி ஒரு கூட்டணி கட்சியை காங்கிரஸ் தலைமை நடத்தினால் கட்சி உருப்படுமா? கட்சி தலைவரை தொண்டர்கள் அணுக முடியாத கட்சி காங்கிரஸ். இந்த மூணு பேர் தான் காரணம் என்பதெல்லாம் யாரும் ஏற்கமாட்டார்கள். பீகார் தேர்தலை காங்கிரஸ் அணுகிய விதம் மோசம். அதிலும் ஆறு சீட் கிடைத்தது அதிர்ஷ்டம்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 23, 2025 18:47

சுப்ரியா ஸ்ரீநாட்டே அவமரியாதையாகப் பேசக்கூடியவர் .... ராகுலுடன் நெருக்கம் காட்டுபவர் ....


M Ramachandran
நவ 23, 2025 15:57

இங்கு ஓட்டு எதிர் பார்த்து செய்த் செய்கின்ற அதே தவறு அதன் வேலையை சத்தமல்லாமல் காட்டிச்சி.


M Ramachandran
நவ 23, 2025 15:53

ராகுலுவை பற்றி பேச பயம். முக்கியமாக தோல்விக்கு காரண கர்த்தா ராகுல். அவசிய மில்லாமல் அடிக்கடிய அயல் நாட்டிற்கு கம்பி நீட்டுவதும் மேடையில் மக்களுக்கு முன்னேற்றம் குறித்து பேச்சால் தேச விரோதமாக பேசினதால் நடு நிலமையான வாக்காளர்களின் ஒட்டு அம்போ அவரால் தான் முக்கிய தோல்வி. இதை சொல்ல அடிமை காங்கரஸ் புள்ளிகள் பயம்.


Barakat Ali
நவ 23, 2025 08:37

தோல்விக்கான காரணம் அனைவருக்குமே தெரியும் .......... இருந்தாலும் பொதுவெளியில் ஒப்புக்கொள்ளாமல் மறைப்பார்கள் ..... அதுவே மேலும் மேலும் தோற்கவும் காரணமாகிறது .........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை