உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஐ.எஸ்.,சுக்கு ஆள் சேர்க்க அரபிக் கல்லூரிகளில் பயிற்சி: என்.ஐ.ஏ.,

ஐ.எஸ்.,சுக்கு ஆள் சேர்க்க அரபிக் கல்லூரிகளில் பயிற்சி: என்.ஐ.ஏ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பாக, தமிழகத்தில், சென்னை, மதுரை, நெல்லை உட்பட, 21 இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஏராளமான டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=83szuqdd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல், கார் குண்டு வெடித்து சிதறியது. இதில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்ட, உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின், சம்பவ இடத்திலேயே பலியானார்.

குற்றப்பத்திரிகை

இந்த சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 14 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது, சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பை நடத்துவதற்கும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதற்கும், சென்னை மற்றும் கோவையில் உள்ள அரபிக் கல்லுாரிகளில் பயிற்சி அளிக்கப்பட்டதும், சதி திட்டம் தீட்டப்பட்டதும் தெரியவந்தது.அதனால், சென்னை, நெல்லை, கோவை, மதுரை உட்பட, 21 இடங்களில், நேற்று முன்தினம் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

பயிற்சி

இந்த சோதனை குறித்து, என்.ஐ.ஏ., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகம் முழுதும், 21 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ஆறு மடிக்கணினிகள், 25 மொபைல் போன்கள், 34 சிம்கார்டுகள், மூன்று ஹார்ட் டிஸ்க்குகள் என, ஏராளமான, 'டிஜிட்டல்' ஆவணங்கள் சிக்கின. இவை, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, ரகசியமாக ஆட்கள் சேர்க்க பயன்படுத்தப்பட்டவை. சென்னை மற்றும் கோவையில் உள்ள அரபிக் கல்லுாரிகளில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ரகசியமாக ஆட்களை சேர்க்க சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.அரபிக் பாடம் நடத்துவது போல, பயங்கரவாத அமைப்புக்கு இளைஞர்களை சேர்த்து, அவர்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பது மற்றும் அதை வெடிக்க வைப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், அரபிக் வகுப்பு நடத்துவது போலவும், சமூக வலைதளங்கள் வாயிலாக அரபிக் வகுப்பு நடத்துவது போலவும், பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே கைதாகியுள்ள, 14 பேரில், 10 பேர் கோவை அரபிக் கல்லுாரியில், பயங்கரவாத செயலுக்கான பயிற்சி எடுத்தது உறுதியாகி உள்ளது.கடந்த, 2019ல், இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில், 250 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூரத்தை நிகழ்த்திய, ஐ.எஸ்., பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமை தங்களின் குருவாக ஏற்று, கோவை கார் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் செயல்பட்டுள்ளனர். அரபிக் கல்லுாரிகளில் சஹ்ரான் ஹாசிம் பேச்சும் ஒலிபரப்பப்பட்டு உள்ளது.அத்துடன், தமிழகத்தில் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கி, பயங்கரவாத செயலில் ஈடுபடவும், வெடிகுண்டு தாக்குதல் நடத்தவும் சதி திட்டம் தீட்டி உள்ளனர்.

சதி திட்டம்

என்.ஐ.ஏ., சோதனையின் போது, சென்னை அரபிக் கல்லுாரியில் பயிற்சி பெற்ற மற்றும் வகுப்பு எடுத்த, ஜமீல் பாஷா உமாரி, இர்ஷாத், மவுலவி ஹூசைன் பைசி, அப்துல் ரஹ்மான் உமரி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.இவர்களில், அப்துல் ரஹ்மான் உமரியிடம், கோவை கார் குண்டு வெடிப்பு மற்றும் பயங்கரவாத செயலுக்கு சதி திட்டம் தீட்டியது தொடர்பாக ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Indhiyan
பிப் 13, 2024 00:22

ஆச்சர்யமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. "அமைதி" என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட மதத்தால் தான், உலகெங்கும் பயங்கரவாத குண்டுவெடிப்பு நிகழ்கிறது. இந்தியா மட்டுமல்ல பாகிஸ்தான், இரான், சிரியா என்று முஸ்லீம் நாட்டுக்குள்ளேயும் கூட அவர்களே குண்டு வெடித்து நூற்றுக்கணக்கான பொது ஜனங்கள் சாகிறார்கள். ஏன் இந்த வெறி ? ஒருவேளை அப்படி அவர்கள் செய்ய மதத்துள்ளேயே போதிக்கப்படுகிறதா?


தனா
பிப் 12, 2024 20:38

தமிழ்நாட்டு உளவுதுறை என்ன செய்கிறது?? அதையும் விசாரிக்க வேண்டும்!!


rsudarsan lic
பிப் 12, 2024 19:36

Leave them. Elections are coming Saviours will save them. ITS SHAME ON THE PART OF A COUNTRY WITH 130 CRORES THAT AN ACCIDENTAL BOMB BLAST IS GETTING PROBED, NOT OTHERWISE AND BY NOW THESE CRIMINAL COLLEGES SHOUHAVD BEEN SEALED.


ஆரூர் ரங்
பிப் 12, 2024 18:31

இந்த கும்பல் வகாபி. இஸ்லாத்தையும் கற்கால அரபி கலாச்சாரத்தையும் வைத்துக் குழப்பும் கும்பல். உலகமே அரபி கலாச்சாரத்துக்கு மாற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எக்காலத்திலும் அரபிகள் இந்திய முஸ்லிம்களை சமமாக நினைக்க மாட்டார்கள்????. பின் அரபி முட்டாக்கு கலாச்சாரம் நமக்கெதற்கு?


Nandakumar Naidu
பிப் 12, 2024 16:27

0 ....


Palanisamy Sekar
பிப் 12, 2024 16:21

வாழ்கின்ற வாழ்க்கையை குடும்பத்தோடு வாழ கற்றுக்கொடுக்காத மதம் தேவையற்றதுதான். இதற்கு ஆதரவு தெரிவிப்பதும் குற்றம்தான்.


NicoleThomson
பிப் 12, 2024 16:10

தமிழ்நாட்டில் வெளிநாட்டு மொழி எதற்கு என்று திராவிட கட்சிகள் எப்போது கேள்வி எழுப்பும்? ஒருவேளை அவர்களுக்கு இன்னமும் விடியவே இல்லையா? இல்லை ஜனநாயகம் குடும்ப நாயகம் ஆகிவிட்டதா?


Suppan
பிப் 12, 2024 17:46

ஒட்டுப்பிச்சை கொடுப்பவர்களை எப்படி எதிர்க்கமுடியும்


subramanian
பிப் 12, 2024 14:39

இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டியது தீவிர வாதம்


விடியல்
பிப் 12, 2024 11:40

வந்தேறி தமிழை வளர்க்க சுதேச அரபு மொழி கட்டாய பாடம்! என் ஐ ஏ தெரியாது போ!


BALOU
பிப் 12, 2024 09:25

அந்த அரபி கல்லூரியை மூடாமல் ஏன் விட்டு வைத்துள்ளது அரசாங்கம் பயமா


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி