உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / நேர்மைக்கு டிரான்ஸ்பர் பரிசு: பந்தாடப்படும் பெண் அதிகாரி

நேர்மைக்கு டிரான்ஸ்பர் பரிசு: பந்தாடப்படும் பெண் அதிகாரி

சிவகாசி: திருநெல்வேலி மாநகராட்சியில் ஊழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததால், சிவகாசிக்கு துாக்கி அடிக்கப்பட்ட பெண் அதிகாரி, அந்த மாநகராட்சியில் முறைகேடை கண்டறிந்து தனியார் நிறுவனத்திற்கு அபராதம் விதித்ததால், தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், நகராட்சி நிர்வாக கமிஷனர் உத்தரவின்படி, 2022 ஏப்ரல் முதல் துாய்மை பணிகளை, 'ராம் அண்டு கோ' என்ற நிறுவனம் செய்து வருகிறது. இதற்காகநிறுவனத்துக்கு ஆண்டுக்கு, 8.5 கோடி ரூபாயை, மாநகராட்சி வழங்குகிறது.இந்நிறுவனம் துாய்மைப்பணிக்கு, 270 பணியாளர்களை நியமித்து, குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும். ஆனால், போதிய பணியாளர்களை நியமிக்காமல், உபகரணங்களும் வழங்காததால் துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். அதன் எதிரொலியாக சுகாதார பிரிவு அதிகாரிகள், துாய்மை பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது, 270 பேருக்கு பதிலாக, 170 பேரை கொண்டு துாய்மை பணிகளை மேற்கொண்டது, பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ., -- பி.எப்., தொகை செலுத்தாதது, குப்பையை தரம் பிரிக்காதது, மாநகராட்சி வாகனங்களை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. மாநகராட்சி நகர் நல அலுவலர் சரோஜா, ஒப்பந்த நிறுவனத்துக்கு, 37 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாக துறைக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரை மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானதை அடுத்து, 2025 ஜனவரியில் ஒப்பந்த நிறுவனத்துக்கு, 37 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இதனால் நகர்நல அலுவலரை இடமாற்றம்செய்ய, ஆளுங்கட்சியினர் மற்றும் ஒப்பந்த நிறுவனம் சார்பில் மேலிடத்துக்கு நெருக்கடி அளிக்கப்பட்டது. இதனால் சரோஜாவை தென்காசி நகராட்சிக்கு மாற்றி, சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டார். தென்காசியில் நகர்நல அலுவலர் பணியிடம் இல்லாததால், காத்திருப்போர் பட்டியலில் சரோஜா வைக்கப்பட்டுள்ளார்.சரோஜா திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரிந்தபோது, ஒரே மாதத்தில், 55 லட்சம் ரூபாய்க்கு பினாயில் வாங்கியமுறைகேட்டை வெளிக்கொண்டு வந்ததால், அங்கிருந்து சிவகாசி மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார். தற்போது சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் தான் திருநெல்வேலியிலும் ஒப்பந்தம் எடுத்திருந்தது. அடுத்தடுத்து முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த பெண் அதிகாரி பந்தாடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

என்றும் இந்தியன்
ஏப் 04, 2025 16:48

இதோ என் எண்ணக் குவியல் அ முதல் அஃ வரை. அறிவிலி கைய்யில் அரசு இருந்தால் ஆணவம் தலைக்கேறி ஆட்சி செய்யும் இல்லமெங்கும் இருள் பரவும் ஈனமான இவர் தன் செயல் ஈசல் போல எண்திசை செல்லும் உள்ளவன் பலதும் இழப்பான் உருட்டல் புரட்டலினால் எல்லாம் அறிந்தும் எவரும் இதை ஒரு சொல் சொல்லர் ஐய்யம் ஒன்றல்ல ஒராயிரம் ஐந்தவித்தான் இவனே ஒருதிசை அல்ல பல் திசையிலும் ஒரு இடம் விடாமல் ஓலம் ஒன்றே பிரதானமாய் ஓங்கி ஒலிக்கும் ஔடதம் என்ன இதற்கு ஔவையின் மொழி கேள் நீயும் அஃதே சிறக்கும் அஃதிலார் வாழ்க்கை அழிவே அந்த தேசத்தின் ஒரே வழி


என்றும் இந்தியன்
ஏப் 04, 2025 16:42

ஊழல் ஒன்றே எனது சீரிய சித்தாந்தம் என்னும் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இருக்கும் வரை இது தான் நடக்கும்...


M.Chellappandi M.Chellam
ஏப் 04, 2025 08:14

ஊழல் ஒழிய ஒரு அதிகாரி மட்டும் முடியாது. ஊழல் செய்பவர் சஸ்பென்ட் செய்ய கூடாது டிஸ்மிஸ் செய்யவேண்டும். அப்போது தான் பயம் இருக்கும். கடும் தண்டனை தாண் தீர்வு


Fernando Fernando
ஏப் 02, 2025 10:59

கருணாநிதியும் அவரது குடும்பம். தி.மு.க வினரும் மிகப்பெரிய ஊழல்வாதிகள்.மோசடிக்கும்பல்கள்.இவர்களை மீண்டும்மீண்டும் புரியாணி சோத்துக்கும் குவாட்டருக்கும் 200/=வுக்கும் மக்கள் ஓட்டுப்போடுகிறார்களே.இவர்கள் முட்டாளுகளா?கருணாநிதி சர்காரியா கொமிசனுக்கு சொன்ன வார்த்தைகள் ஞாபகம் வருகிறது. கோடிக்கணக்கான பெறுமதியான சக்கரை என்னாச்சு என்ற கேள்விக்கு சக்கரை முளுவதையும் எறும்பு தின்றுவிட்டது.சாக்குகள் என்னாச்சு என்றதற்கு கறையான் அரித்துவிட்டது என்றார்.ஆகவே எறும்பும் கறையானும் பெருகி தி.மு.க.வில் சேர்ந்து இன்னும் அழித்துக் கொண்டிருக்கிறதுதான் உண்மை நிலபரம்..


rasaa
ஏப் 02, 2025 10:01

நேர்மைக்கு மாடல் அரசு கொடுக்கும் மதிப்பும், மரியாதையும் உலகம் அறிந்தது.


Jebaraj S
ஏப் 01, 2025 18:53

இதனால் அரசின் மேல் உள்ள நம்பிக்கை குறைய வாய்ப்பு. சீ எம் அவர்களே சற்று கவனிக்கவும்


JaiYeshuah
மார் 31, 2025 21:50

இந்திய அரசுக்காக உண்மையாக உழைக்கும் இந்த நேர்மையான பெண்மணிக்கு ஆதரவாக தேசபக்தர்கள், தேச பக்த இயக்கங்கள் குரல் கொடுக்காதது ஏன்.?


Kalyanasundaram R
மார் 31, 2025 16:15

Rarely few officers are working without corruption. Unfortunately we failed to protect them. Instead we punish them. Thus all became silent. IAS officers are meant for corrupt free government. But their hands are tied. Poor governance.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 31, 2025 13:46

எதுக்கும் இந்த அம்மணி நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது


NIyayanidhi
மார் 31, 2025 06:57

இதுதாண்டா திராவிட மாடல்.


சமீபத்திய செய்தி