உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கூட்டணிக்காக மக்கள் பிரச்னையை விடமாட்டோம்: பாலகிருஷ்ணன் கருத்து

கூட்டணிக்காக மக்கள் பிரச்னையை விடமாட்டோம்: பாலகிருஷ்ணன் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலுார்: ''மக்களை பாதிக்கும் பிரச்னைகளில், தமிழக அரசை எதிர்த்து போராடுவோம்,'' என, மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறினார். கடலுாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை படுகொலை செய்வது தொடர்கிறது. முந்தைய நிலைமையை காட்டிலும் இப்போது அதிகரித்துள்ளது. ஆணவ கொலையை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வந்து, குற்றம் இழைப்போருக்கு கடுமையான தண்டனை வழங்கினால் மட்டுமே, இந்த மாதிரியான குற்றங்கள் குறையும். அதுவரை, ஆணவ கொலைகள் நடந்து கொண்டு தான் இருக்கும். எது எதுக்கோ திட்டங்களை கொண்டு வரும் தமிழக அரசு, ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வராமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை.. சில காலம் முன், பா.ஜ.,வை மிகக் கடுமையாக எதிர்த்து வந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மீண்டும் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்த பின், அக்கட்சி எதைச் செய்தாலும், அதற்கு ஒத்து ஊதும் நிலைப்பாட்டுடன் செயல்படுகிறார். 'கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் முகவரியை இழந்து விட்டன; தி.மு.க.,வின் அடிமை கட்சிகளாகி விட்டன' என்றெல்லாம் விமர்சிக்கிறார். உண்மையில், பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்ததன் வாயிலாக, தன் சொந்த முகவரியை இழந்திருப்பது பழனி சாமியும், அ.தி.மு.க.,வும் தான். பா.ஜ.,வை வீழ்த்தும் கூட்டணியில் தான் நாங்கள் இடம் பெற்றிருக்கிறோம். அதற்காக, தி.மு.க., அரசு, மக்களை பாதிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், துணிச்சலோடு அரசை எதிர்த்து போராடுவோம். அந்த நிலைப்பாட்டில் இருந்து என்றைக்கும் மாற மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Haja Kuthubdeen
ஆக 12, 2025 19:06

கடந்த நாண்கு ஆண்டுகளாக பலவிதமான பிரட்சினைகள்.எதிலும் கலந்து கொள்ளாத கம்யூனிஸ்ட் இப்ப எதுக்கு தினதினம் அறிக்கை அரசியல் செய்கிறது!!!!


Sun
ஆக 12, 2025 09:06

இவரது கட்சியைச் சேர்ந்த பேராசிரியர்.அருணன் தொலைக்காட்சி விவாதங்களில் அடிக்கடி சொல்லும் வார்த்தை ஐயா உங்க லட்சணம்தான் தெரியுமே? என்பதாகும். அதே வார்த்தை தான் பாலகிருஷ்ணனுக்கும் ஐயா நீங்க நான்கு வருசமா போராடிய லட்சணம்தான் எங்களுக்கு தெரியுமே?


சாமானியன்
ஆக 12, 2025 07:05

நீங்கள் சாம்சங் பிரச்னையில் அரசுக்கு முண்டியடித்து ஆதரவு அளித்தது உலகறியும். ஏன் மென்று முழுங்கறீங்க. நிசர்சனம் பற்றி தைரியமாக பேச கூட்டணி தர்மம் தடை இல்லை சகோதரரே! பத்துமணி நேரத்திற்கு வேலை உள்ளதா அங்கே ?எல்லாமே ரோபோட் மயம்.


A viswanathan
ஆக 12, 2025 07:00

4 1/2 வருடம் எங்கிருந்தார்கள்.இப்போது தான் தெரிகிறதா மக்கள் பிரச்சனை.


எவர்கிங்
ஆக 12, 2025 06:25

கொடுத்த பணத்தை திருப்பி கேட்கமாடோம் எனுததிரரவாதம் கொடுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை