உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / ஹிந்து மதத்தை இழிவுபடுத்தியோர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? ஹிந்து முன்னணி கேள்வி

ஹிந்து மதத்தை இழிவுபடுத்தியோர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? ஹிந்து முன்னணி கேள்வி

திருப்பூர் : ''சனாதன ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்திய கமல் மீது நடவடிக்கை எடுக்காமல், அதைக் கண்டித்த நடிகர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க முனைவதா?'' என்று ஹிந்து முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:

'அகரம் அறக்கட்டளை' விழாவில் பேசிய எம்.பி., கமல், திட்டமிட்ட ரீதியில் சனாதன ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்தியுள்ளார். மத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசுவோர் மீது போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும் என கோர்ட் தெரிவித்துள்ளது. கோடிக்கணக்கான ஹிந்துக்களை புண்படுத்திய கமல் மீது போலீசார் ஏன் வழக்கு பதியவில்லை? ஆனால், கமல் பேச்சை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து கருத்து கூறிய நடிகர் ரவிச்சந்திரனை மிரட்டும் வகையில், அவர் வன்முறையைத் துாண்டும் வகையில் பேசுவதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. கமல் மீது நடவடிக்கை எடுக்காமல், ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுப்பது சரியில்லை. ஏற்கனவே, கமல் மீது பல முறை ஹிந்து முன்னணி புகார் அளித்துள்ளது. கடவுள் ராமரை வைரமுத்து இழிவுபடுத்தியுள்ளார். வரலட்சுமி நோன்பு குறித்து சினிமா இயக்குனர் கரு.பழனியப்பன் இழிவாகப் பேசியுள்ளார். கடவுள் அய்யப்பன் பற்றி இழிவாகப் பாடிய இசைவாணி, ஹிந்து மத அடையாளங்களை கொச்சைப்படுத்திய பொன்முடி என பட்டியல் நீளுகிறது. ஹிந்து மதத்தை இழிவுபடுத்திய இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், கமலை கண்டித்த ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை என்ற ஹிந்து விரோத மனப்பான்மையை தி.மு.க., அரசு கைவிட வேண்டும். ரவிச்சந்திரனுக்கு ஹிந்து முன்னணி துணை நிற்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V.Mohan
ஆக 12, 2025 16:58

பெரிய அறிவுக் கொழுந்து, சின்ன அறிவுக் கொழுந்து தற்பெருமைக்காக நடத்தும் கூட்டத்தில் அது விழா அல்ல ரொம்... ப படித்தவர் புத்தி சொல்கிற மாதிரி விஷம் வீசுகிறார். நன்கு படித்தால் நல்ல எதிர்காலம் அமையும், வாழ்வு செழிக்கும். நாடு சிறக்கும் என்பது போல சொல்வதை விட்டு, படித்தால் தான் சாதிகொடுமை ஒழிக்க முடியும்.....சரி... இந்த. பாயிண்ட் வரை சரி. ஏனய்யா .டிவிஸ்ட அடிக்கற, ...... """படித்தால் தான்... சனாதனத்தை எதிர்த்து ஒழிக்க முடியும்""". இந்த ஸ்டேட்மெண்ட் எவ்வளவு வெறுப்புத்தனம் ???. திரு. கமல் போன்ற நடிகர் மக்களின் அன்பை பெற்றவர் இது மாதிரி மூன்றாந்தர கட்சி பேச்சாளர்கள் போல பொறுப்பற்ற முறையில் சனாதன தர்மத்தை பின்பற்றும் கோடானுகோடி மக்களின் நம்பிக்கையை அவமதிப்பது கேவலம். தன் மனம் போல வாழ்ந்து பெற்ற தாயையே வெறுப்பேற்றியதாக வாக்குமூலம் கொடுத்த கமலகாசன் , எல்லா தரப்பு மக்களின் நலனுக்காக ராஜ்ய சபா உறுப்பினர் ஆனதாக தரும் தன்னிலை விளக்கத்தில் பொது ஜனங்கள் யாருக்கும் சுத்தமாக நம்பிக்கை இல்லை.


Balaji Radhakrishnan
ஆக 12, 2025 11:21

Why not take action against anti-hindu mafia? In Tamilnadu, most dravidians against the Hindu religion, their speeches are very ridiculous.


V RAMASWAMY
ஆக 12, 2025 09:02

As per Indian Constitution, none can abuse any other individual or group or religion. Yet, when religions other than Hinduism are criticized, there is a furore, agitations and what not from every corner including Ruling Govt. Unfortunately this is not the case when Hinduism is critised and abused by even ruling party members. This attitude should change and if need be SC should take it up on its own to punish culprits.


சாமானியன்
ஆக 12, 2025 07:00

கமல் பேசுவது பலசமயங்களில் அவருக்கே புரியாது. மதசார்பின்மையை தவறாக புரிந்து கொண்டவர்களில் அவரும் ஒருவர். ராஜ்யசபா மெம்பர் ஆகி விட்டார். இளையராஜா அவருக்கு நல்ல புத்தி சொன்னால் நல்லது.


Mani . V
ஆக 12, 2025 06:33

அதுதான் திமுக வுடன், பாஜக புரிந்துணர்வுக் கூட்டணி வைத்துள்ளதே.


sridhar
ஆக 12, 2025 06:27

அப்படியே கொஞ்சம் கோவில்களில் கூட்டம் போடும் ஹிந்துக்களுக்கும் புத்திமதி சொல்லுங்க .


Anantharaman
ஆக 12, 2025 05:52

இந்த வெறியர்களை வெறுத்துத் தள்ளுவது மட்டுமே பிரச்னைக்கு முடிவாகும். எல்லாரும் கிறிப்டோ கிறிஸ்துவர், முஸ்லிம்களும் ஆவர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை