உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / கரூர் துயரத்தில் காட்டும் அவசரத்தை கிட்னி முறைகேட்டில் காட்டாதது ஏன்?

கரூர் துயரத்தில் காட்டும் அவசரத்தை கிட்னி முறைகேட்டில் காட்டாதது ஏன்?

சென்னை : 'உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கிட்னி முறைகேடு வழக்கில் விசாரணையை துவங்காதது ஏன்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு சொந்தமான மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில், ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடந்துள்ளதாக, தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் உள்ள ஏழை விசைத்தறி தொழிலாளர்கள். சிறுநீரக மாற்று மோசடி வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'புரோக்கர்கள் வாயிலாக நடந்த கிட்னி முறைகேடு கொடூரமான செயல்' என கண்டித்துள்ளது. மேலும், கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதோடு, பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க உத்தரவிட்டது. ஆனால், ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு இன்னும் விசாரணையை துவங்கவில்லை. அதே நேரத்தில், கரூர் துயரம் தொடர்பான நீதிமன்ற உத்தரவு அரசு கைக்கு வரும் முன்பே, சில மணி நேரங்களில், ஐ.ஜி., தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டு விட்டது. இரண்டு வழக்குகளிலும், உயர் நீதிமன்ற உத்தரவுகள் ஒன்றுபோல் இருக்கின்றன. ஆனால், தங்களை சேர்ந்தவர்களின் வழக்கு என்றால், விசாரணையை தாமதப்படுத்தி, கிடப்பில் போடுவதுடன், வேண்டாதவர்கள் மீதான விசாரணை என்றால், துரித வேகத்திலும் தி.மு.க., அரசு செயல்படுகிறது. தி.மு.க.,வின் இந்த இரட்டை வேடம், தமிழக மக்களிடம் அம்பலமாகி விட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

T.sthivinayagam
அக் 07, 2025 21:29

கரூர் சம்பவம் தென்னாடுயுடைய சிவன் தந்த எச்சரிக்கை புரியாமல் பேசும் முன்னாள் முதல்வர்.


முருகன்
அக் 07, 2025 18:33

கரூர் துயரத்தில் காட்டிய ஆர்வத்தை கிட்னி திருட்டில் நீங்கள் ஏன் கட்டவில்லை ஏன் என்றால் உங்களுக்கு விஜய் உடன் கூட்டணி வைக்க வேண்டும் மக்களை பற்றி அக்கறை சிறிதும் கிடையாது உங்களுக்கு


Sun
அக் 07, 2025 18:03

கரூர் சம்பவம் திடீரென நடந்த ஒரு பெரிய விபத்து, பேரிடர் போன்றது. கிட்னி சம்பவம் திட்டமிட்ட ஒரு முறைகேடு. திடீர் பெரிய விபத்து,பேரிடருக்கு எல்லோரும் உடனே ஓடனும், ஓடுவார்கள். முறைகேட்டிற்கு ஆதாரங்கள்,ஆவணங்கள் எல்லாம் திரட்டித்தான் மேல் கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அண்ணனுக்கும் இது நன்றாகவே தெரியும்.


நிவேதா
அக் 07, 2025 16:15

திமுக மட்டுமல்ல, விஜயை விட நீங்களும் பாஜகவும் தான் அவசரத்தை காட்டுகிறீர்கள். விஜய் காறித்துப்பினாலும், தொடச்சிக்கிட்டே , விஜய்க்காக அந்த கட்சி உச்சநீதிமன்றம் போயிருக்கிறதே.


T.sthivinayagam
அக் 07, 2025 14:13

இங்கும் புது கண்டு பிடிப்பா.


Santhakumar Srinivasalu
அக் 07, 2025 12:42

அதிமுக சார்பில் போன ஆட்சியில் அடித்ததை வைத்து வெட்டி அறிக்கை இல்லாமல் ஏதாவது நிவாரணம் கொடுக்கலாம்!


Santhakumar Srinivasalu
அக் 07, 2025 12:38

இன்னைக்கு எப்படியோ ஒரு பழைய செய்தி வெளியிட்டு இடம் பிடித்து விட்டார்! துணுக்கு கொடுக்கும் இவருடைய பிஏ வுக்கு தனியாக ஒரு பரிசு கொடுக்கலாம்!


Indian
அக் 07, 2025 12:35

கரூர் பாதிக்க பட்ட மக்களுக்கு அ தி மு கா ஒரு ரூபா கூட கொடுக்க வில்லை ??


Ramesh Sargam
அக் 07, 2025 09:23

கரூர் துயரத்தில் காட்டும் அவசரத்தை, அக்கறையை கள்வராயன் மலை கள்ளச்சாராய சாவில் ஏன் காட்டவில்லை ...


SENTHILKUMAR
அக் 07, 2025 07:52

அப்போ கிட்னி போனா பரவாயில்லைங்களா ப்ரோ ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை