உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / லஞ்சம் கேட்ட அலுவலருக்கு பணம் கொடுக்க பிச்சையெடுத்து போராட்டம் நடத்திய பெண்

லஞ்சம் கேட்ட அலுவலருக்கு பணம் கொடுக்க பிச்சையெடுத்து போராட்டம் நடத்திய பெண்

பெரம்பலுார்: ரேஷன் கார்டு பெற்றுத்தர லஞ்சம் கேட்ட அலுவலருக்கு, லஞ்சப்பணம் கொடுக்க, பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தினார்.பெரம்பலுார் மாவட்டம், அகரம்சீகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபிரதாப் மனைவி முத்தமிழ் செல்வி, 35, இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், முத்தமிழ் செல்வி தன் குழந்தைகளோடு மாமியார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவர், கூட்டு குடும்பமாக உள்ள ரேஷன் கார்டில் இருக்கும், தங்களது பெயரினை நீக்கி, தனி குடும்பமாக புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் கோரி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தார். இவரது, விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது.முறையான காரணமின்றி, விண்ணப்பம் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. முத்தமிழ்செல்வி அதே ஊரில் உள்ள ரேஷன் கடை சேல்ஸ்மேனிடம் இதுகுறித்து, மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர், பணம் எடுத்துக்கொண்டு நேரில் வர கூறியுள்ளார்.இது குறித்து, கலெக்டர், டி.எஸ்.ஓ., ஆகியோருக்கு அவர் பதிவு தபால் புகார் அனுப்பினார். நடவடிக்கை இல்லை. விரக்தியடைந்த முத்தமிழ்செல்வி நேற்று காலை தனது உறவினர்களுடன் பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் வந்தார். ரேஷன் கார்டு பெறுவதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதால், அதற்கு பணம் கொடுக்க வசதி இல்லை என்று கூறி, பெரம்பலுார் கலெக்டர் அலுவலகத்தில் கையில் தட்டேந்தி பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டவாறு பிச்சை எடுத்த அவர், கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று தரை தளத்தில் அமர்ந்து தர்ணா செய்தார். அதிகாரிகள், முத்துலட்சுமியிடம் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, அவர் அங்கிருந்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Chandrasekaran Balasubramaniam
மார் 27, 2025 11:42

இவர் கணவர் வெளிநாட்டில் வேலை என்பதை தெரிந்து கொண்டு இவனுக பணம் கறக்க பார்க்கிறானுக. அந்த பொண்ணு உஷாராகிட்டது. பேஷ்.


Bala
மார் 26, 2025 12:26

வீரமிக்க் இந்த பெண்ணிர்க்கு என் மனமார்ந்த நன்றி.


Bhaskaran
மார் 26, 2025 09:04

மானமில்லா அரசு ஊழியர்கள்.லஞ்சப் பிசாசுகள்


PARTHASARATHI J S
மார் 25, 2025 18:52

மனம் வலிக்கிறது தாயே.


Ramesh Sargam
மார் 25, 2025 18:41

இதுவும் எதிர்க்கட்சியினர் நடத்தும் நாடகம், புரளி என்று முதல்வர் வாய்கூசாமல் பொய் கூறி மறுப்பார்.


Siva Balan
மார் 25, 2025 10:54

அரசுதான் 1000ரூபாய் மாதாமாதம் பிச்சையிடுகிறதே. அந்த பணத்தில் அனைவரும் சந்தோஷமாகதானே வாழ்கிறார்கள்.


அப்பாவி
மார் 25, 2025 09:36

என்ன புண்ணாக்கு பேச்சுவார்த்தை? உடனடியா அவர் கேட்டதை கட்டணமின்றி செய்து குடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய வாணாமா ?


Padmasridharan
மார் 25, 2025 06:12

Well Done. பாரத தமிழ்நாட்டுப் பெண்ணின் அவலநிலைகளில் ஒன்றாகும் இது. பெண்தானே லஞ்சப் பணம் கொடுத்து வேலை நடத்திக் கொள்வாளென்று நினைக்கும் அரசு அதிகாரிகள். இதேதான் கடற்கரை வரும் பெண்களிடமும் நடக்கிறது. வண்டி ஓட்டி வரும் பெண்களிடமும் நடக்கிறது. ஆனால் இலவச பயணசீட்டு மட்டும் கொடுக்கிறார்கள். இந்த அரசு அதிகாரிகளெல்லாம் பிச்சை எடுத்து ஆளும் கட்சியை அவமதிக்கும் நபர்கள். இந்தியனும் தேவையில்லை, முதல்வனும் தேவை இல்லை. இந்த பெண்மணி போல் ஒரு பராசக்தி போதும்.


RAJAVEL P
மார் 25, 2025 18:54

Similar type problem I have faced in T. Kallupatti Union Office. I have complaint through madurai collector office but no use. Finally I have given Rs. 10000 to officer


முக்கிய வீடியோ