மேலும் செய்திகள்
இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும்; அமித்ஷா உறுதி
1 hour(s) ago | 4
பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் கோ பூஜை நேற்று நடந்தது.பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் தேர்த் திரு விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், வீதியுலாவும் நடந்து வருகிறது. திருவிழாவின் 8ம் நாளான நேற்று கோ பூஜை நடந்தது. முன்னதாக காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை , கலச பூஜை, சுவாமிக்கு மகாதீபாராதனை நடந்தது. இதைதொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட 108 பசுக்களுக்கு கோ பூஜை நடந்தது. பசுக்களுக்கு பழங்கள், அரிசி, வெள்ளம், அகத்திக்கீரை அளிக்கப்பட்டது. பூஜையில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு, தியாகராஜன் எம்.எல்.ஏ., உபயதாரர்கள் பாகூர் மேற்கு பகுதி கிராம பஞ்சாயத்து தலைவர் ராமு, ராஜாராமு, அலமேலு ஜானகி, சேதுராமன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தனி அதிகாரி தாசில்தார் பிரபாகரன், நிர்வாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கர நாராயணன், பாபு ஆகியோர் செய்திருந்தனர்.
1 hour(s) ago | 4