உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விவசாயியை கொல்ல முயற்சி ஆரோவில் அருகே 5 பேர் கைது

விவசாயியை கொல்ல முயற்சி ஆரோவில் அருகே 5 பேர் கைது

வானுார்: முந்திரி தோப்பில் படுத்திருந்த விவசாயியை வெட்டி கொலை செய்ய முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி கருவடிக்குப்பம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மணவாளன்,50; இவர் நேற்று முன்தினம் இரவு, ஆரோவில் அருகே இடையன்சாவடி சாலையில் உள்ள தனக்கு சொந்தமான முந்திரி தோப்பில் படுத்திருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல் மணவாளனை சராமரியாக வெட்டி விட்டு தப்பி சென்றது. படுகாயமடைந்த மணவாளனை ஆரோவில் போலீசார் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலும், இதுகுறித்து கொலை முயற்சி பிரிவில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.அதில், கருவடிக்குப்பத்தை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவரின் தந்தை நடராஜன்,80; கடந்த 7ம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்வது தொடர்பாக நடராஜனின் முதல் மனைவியின் மகன்களுக்கும், இரண்டாம் மனைவியின் மகன்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.அதில், முதல் மனைவியின் மகன் மோகனசுந்தரமும், இரண்டாவது மனைவியின் கடைசி மகன் நந்தா ஆகியோரும் சேர்ந்து கொல்லி வைப்பது என ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இறுதிச் சடங்கில் ஒருவர் மட்டுமே கொல்லி வைக்க வேண்டும் கூறி, மோகனசுந்தரத்தை கொள்ளி வைக்க செய்து இறுதி சடங்கை முடித்துள்ளனர்.ஊர் பஞ்சாயத்தில் பேசியபடி தந்தைக்கு தனது தம்பியை கொல்லி வைக்க விடாததால் ஆத்திரமடைந்த நந்தாவின் அண்ணன் உதயராஜ், பஞ்சாயத்து பேசிய மணவாளனை பழிவாங்க திட்டமிட்டார்.அதன்படி, நேற்று முன்தினம் இரவு உதயராஜ்,31; மற்றும் அவரது நண்பர்களான புதுச்சேரி லாஸ்பேட்டை கெங்கையம்மன் கோவில் தெரு ஏழுமலை மகன் அருண்குமார்,19; நாவற்குளம் ஒத்தவாடை வீதி பாலு மகன் சிங்காரவேல், 35; காந்தி வீதி வெங்கடேசன் மகன் சண்முகம், 21; கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோவில் தெரு மலையாளத்தான் மகன் கார்த்தி (எ) பாபா கார்த்திக், 30; ஆகியோர் சேர்ந்து, முந்திரி தோப்பில் படுத்திருந்த மணவாளனை கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது.அதன்பேரில் உதயராஜ் உள்ளிட்ட 5 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 பைக் மற்றும் 2 வீச்சரிவாள்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை